புயல் மழையின் போது அதிகாரிகள் எதிர்கொண்ட சவால்கள்

நேற்று காலை முதல் சூறாவளி காலநிலையின் போது சவாலான சூழ்நிலைகளில் பணியாற்றியதற்காக மயிலாப்பூர் மக்களிடமிருந்து மாநில அதிகாரிகளும் அவர்களது ஊழியர்களும் மிகுந்த பாராட்டுக்களைப் பெற்றுள்ளனர். இன்றைய நாள், அவர்கள் அனைவருக்கும் கடினமாக இருந்தது. கார்ப்பரேஷன் ஊழியர்களுக்கு இரண்டு முக்கிய சவால்கள் இருந்தன – வீதிகள் மற்றும் சாலைகளில் விழுந்த மரங்களை நறுக்கி வெளியேற்றுவது மற்றும் வடிகால்களில் உள்ள அடைப்புகளை சரிசெய்வது போன்ற பணிகள் பெரிய சவால்களாக இருந்தது. போலீஸ் அதிகாரிகள், போலீஸ் கமிஷனர் மகேஷ் அகர்வாலின் உத்தரவைப் பின்பற்றி வழக்கமான பணிகளை மேற்கோள்வது மட்டுமல்லாமல் மற்ற ஊழியர்களுடன் சேர்ந்து வெள்ளப் பிரச்சினைகளை சரி செய்தனர். போக்குவரத்து போலீசாரும் மழையில் கூட தங்களுடைய பணியை சிறப்பாக செய்தனர். தினசரி குப்பைகளை அகற்றும் உர்பேசர் சுமித் ஊழியர்களும் தங்களுடைய வழக்கமான வேலைகளை விரைவாக மழை நின்ற நேரத்தில் செய்து முடித்தனர். உள்ளூர் பிரிவுகளில் உள்ள TANGEDCO மற்றும் மெட்ரோவாட்டர் ஊழியர்கள் SOS அழைப்புகளை ஏற்று பிரச்சனையை சரி செய்வதற்காக தங்களுடைய பணிகளில் இருந்தனர். இன்று நண்பகலுக்குப் பிறகு சூறாவளி காற்று வலுவடைந்ததால் மின்சாரம் நிறுத்தப்பட்டது.

admin

Recent Posts

கபாலீஸ்வரர் கோவிலில் பக்தி பாடல் வீடியோக்கள் வெளியீடு: மே 18 மாலை

கற்பகதாசன் என்ற புனைப்பெயரைப் பயன்படுத்தும் அமெரிக்க ஒன்றியத்தில் பயிற்சி பெற்ற ஒவ்வாமை நிபுணர் டாக்டர் ஸ்ரீதரன், தான் எழுதிய பக்தி…

4 days ago

அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் பி.எஸ். சீனியர் பள்ளி மாணவர்கள்

மயிலாப்பூரில் உள்ள பி.எஸ். சீனியர் மேல்நிலைப் பள்ளி, உயர்நிலைப் பள்ளி தனது மாணவர்களுக்கான சமூக சேவை நிகழ்வுகளை ஏற்பாடு செய்ய…

5 days ago

மந்தைவெளி மையத்தில் நடைபெற்ற கராத்தே பிளாக் பெல்ட் பயிற்சி முகாம்.

மந்தைவெளியை மையமாகக் கொண்ட அகில இந்திய Boufuugai Inshinryu மையம் 25வது பிளாக் பெல்ட் பயிற்சி முகாமை வெற்றிகரமாக முடித்துள்ளதாகக்…

6 days ago

பெண்களுக்கு உடற்பயிற்சி கூடம் கட்ட மேயரிடம் கவுன்சிலர் கோரிக்கை. மந்தைவெளிப்பாக்கம் பகுதியில் இடம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

வார்டு 126 ஐ (மந்தைவெளிப்பாக்கம் / மெரினா குப்பம் மண்டலங்களின் ஒரு பகுதி) பிரதிநிதித்துவப்படுத்தும் கவுன்சிலர் அமிர்த வர்ஷினி (காங்கிரஸ்)…

6 days ago

ஆழ்வார்பேட்டையில் காந்திய சிந்தனைகள் குறித்த இரண்டு நாள் பயிற்சி வகுப்பு. மே 19 மற்றும் 20.

சென்னையைச் சேர்ந்த காந்தி அமைதி அறக்கட்டளை, மகாத்மா காந்தியின் முக்கிய சிந்தனைகள் குறித்த இரண்டு நாள் பயிற்சி வகுப்பை நடத்துகிறது.…

6 days ago

ஸ்ரீ முண்டகக்கண்ணி அம்மன் கோயிலில் சித்ரா பௌர்ணமி விழா. அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்.

ஸ்ரீ முண்டகக்கண்ணி அம்மன் கோயிலில் மே 12, திங்கட்கிழமை காலை நடந்த சித்ரா பௌர்ணமி கொண்டாட்டத்தில் நூற்றுக்கணக்கான மக்கள், பெரும்பாலும்…

7 days ago