நகர்மன்றத் தேர்தல்: ஞாயிற்றுக்கிழமை காலை பிரச்சாரம் மேற்கொண்ட சிபிஐ-எம் வேட்பாளர் சரஸ்வதி

உள்ளாட்சி நகர்மன்றத் தேர்தல் பிரச்சார கேரவன்கள் நேற்று ஞாயிற்றுக்கிழமை மயிலாப்பூர் தெருக்களில் காணப்பட்டது. தேர்தலுக்கு இன்னும் சுமார் பத்து நாட்களே உள்ளதால் வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

ஒரு வேட்பாளரை நாங்கள் கண்காணித்தோம். சிபிஐ-எம்ன் சரஸ்வதி வார்டு 123 க்கு வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார், இது லஸ் – பல்லக்குமணியம் நகர் – அபிராமபுரம் – ஆர்.ஏ புரம் மண்டலத்தை உள்ளடக்கியது, இது சற்று தொலைவில் உள்ள வார்டு ஆகும்.

பல ஆண்டுகளாக இடதுசாரிக் கட்சியில் இருந்ததாகச் சொல்லப்படும் சரஸ்வதி, உள்ளூர் மட்டத்திலும் பணியாற்றியவர் என்கிறார். இவர் நந்தனம் பகுதியை சேர்ந்தவர்.

ஞாயிற்றுக்கிழமை, அவரது கேரவன் காலை 7 மணியளவில் தெருக்களில் இருந்தது. அவருடன் சிபிஐ-எம் மற்றும் திமுக கட்சியைச் சேர்ந்த உள்ளூரை சேர்ந்த நான்கைந்து பேர் இருந்தனர்.

கேரவனுக்கு முன்னால் அலங்கரிக்கப்பட்ட ஆட்டோ ஒன்று, திமுக கூட்டணிக் கட்சிக் கொடிகளையும், வேட்பாளரின் பதாகைகளையும் ஏந்திச் சென்றது, அதைத் தொடர்ந்து இரண்டு இளைஞர்கள் சத்தம் எழுப்பி பிரச்சாரசம் மேற்கொண்டனர்.

ஆட்டோ ரிக்ஷாவில் பொருத்தப்பட்டிருந்த ஒரு பேச்சாளர், வேட்பாளரின் வருகையை அறிவித்து பிரச்சார முழக்கங்களை எழுப்பினார்.

கட்சியின் சின்னம் பொறிக்கப்பட்ட புடவையை சரஸ்வதி அணிந்து பிரச்சாரம் செய்தார். அவர் கையில் துண்டு பிரசுரங்களை, தெருவோர வியாபாரிகளிடமும், தண்ணீர் குழாயடியில் நிற்கும் பெண்களிடமும் மற்றும் தெரு முனைகளில் நின்று கொண்டிருக்கும் ஆண்களிடமும் வழங்கி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.

குடிசை மாற்று வாரியத் தொகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு பல பிரச்சினைகள் உள்ளன. கழிவுநீர் மற்றும் குடிநீர் விநியோகம் செய்வதில் கூட பிரச்சனை உள்ளது என்று சரஸ்வதி எங்களிடம் கூறினார்.

1000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கும் லஸ் சர்ச் சாலைக்கு அருகில், மக்கள் தொகை அதிகம் உள்ள பல்லக்குமான்யம் நகரைச் சுற்றி நீண்ட நடைப்பயிற்சி மேற்கொண்டார். எந்த வேட்பாளருக்கும் இந்த மக்களின் வாக்குகள் இன்றியமையாதவை;

சரஸ்வதி 90 நிமிடங்களுக்கு மேல் இங்கு செலவிட்டார். மயிலாப்பூர் மண்டலத்தின் வார்டு 123 இல் போட்டியிடும் மற்ற அனைத்து வேட்பாளர்களுக்கும் இது ஒரு முக்கியமான இடம்.

செய்தி: மதன் குமார்

Verified by ExactMetrics