ஆர்.ஏ புரம் ப்ரொடீஸ் சாலை மற்றும் ஆர்.கே. மட சாலை, கிரீன் வேஸ் சாலை சந்திப்பிலுள்ள சென்னை மாநகராட்சியின் விளையாட்டு மைதானம் சென்னை மெட்ரோ ரயில் நிலைய பணிகள் தொடங்கப்படவுள்ளதால் சில வாரங்களில் மூடப்படவுள்ளது. இதனால் அந்த பகுதியின் சுமார் ஐம்பது மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏனென்றால் இங்குதான் அவர்களுக்கு சிலம்பம் பயிற்சி கடந்த மூன்று வருடங்களாக ஆதிகேசவன் மற்றும் ஜெகதீசன் ஆகிய இரு சகோதரர்களால் இலவசமாக கற்றுக்கொடுக்கப்படுகிறது.
வாரத்தில் மூன்று நாட்கள் வகுப்புகள் நடத்தியுள்ளனர். தற்போது இந்த விளையாட்டு மைதானத்தில் மெட்ரோ ரயில் பணிகள் தொடங்கவுள்ளதால் விளையாட்டு மைதானத்திற்கு இனிமேல் யாரும் விளையாட வரவேண்டாம் என்று கூறியுள்ளத்தையடுத்து மாணவர்கள் கவலையடைந்துள்ளனர். மேலும் தற்போது சிலம்பம் பயிற்சியை தொடர வேறொரு இடத்தை தேடி வருகின்றனர்.
மயிலாப்பூர் ஸ்ரீ வேதாந்த தேசிகர் கோவிலில் வருடாந்திர தவானோத்சவம் மார்ச் 1 முதல் 3 வரை கொண்டாடப்பட உள்ளது. காலை,…
மயிலாப்பூரில் புதிதாகக் கட்டப்பட்ட திருவள்ளுவர் கோயிலின் பிரமாண்ட கும்பாபிஷேகம் பிப்ரவரி 27 ஆம் தேதி காலை 8 மணிக்குத் தொடங்குகிறது.…
ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலின் வருடாந்திர பங்குனி திருவிழாவின் முதல் படி பிப்ரவரி 26 அன்று நடைபெற உள்ளது. அன்று மாலை…
ஸ்ரீ கபாலீஸ்வர் கோயிலின் புதிய விளக்கு அமைப்பை பிப்ரவரி 15 அன்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி. கே.…
பிப்ரவரி 19 வியாழக்கிழமை முண்டகக்கண்ணி அம்மன் எம்ஆர்டிஎஸ் ரயில் நிலையத்தில் உள்ள லிஃப்ட் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக வேலை செய்யவில்லை,…
அனைத்து உள்ளூர் தேவாலயங்களிலும் பிப்ரவரி 18 அன்று சாம்பல் புதன் அனுசரிக்கப்பட்டது. இது தவக்காலத்தின் தொடக்கத்தைக் குறிக்கிறது, இது பிரார்த்தனை,…