செய்திகள்

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான இடங்களில் புதிய திட்டங்கள் செயல்படுத்த முயற்சி. ஆனால் சிலர் இது சம்பந்தமாக கேள்வி எழுப்புகின்றனர்.

தமிழக அரசு தற்போது இந்து கோவில்களின் சொத்துக்களை ஆய்வு செய்து வருகிறது. அந்த வகையில் இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான இடங்களை கடந்த சில வாரங்களில் ஆய்வு செய்தார். பின்னர் நடைபெற்ற  அதிகாரிகளின் ஆலோசனை கூட்டத்தில் கபாலீஸ்வரர் கோவிலின் தெற்கு பகுதியில் உள்ள கோவிலுக்கு சொந்தமான இடங்களில் பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் திருமண மண்டபங்கள், மல்டி லெவல் கார் பார்க்கிங், கோவில் ஊழியர்களுக்கு வீடுகள் கட்டுவது போன்ற ஆலோசனை தெரிவிக்கப்பட்டது.

இதுபோன்ற கட்டிடங்கள் கட்டுவது வரவேற்க கூடிய ஒன்றாக இருந்தாலும் இதை வேறொரு இடத்தில் கட்ட வேண்டும் என்றும் பொதுமக்கள் சிலர் தெரிவிக்கின்றனர். அதே நேரத்தில் இது போன்ற கட்டிடங்கள் கட்டும் போது கோவிலை சுற்றி போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்றும் மேலும் இங்கு பழமையான பாரம்பரியமான ஒட்டு வீடுகள் இருப்பதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர். ஆகவே அமைச்சரும் மற்ற அதிகாரிகளும் இது சம்பந்தமான பணிகளை தொடங்குவதற்கு முன் மக்களிடம் ஆலோசனை நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

admin

Recent Posts

கோலங்கள் பற்றிய விரிவுரை. ஆர்.ஏ.புரத்தில் உள்ள கம்யூனிட்டி கிளப் நடத்தியது

சிஐடி காலனியில் வசிக்கும் ஆராய்ச்சியாளரும் கோலங்கள் குறித்த நிபுணருமான டாக்டர் காயத்ரி சங்கர்நாராயணன், சமீபத்தில் ஆர் ஏ புரம் நண்பர்கள்…

5 hours ago

சாந்தோமில் உள்ள சிஎஸ்ஐ செயிண்ட் தாமஸ் தமிழ் தேவாலயத்தில் விடுமுறை பைபிள் பள்ளி

சாந்தோமில் உள்ள சிஎஸ்ஐ செயின்ட் தாமஸ் தமிழ் தேவாலயத்தில் ஏப்ரல் 26 முதல் மே 5 வரை விடுமுறை பைபிள்…

5 hours ago

மாதவப்பெருமாள் கோவிலில் சித்திரை திருவோணப் பெருவிழா – ஏப்ரல் 30 முதல் மே 10 வரை.

மயிலாப்பூர் மாதவப்பெருமாள் திருக்கோயிலில் சித்திரை திருவோணப் பெருவிழா ஏப்ரல் 30 முதல் மே 10 வரை நடைபெறுகிறது. விழா விவரங்கள்:…

1 day ago

பி.எஸ்.மெட்ரிக் பள்ளியில் (வடக்கு) இந்த கல்வியாண்டு முதல் 11 ஆம் வகுப்பில் வணிகவியல் பாடம் அறிமுகம்.

மயிலாப்பூர் முண்டகக்கண்ணி அம்மன் கோவில் தெருவில் அமைந்துள்ள பிஎஸ் மெட்ரிகுலேஷன் (வடக்கு) பள்ளி, ஜூன் 2024 இல் தொடங்கும் கல்வியாண்டில்…

1 day ago

விவேகானந்தா கல்லூரியின் (1968 – ’71) பி.ஏ. பொருளாதாரம் பிரிவு முன்னாள் மாணவர்கள் மே 1 அன்று சந்திப்பு

விவேகானந்தா கல்லூரியின் 1968 - 1971 பி.ஏ. பொருளாதாரம் பிரிவின் முன்னாள் மாணவர்கள், அதன் 50 ஆண்டுகளைக் குறிக்கும் வகையில்…

2 days ago

இந்த மந்தைவெளி குடியிருப்பாளர் இரயில் பயணத்தின் போது ‘காணவில்லை’

மந்தைவெளி பகுதியைச் சேர்ந்த இவர் காணாமல் போயுள்ளார். இவர் பெயர் சௌந்தரராஜன், அவருக்கு வயது 85. ராக்ஃபோர்ட்டில் பயணம் செய்து…

2 days ago