அபிராமபுரத்தில் ஜூலை 31ம் தேதி காலை 9.30 மணி முதல் பகல் 1மணி வரை இலவச தடுப்பூசி போடும் முகாம் நடைபெறுகிறது. மயிலாப்பூர் மந்தைவெளி ஆர்.ஏ. புரம், ஆழ்வார்பேட்டை பகுதி பொதுமக்கள் இந்த தடுப்பூசி முகாமில் இலவசமாக தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம்.
இந்த தடுப்பூசி முகாமை காவேரி மருத்துவமனையும், ஆர் ஏ புரம் குடியிருப்பாளர்கள் நல சங்கமும்(RAPRA) இணைந்து நடத்துகிறது.
கோவிஷீல்டு தடுப்பூசி மட்டுமே வழங்கப்படவுள்ளது. முதல் மற்றும் இரண்டாவது டோஸ் தடுப்பூசி போட விரும்புபவர்கள் இங்கு வந்து போட்டுக்கொள்ளலாம்.
இந்த முகாமில் முதல் டோஸ் தடுப்பூசி போட வருபவர்கள் தங்களுடைய ஆதார் கார்டையும், இரண்டாவது தடுப்பூசி போட வருபவர்கள் ஆதார்கார்டுடன் முதல் டோஸ் போட்டதற்கான சான்றிதழையும் எடுத்து வரவேண்டும்.
இந்த முகாமில் அனைத்து மக்களும் கலந்து கொள்ளலாம். முற்றிலும் இலவசம்.
முகாம் நடைபெறும் நாள் இடம்: ஜூலை 31, 2021. சென்னை மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, செயின்ட் மேரிஸ் சாலை, அபிராமபுரம். (மாதா சர்ச் அருகில்)
ஆர்.ஏ. புரத்தில் ஆந்திர மகிளா சபாவுக்குச் சொந்தமான பரந்த நிலப்பகுதியின் பெரும்பகுதி சமப்படுத்தப்பட்டு, புதிய மருத்துவமனை ஒன்றை அமைப்பதற்கான பணிகள்…
E1 மயிலாப்பூர் காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமையன்று வாராந்திர குறைகேட்புக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. காவல் உதவி ஆய்வாளர் முத்துகிருஷ்ணன் மற்றும்…
மெரினா கடற்கரையில் மற்றொரு 'ப்ளூ ஃபிளாக்' பகுதிக்கான இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இது கலங்கரை விளக்கத்திற்கு அருகிலும், காமராஜர்…
மயிலாப்பூர் எம்.எல்.ஏ.-வும் மாநில அமைச்சருமான பி. வெங்கடரமணன், ஆழ்வார்பேட்டையில் தனது அலுவலகத்தைத் திறந்ததிலிருந்து, அப்பகுதி மக்கள், சமூகத் தலைவர்கள் மற்றும்…
இந்த கடும் கோடைக்காலத்தில் சுவையான நுங்குகளை வாங்கிச் சுவையுங்கள். சாய்பாபா கோயில் அருகிலுள்ள வெங்கடேச அக்ரஹாரம் தெருவில், ரவி மற்றும்…
இராணி மேரி கல்லூரியில் சேர விரும்புவோர் இப்போது விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதியைத் தவறவிட்டவர்கள் www.tngasa.in என்ற இணையதளத்தின்…