கிறிஸ்துமஸ் நேரத்தில் வீடுகளிலும் தேவாலயங்களிலும் இயேசு கிறிஸ்து பிறப்பை முன்னிட்டு குடில் அமைப்பார்கள். அந்த வகையில் சாந்தோம் கதீட்ரல், லாசரஸ் தேவாலயங்களில் பெரிய குடில்களை அமைப்பார்கள்.
கடந்த இரண்டு மூன்று நாட்களாக லாசரஸ் சாலையில் உள்ள மாதா தேவாலயத்தில் உள்ள அரங்கில் குடில் அமைக்கும் வேலைகள் நடைபெற்று வருகிறது. சிறப்பு அலங்கார விளக்குகளும் பொருத்தப்பட்டு வேலைகள் சுறுசுறுப்பாக நடைபெற்று வருகிறது.
கிறிஸ்துமஸ் முதல்நாள் அன்று இரவு நடைபெறும் பூசைக்கு பிறகு இந்த குடில்களை மக்கள் பார்வையிடும் வகையில் திறந்து வைப்பர். இதே போன்று சாந்தோம் தேவாலயத்தில் திறந்தவெளியில் அமைக்கப்பட்டு வரும் குடிலையும் மக்கள் பார்வையிடலாம்.
ஜனவரி 3ம் தேதி வரை தேவாலயங்களில் அமைக்கப்பட்டுள்ள இந்த குடில்களை மக்கள் பார்வையிடலாம்.
மயிலாப்பூர், கச்சேரி சாலையில் உள்ள மயிலாப்பூர் தபால் நிலையத்தில் பிப்ரவரி 21 அன்று ஒரு பரபரப்பு ஏற்பட்டது; இங்குள்ள ஊழியர்கள்…
ஆர்.ஏ.புரத்தில் உள்ள கபாலீஸ்வரர் - கற்பகாம்பாள் கல்யாண மண்டபத்தில் கடந்த வாரம் 30 ஜோடிகளுக்கு திருமண ஏற்பாடுகளை தமிழக இந்து…
சென்னை மெட்ரோ தொடர்பான பணிகளுக்காக மயிலாப்பூர் ராயப்பேட்டை நெடுஞ்சாலையில் சிறிய மாற்றங்கள் தொடர்ந்து செய்யப்படுகின்றன. சமீபத்தில், சமஸ்கிருதக் கல்லூரிக்கு வெளியே…
மயிலாப்பூரில் இந்த வார இறுதியில் சிட்டி சென்டர் மாலில் நீங்கள் இருந்தால், இந்த ஷாப்பிங் மாலின் தரை தளத்தில் நடைபெறும்…
மயிலாப்பூரில் பிப்ரவரி 10 அன்று நடைபெற்ற ஸ்ரீ காஞ்சி மகா பெரியவா ஆலயத்தின் மஹாகும்பாபிஷேகம், ஒரு அறக்கட்டளை, அதன் ஆதரவாளர்கள்…
மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலின் தைப்பூச விழாவிற்கான தெப்பம் அமைக்கும் பணி வியாழக்கிழமை (பிப்ரவரி 6) காலை தொடங்கியது. டஜன்…