நேற்று காலை முதல் சூறாவளி காலநிலையின் போது சவாலான சூழ்நிலைகளில் பணியாற்றியதற்காக மயிலாப்பூர் மக்களிடமிருந்து மாநில அதிகாரிகளும் அவர்களது ஊழியர்களும் மிகுந்த பாராட்டுக்களைப் பெற்றுள்ளனர். இன்றைய நாள், அவர்கள் அனைவருக்கும் கடினமாக இருந்தது. கார்ப்பரேஷன் ஊழியர்களுக்கு இரண்டு முக்கிய சவால்கள் இருந்தன – வீதிகள் மற்றும் சாலைகளில் விழுந்த மரங்களை நறுக்கி வெளியேற்றுவது மற்றும் வடிகால்களில் உள்ள அடைப்புகளை சரிசெய்வது போன்ற பணிகள் பெரிய சவால்களாக இருந்தது. போலீஸ் அதிகாரிகள், போலீஸ் கமிஷனர் மகேஷ் அகர்வாலின் உத்தரவைப் பின்பற்றி வழக்கமான பணிகளை மேற்கோள்வது மட்டுமல்லாமல் மற்ற ஊழியர்களுடன் சேர்ந்து வெள்ளப் பிரச்சினைகளை சரி செய்தனர். போக்குவரத்து போலீசாரும் மழையில் கூட தங்களுடைய பணியை சிறப்பாக செய்தனர். தினசரி குப்பைகளை அகற்றும் உர்பேசர் சுமித் ஊழியர்களும் தங்களுடைய வழக்கமான வேலைகளை விரைவாக மழை நின்ற நேரத்தில் செய்து முடித்தனர். உள்ளூர் பிரிவுகளில் உள்ள TANGEDCO மற்றும் மெட்ரோவாட்டர் ஊழியர்கள் SOS அழைப்புகளை ஏற்று பிரச்சனையை சரி செய்வதற்காக தங்களுடைய பணிகளில் இருந்தனர். இன்று நண்பகலுக்குப் பிறகு சூறாவளி காற்று வலுவடைந்ததால் மின்சாரம் நிறுத்தப்பட்டது.
புதன்கிழமை இரவு மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயில் அலுவலகத்திற்கு வெடிகுண்டு வெடிக்கும் என்று கூறி அனுப்பப்பட்ட மின்னஞ்சல் ஒரு புரளி…
ரோட்டரி சர்வதேச மாவட்டம் 3234, இராணி மேரி கல்லூரியைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகளுடன் இணைந்து பெரிய அளவிலான…
ஜூலை 2 புதன்கிழமை மாலை புனித தாமஸின் கொடியை பேராயர் ரெவ். ஜார்ஜ் அந்தோணிசாமி ஆசீர்வதித்து, பின்னர் புனித தாமஸின்…
மந்தைவெளியில் வசிப்பவர்கள், திருவேங்கடம் தெரு - தேவநாதன் தெரு மற்றும் வெங்கடகிருஷ்ணா சாலையில் தொடங்கப்பட்ட சாலை தொடர் வேலைகளை ஜி.சி.சி.…
ஆர்.ஏ.புரத்தில் உள்ள காமராஜ் சாலையில் அமைந்துள்ள சென்னை மாநகராட்சியின் அப்புறப்படுத்தப்பட்ட பொருட்களுக்கான முற்றத்தில் இன்று புதன்கிழமை (ஜூலை 2) காலை…
பூஜ்யஸ்ரீ மதியொலி சரஸ்வதி பிருந்தாவன் என்று அழைக்கப்படும் டாக்டர் ரங்கா சாலையில் உள்ள நந்தலாலா மையத்தில் வராஹி நவராத்திரி கொண்டாட்டங்கள்…