ஆர்.ஏ புரம் ப்ரொடீஸ் சாலை மற்றும் ஆர்.கே. மட சாலை, கிரீன் வேஸ் சாலை சந்திப்பிலுள்ள சென்னை மாநகராட்சியின் விளையாட்டு மைதானம் சென்னை மெட்ரோ ரயில் நிலைய பணிகள் தொடங்கப்படவுள்ளதால் சில வாரங்களில் மூடப்படவுள்ளது. இதனால் அந்த பகுதியின் சுமார் ஐம்பது மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏனென்றால் இங்குதான் அவர்களுக்கு சிலம்பம் பயிற்சி கடந்த மூன்று வருடங்களாக ஆதிகேசவன் மற்றும் ஜெகதீசன் ஆகிய இரு சகோதரர்களால் இலவசமாக கற்றுக்கொடுக்கப்படுகிறது.
வாரத்தில் மூன்று நாட்கள் வகுப்புகள் நடத்தியுள்ளனர். தற்போது இந்த விளையாட்டு மைதானத்தில் மெட்ரோ ரயில் பணிகள் தொடங்கவுள்ளதால் விளையாட்டு மைதானத்திற்கு இனிமேல் யாரும் விளையாட வரவேண்டாம் என்று கூறியுள்ளத்தையடுத்து மாணவர்கள் கவலையடைந்துள்ளனர். மேலும் தற்போது சிலம்பம் பயிற்சியை தொடர வேறொரு இடத்தை தேடி வருகின்றனர்.
ஆர்.ஏ. புரத்தில் ஆந்திர மகிளா சபாவுக்குச் சொந்தமான பரந்த நிலப்பகுதியின் பெரும்பகுதி சமப்படுத்தப்பட்டு, புதிய மருத்துவமனை ஒன்றை அமைப்பதற்கான பணிகள்…
E1 மயிலாப்பூர் காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமையன்று வாராந்திர குறைகேட்புக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. காவல் உதவி ஆய்வாளர் முத்துகிருஷ்ணன் மற்றும்…
மெரினா கடற்கரையில் மற்றொரு 'ப்ளூ ஃபிளாக்' பகுதிக்கான இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இது கலங்கரை விளக்கத்திற்கு அருகிலும், காமராஜர்…
மயிலாப்பூர் எம்.எல்.ஏ.-வும் மாநில அமைச்சருமான பி. வெங்கடரமணன், ஆழ்வார்பேட்டையில் தனது அலுவலகத்தைத் திறந்ததிலிருந்து, அப்பகுதி மக்கள், சமூகத் தலைவர்கள் மற்றும்…
இந்த கடும் கோடைக்காலத்தில் சுவையான நுங்குகளை வாங்கிச் சுவையுங்கள். சாய்பாபா கோயில் அருகிலுள்ள வெங்கடேச அக்ரஹாரம் தெருவில், ரவி மற்றும்…
இராணி மேரி கல்லூரியில் சேர விரும்புவோர் இப்போது விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதியைத் தவறவிட்டவர்கள் www.tngasa.in என்ற இணையதளத்தின்…