Categories: சமூகம்

இலவசமாக சிலம்பம் பயிற்சி பெற்றுவந்த குழந்தைகள், தற்போது விளையாட்டு மைதானத்தை இழந்துள்ளனர்.

ஆர்.ஏ புரம் ப்ரொடீஸ் சாலை மற்றும் ஆர்.கே. மட சாலை, கிரீன் வேஸ் சாலை சந்திப்பிலுள்ள சென்னை மாநகராட்சியின் விளையாட்டு மைதானம் சென்னை மெட்ரோ ரயில் நிலைய பணிகள் தொடங்கப்படவுள்ளதால் சில வாரங்களில் மூடப்படவுள்ளது. இதனால் அந்த பகுதியின் சுமார் ஐம்பது மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏனென்றால் இங்குதான் அவர்களுக்கு சிலம்பம் பயிற்சி கடந்த மூன்று வருடங்களாக ஆதிகேசவன் மற்றும் ஜெகதீசன் ஆகிய இரு சகோதரர்களால் இலவசமாக கற்றுக்கொடுக்கப்படுகிறது.

வாரத்தில் மூன்று நாட்கள் வகுப்புகள் நடத்தியுள்ளனர். தற்போது இந்த விளையாட்டு மைதானத்தில் மெட்ரோ ரயில் பணிகள் தொடங்கவுள்ளதால் விளையாட்டு மைதானத்திற்கு இனிமேல் யாரும் விளையாட வரவேண்டாம் என்று கூறியுள்ளத்தையடுத்து மாணவர்கள் கவலையடைந்துள்ளனர். மேலும் தற்போது சிலம்பம் பயிற்சியை தொடர வேறொரு இடத்தை தேடி வருகின்றனர்.

admin

Recent Posts

மின்சார இருசக்கர வாகனங்களுக்கான பேட்டரி மாற்றும் வசதி. மந்தைவெளி, எம்.கே. அம்மன் கோயில் எம்.ஆர்.டி.எஸ் ரயில் நிலையங்களில்.

மயிலாப்பூரில் உள்ள இரண்டு முக்கிய இடங்களான எம்.ஆர்.டி.எஸ்-இன் முண்டக்கக்கன்னி அம்மன் கோயில் நிலையம் மற்றும் மந்தைவெளி நிலையத்தில், மின்சார இருசக்கர…

15 hours ago

ஸ்ரீ ரமண மகரிஷி 76வது ஆராதனை விழா. ஏப்ரல் 15

ரமண கேந்திரா அறக்கட்டளை சார்பில் ஏப்ரல் 15ம் தேதி ஸ்ரீ ரமண மகரிஷி 76வது ஆராதனை விழா, காலை 6…

2 days ago

இளம் பருவத்தினருக்கான எழுத்துப் பயிலரங்குகள்.

10 முதல் 13 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்காக, எழுத்தாளர் பிரவீணா சிவராம் அவர்கள் நடத்தும் இரண்டு நாள் படைப்பு எழுத்துப் பயிலரங்கு…

2 days ago

ஆர்.ஏ.புரத்தில் குழந்தைகளுக்கான ஒரு மன்றம். இலவச நிகழ்வுகள். இப்போதே பதிவு செய்யுங்கள்.

ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்போர் சங்கம் (RAPRA), 5 முதல் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளை வளர்த்தெடுக்கும் நோக்கில், 'RAPRA குழந்தைகள் மன்றம்'…

3 days ago

ஸ்ரீ வெங்கடேச பெருமாள் கோவில் பிரம்மோற்சவம். ஏப்ரல் 12 முதல் 21 வரை

மந்தைவெளி மாரி செட்டி தெருவில் உள்ள ஸ்ரீ வெங்கடேச பெருமாள் கோவிலில் பங்குனி பிரம்மோற்சவம் ஏப்ரல் 12 முதல் 21…

5 days ago

2026 சட்டப்பேரவை தேர்தல்: 25 பேர் வேட்புமனு தாக்கல்; நகரிலேயே இதுவே மிகக் குறைந்த எண்ணிக்கை.

ஏப்ரல் மாத இறுதியில் நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலில், மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிடுவதற்காக 25 பேர் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர்.…

7 days ago