அபிராமபுரத்தில் வசித்து வரும் இந்த குடும்பத்திற்கு ஊரடங்கு காலத்தில் அவர்கள் வளர்த்து வந்த செல்லக் கிளிகள் தோழர்களாக இருந்தது.

அபிராமபுரம் சுந்தரராஜன் தெருவில் வசித்து வரும் சிறுமி சாரதா இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டு செல்ல பிராணிகளான, நாய் குட்டி, பூனை மற்றும் கிளி போன்றவற்றில் ஏதாவதொன்றை வீட்டில் வளர்க்கலாம் என்று தன்னுடைய குடும்பத்தாரிடம் தெரிவித்துள்ளார். ஆனால் அவர் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் பிராணிகளை வளர்ப்பதற்கு போதிய இட வசதிகள் இல்லை, ஆனாலும் இந்த கருத்தை ஏற்ற அவரது குடும்பத்தார் ஏற்று கடைசியாக வட சென்னையிலிருந்து ஒரு கிளியை வளர்ப்பதற்காக வாங்கி வந்துள்ளனர். ஆனால் அந்த கிளி வீட்டில் வளர்ப்பதற்கு போதுமானதாக இல்லை. எனவே அதை திரும்ப கொடுத்துவிட்டு மீண்டும் வேறொரு இடத்திலிருந்து இரு கிளிகளை வாங்கி வந்து வளர்த்து வருகின்றனர். தற்போது அந்த இரு கிளிகளும் சாரதா வீட்டில் வளர்ந்து வருகிறது. மேலும் இந்த இரு கிளிகளும் தற்போது தங்கள் குடும்பத்தில் ஒருவராக வளர்ந்து வருவதாக சாரதா குடும்பத்தார் தெரிவிக்கின்றனர்.

செய்தி மற்றும் புகைப்படம் : எஸ். பிரபு

admin

Recent Posts

ஆர்.ஏ. புரத்தில் உள்ள ஆந்திர மகிளா சபாவுக்குச் சொந்தமான இடத்தில் 300 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை அமையவுள்ளது.

ஆர்.ஏ. புரத்தில் ஆந்திர மகிளா சபாவுக்குச் சொந்தமான பரந்த நிலப்பகுதியின் பெரும்பகுதி சமப்படுத்தப்பட்டு, புதிய மருத்துவமனை ஒன்றை அமைப்பதற்கான பணிகள்…

2 months ago

மயிலாப்பூர் காவல் நிலையத்தில் வாராந்திர குறைகேட்புக் கூட்டம் தொடங்கியது

E1 மயிலாப்பூர் காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமையன்று வாராந்திர குறைகேட்புக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. காவல் உதவி ஆய்வாளர் முத்துகிருஷ்ணன் மற்றும்…

2 months ago

மெரினாவில் மற்றொரு ‘ப்ளூ ஃபிளாக்’ (Blue Flag) பகுதி – கலங்கரை விளக்கத்திற்கு அருகில்

மெரினா கடற்கரையில் மற்றொரு 'ப்ளூ ஃபிளாக்' பகுதிக்கான இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இது கலங்கரை விளக்கத்திற்கு அருகிலும், காமராஜர்…

3 months ago

மயிலாப்பூர் எம்.எல்.ஏ-வை மயிலாப்பூர் மக்கள் தொடர்புகொள்ள தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி அறிமுகம்.

மயிலாப்பூர் எம்.எல்.ஏ.-வும் மாநில அமைச்சருமான பி. வெங்கடரமணன், ஆழ்வார்பேட்டையில் தனது அலுவலகத்தைத் திறந்ததிலிருந்து, அப்பகுதி மக்கள், சமூகத் தலைவர்கள் மற்றும்…

3 months ago

சாய்பாபா கோயில் அருகே ECR-லிருந்து கொண்டுவரப்பட்ட நுங்குகள் விற்பனை

இந்த கடும் கோடைக்காலத்தில் சுவையான நுங்குகளை வாங்கிச் சுவையுங்கள். சாய்பாபா கோயில் அருகிலுள்ள வெங்கடேச அக்ரஹாரம் தெருவில், ரவி மற்றும்…

3 months ago

இராணி மேரி கல்லூரியில் சேர்க்கை இன்னும் நடைபெறுகிறது.

இராணி மேரி கல்லூரியில் சேர விரும்புவோர் இப்போது விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதியைத் தவறவிட்டவர்கள் www.tngasa.in என்ற இணையதளத்தின்…

3 months ago