நகர்மன்றத் தேர்தல்: ஞாயிற்றுக்கிழமை காலை பிரச்சாரம் மேற்கொண்ட சிபிஐ-எம் வேட்பாளர் சரஸ்வதி

உள்ளாட்சி நகர்மன்றத் தேர்தல் பிரச்சார கேரவன்கள் நேற்று ஞாயிற்றுக்கிழமை மயிலாப்பூர் தெருக்களில் காணப்பட்டது. தேர்தலுக்கு இன்னும் சுமார் பத்து நாட்களே உள்ளதால் வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

ஒரு வேட்பாளரை நாங்கள் கண்காணித்தோம். சிபிஐ-எம்ன் சரஸ்வதி வார்டு 123 க்கு வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார், இது லஸ் – பல்லக்குமணியம் நகர் – அபிராமபுரம் – ஆர்.ஏ புரம் மண்டலத்தை உள்ளடக்கியது, இது சற்று தொலைவில் உள்ள வார்டு ஆகும்.

பல ஆண்டுகளாக இடதுசாரிக் கட்சியில் இருந்ததாகச் சொல்லப்படும் சரஸ்வதி, உள்ளூர் மட்டத்திலும் பணியாற்றியவர் என்கிறார். இவர் நந்தனம் பகுதியை சேர்ந்தவர்.

ஞாயிற்றுக்கிழமை, அவரது கேரவன் காலை 7 மணியளவில் தெருக்களில் இருந்தது. அவருடன் சிபிஐ-எம் மற்றும் திமுக கட்சியைச் சேர்ந்த உள்ளூரை சேர்ந்த நான்கைந்து பேர் இருந்தனர்.

கேரவனுக்கு முன்னால் அலங்கரிக்கப்பட்ட ஆட்டோ ஒன்று, திமுக கூட்டணிக் கட்சிக் கொடிகளையும், வேட்பாளரின் பதாகைகளையும் ஏந்திச் சென்றது, அதைத் தொடர்ந்து இரண்டு இளைஞர்கள் சத்தம் எழுப்பி பிரச்சாரசம் மேற்கொண்டனர்.

ஆட்டோ ரிக்ஷாவில் பொருத்தப்பட்டிருந்த ஒரு பேச்சாளர், வேட்பாளரின் வருகையை அறிவித்து பிரச்சார முழக்கங்களை எழுப்பினார்.

கட்சியின் சின்னம் பொறிக்கப்பட்ட புடவையை சரஸ்வதி அணிந்து பிரச்சாரம் செய்தார். அவர் கையில் துண்டு பிரசுரங்களை, தெருவோர வியாபாரிகளிடமும், தண்ணீர் குழாயடியில் நிற்கும் பெண்களிடமும் மற்றும் தெரு முனைகளில் நின்று கொண்டிருக்கும் ஆண்களிடமும் வழங்கி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.

குடிசை மாற்று வாரியத் தொகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு பல பிரச்சினைகள் உள்ளன. கழிவுநீர் மற்றும் குடிநீர் விநியோகம் செய்வதில் கூட பிரச்சனை உள்ளது என்று சரஸ்வதி எங்களிடம் கூறினார்.

1000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கும் லஸ் சர்ச் சாலைக்கு அருகில், மக்கள் தொகை அதிகம் உள்ள பல்லக்குமான்யம் நகரைச் சுற்றி நீண்ட நடைப்பயிற்சி மேற்கொண்டார். எந்த வேட்பாளருக்கும் இந்த மக்களின் வாக்குகள் இன்றியமையாதவை;

சரஸ்வதி 90 நிமிடங்களுக்கு மேல் இங்கு செலவிட்டார். மயிலாப்பூர் மண்டலத்தின் வார்டு 123 இல் போட்டியிடும் மற்ற அனைத்து வேட்பாளர்களுக்கும் இது ஒரு முக்கியமான இடம்.

செய்தி: மதன் குமார்

admin

Recent Posts

சைலன்ட் ரீடிங் குழு இந்த ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 8) கூடுகிறது. குழந்தைகளுக்கான கதை சொல்லும் போட்டியை நடத்துகிறது.

மயிலாப்பூரில் சைலன்ட் ரீடிங் குழு இந்த ஞாயிற்றுக்கிழமை, ஜூன் 8 அன்று லஸ்ஸில் உள்ள நாகேஸ்வர ராவ் பூங்காவில் குழந்தைகளுக்கான…

1 day ago

மயிலாப்பூர் அஞ்சல் அலுவலகத்தில் ஆதார் அட்டை பதிவு செய்ய கூட்டமாக இருந்தால், கோபாலபுரத்தில் உள்ள துணை அஞ்சல் அலுவலகத்தை அணுகலாம்.

குழந்தைகள் அனைவரும் ஆதார் அட்டை பெற வேண்டும் என்பதால், கச்சேரி சாலையில் உள்ள மயிலாப்பூர் அஞ்சல் அலுவலகத்தில் நீண்ட வரிசையில்…

1 day ago

தாவரங்களுக்கு நீர்ப்பாசனம் செய்ய எளிய முறையைப் பயன்படுத்தும் மாநகராட்சி ஊழியர்கள்.

சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான இடங்களில் வளர்க்கப்பட்டுள்ள தாவரங்களுக்கு நீர்ப்பாசனம் செய்ய ஒரு எளிய யோசனையைக் கொண்டு வந்துள்ளது. மயிலாப்பூரில் உள்ள…

3 days ago

புதிய கல்வியாண்டில் பள்ளிகள் திறக்கப்பட்டதால் பள்ளி இருக்கும் பகுதிகள் மீண்டும் பரபரப்பாக இருந்தது.

நான்கு வாரங்களுக்கும் மேலாக, மயிலாப்பூரில் உள்ள பள்ளி பள்ளிக்கூடங்களை சுற்றியுள்ள பகுதிகள் பெரிதாக பரபரப்பு ஏதும் இல்லாமல் இருந்தது. இந்த…

3 days ago

இந்த லயன்ஸ் கிளப் மந்தைவெளியில் கணித பயிற்சி மையத்தை நடத்துகிறது. ஏழை மாணவர்களுக்கு இலவசம்

லயன்ஸ் கிளப் ஆஃப் மெட்ராஸ் பார்க் டவுன் அறக்கட்டளை, 9 மற்றும் 10 ஆம் வகுப்புகளில் பயிலும் ஏழை மாணவர்களுக்கு…

3 days ago

மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ வெள்ளீஸ்வரர் கோயிலின் வைகாசி விழா தொடங்கியது

மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ வெள்ளீஸ்வரர் கோயிலின் வருடாந்திர வைகாசி விழா தொடங்கியது. ஜூன் 2 ஆம் தேதி காலை, ஏராளமான…

3 days ago