அபிராமபுரத்தில் வசித்து வரும் இந்த குடும்பத்திற்கு ஊரடங்கு காலத்தில் அவர்கள் வளர்த்து வந்த செல்லக் கிளிகள் தோழர்களாக இருந்தது.

அபிராமபுரம் சுந்தரராஜன் தெருவில் வசித்து வரும் சிறுமி சாரதா இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டு செல்ல பிராணிகளான, நாய் குட்டி, பூனை மற்றும் கிளி போன்றவற்றில் ஏதாவதொன்றை வீட்டில் வளர்க்கலாம் என்று தன்னுடைய குடும்பத்தாரிடம் தெரிவித்துள்ளார். ஆனால் அவர் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் பிராணிகளை வளர்ப்பதற்கு போதிய இட வசதிகள் இல்லை, ஆனாலும் இந்த கருத்தை ஏற்ற அவரது குடும்பத்தார் ஏற்று கடைசியாக வட சென்னையிலிருந்து ஒரு கிளியை வளர்ப்பதற்காக வாங்கி வந்துள்ளனர். ஆனால் அந்த கிளி வீட்டில் வளர்ப்பதற்கு போதுமானதாக இல்லை. எனவே அதை திரும்ப கொடுத்துவிட்டு மீண்டும் வேறொரு இடத்திலிருந்து இரு கிளிகளை வாங்கி வந்து வளர்த்து வருகின்றனர். தற்போது அந்த இரு கிளிகளும் சாரதா வீட்டில் வளர்ந்து வருகிறது. மேலும் இந்த இரு கிளிகளும் தற்போது தங்கள் குடும்பத்தில் ஒருவராக வளர்ந்து வருவதாக சாரதா குடும்பத்தார் தெரிவிக்கின்றனர்.

செய்தி மற்றும் புகைப்படம் : எஸ். பிரபு

admin

Recent Posts

சாய்பாபா கோயில் அருகே ECR-லிருந்து கொண்டுவரப்பட்ட நுங்குகள் விற்பனை

இந்த கடும் கோடைக்காலத்தில் சுவையான நுங்குகளை வாங்கிச் சுவையுங்கள். சாய்பாபா கோயில் அருகிலுள்ள வெங்கடேச அக்ரஹாரம் தெருவில், ரவி மற்றும்…

2 weeks ago

இராணி மேரி கல்லூரியில் சேர்க்கை இன்னும் நடைபெறுகிறது.

இராணி மேரி கல்லூரியில் சேர விரும்புவோர் இப்போது விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதியைத் தவறவிட்டவர்கள் www.tngasa.in என்ற இணையதளத்தின்…

2 weeks ago

கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசித் திட்டம் நீட்டிக்கப்பட்டுள்ளது – இத்தகவலைப் பகிரவும்

மந்தைவெளி, ஆர்.கே. நகரில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசித் திட்டத்திற்கான சேவையை மேலும்…

2 weeks ago

முன்னாள் மயிலாப்பூர் எம்.எல்.ஏ. TVK-வில் இணைந்தார்

மயிலாப்பூர் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ. ஆர். நடராஜ் அதிகாரப்பூர்வமாக த.வெ.க (TVK) கட்சியில் இணைந்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள…

3 weeks ago

மயிலாப்பூர் இந்து பர்மனன்ட் பண்ட் சம்பந்தமான வழக்கு: வைப்புதாரர்கள் எம்.எல்.ஏ.விடம் மனு

மயிலாப்பூர் இந்து பர்மனன்ட் பண்ட் விவகாரம்: வைப்புதாரர்கள் எம்.எல்.ஏ.விடம் முக்கிய கோரிக்கைகள்: தமிழ்நாடு காவல்துறையின் பொருளாதார குற்றப்பிரிவு (EOW) தாமதமாகி…

4 weeks ago

இராணி மேரி கல்லூரி மாணவர் சேர்க்கை: இசைப் பட்டப்படிப்புக்கு வயது வரம்பு 40 ஆக உயர்வு.

மயிலாப்பூரில் உள்ள இராணி மேரி கல்லூரியில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வரும் நிலையில், கவனம் பெற வேண்டிய சில சிறப்புப்…

4 weeks ago