மயிலாப்பூர் பகுதியில் உள்ள கல்லூரிகளில் இறுதி ஆண்டு முதுகலை மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கியது.

மயிலாப்பூர் மண்டலத்தில் உள்ள கல்லூரிகள் டிச., 2 ல் மீண்டும் திறக்கப்பட்டு இப்போது இறுதி ஆண்டு முதுகலை மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தத் தொடங்கியுள்ளனர். ஆனால் மாணவர்கள் வருகை குறைவாக இருக்கிறது. மயிலாப்பூரில் உள்ள இராணி மேரி கல்லூரியில், மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் வகுப்பறைகளுக்குள் நுழைவதற்கு முன்பு கைகளை சானிடைசர் கொண்டு கழுவ வேண்டும் மற்றும் முகமூடிகளை கட்டாயமாகப் பயன்படுத்த வேண்டும். கல்லூரியின் முதல்வர் உமா மகேஸ்வரி, இராணி மேரி கல்லூரி மாணவர்களில் 70% பேர் உள்ளூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும், அவர்கள் மட்டுமே வகுப்புகளில் கலந்து கொள்கிறார்கள் என்றும் கூறுகிறார். மயிலாப்பூரில் உள்ள விவேகானந்தர் கல்லூரியும் அதன் முதுகலை படிப்புகளுக்கான மாணவர்களுக்கு வகுப்புகளைத் தொடங்கியுள்ளது. இருப்பினும், மாணவர்கள் வருகை குறைவாகவே உள்ளது. இப்போது 10-க்கும் குறைவான மாணவர்கள் வகுப்புகளுக்கு வருகிறார்கள் என்று கல்லூரியின் பணியாளர்கள் கூறுகின்றனர். மற்ற அனைத்து படிப்புகளுக்கான வகுப்புகள் டிசம்பர் 7 திங்கள் முதல் தொடங்கும் என்று அவர்கள் கூறுகிறார்கள்.

admin

Recent Posts

ஆர்.ஏ. புரத்தில் உள்ள ஆந்திர மகிளா சபாவுக்குச் சொந்தமான இடத்தில் 300 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை அமையவுள்ளது.

ஆர்.ஏ. புரத்தில் ஆந்திர மகிளா சபாவுக்குச் சொந்தமான பரந்த நிலப்பகுதியின் பெரும்பகுதி சமப்படுத்தப்பட்டு, புதிய மருத்துவமனை ஒன்றை அமைப்பதற்கான பணிகள்…

2 months ago

மயிலாப்பூர் காவல் நிலையத்தில் வாராந்திர குறைகேட்புக் கூட்டம் தொடங்கியது

E1 மயிலாப்பூர் காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமையன்று வாராந்திர குறைகேட்புக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. காவல் உதவி ஆய்வாளர் முத்துகிருஷ்ணன் மற்றும்…

2 months ago

மெரினாவில் மற்றொரு ‘ப்ளூ ஃபிளாக்’ (Blue Flag) பகுதி – கலங்கரை விளக்கத்திற்கு அருகில்

மெரினா கடற்கரையில் மற்றொரு 'ப்ளூ ஃபிளாக்' பகுதிக்கான இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இது கலங்கரை விளக்கத்திற்கு அருகிலும், காமராஜர்…

3 months ago

மயிலாப்பூர் எம்.எல்.ஏ-வை மயிலாப்பூர் மக்கள் தொடர்புகொள்ள தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி அறிமுகம்.

மயிலாப்பூர் எம்.எல்.ஏ.-வும் மாநில அமைச்சருமான பி. வெங்கடரமணன், ஆழ்வார்பேட்டையில் தனது அலுவலகத்தைத் திறந்ததிலிருந்து, அப்பகுதி மக்கள், சமூகத் தலைவர்கள் மற்றும்…

3 months ago

சாய்பாபா கோயில் அருகே ECR-லிருந்து கொண்டுவரப்பட்ட நுங்குகள் விற்பனை

இந்த கடும் கோடைக்காலத்தில் சுவையான நுங்குகளை வாங்கிச் சுவையுங்கள். சாய்பாபா கோயில் அருகிலுள்ள வெங்கடேச அக்ரஹாரம் தெருவில், ரவி மற்றும்…

3 months ago

இராணி மேரி கல்லூரியில் சேர்க்கை இன்னும் நடைபெறுகிறது.

இராணி மேரி கல்லூரியில் சேர விரும்புவோர் இப்போது விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதியைத் தவறவிட்டவர்கள் www.tngasa.in என்ற இணையதளத்தின்…

3 months ago