124வது ஆண்டு விழாவை கொண்டாடிய ஆழ்வார்பேட்டையில் உள்ள சிஎஸ்ஐ குட் ஷெப்பர்ட் தேவாலயம்.

ஆழ்வார்பேட்டையில் உள்ள சிஎஸ்ஐ குட் ஷெப்பர்ட் தேவாலயம் 124 ஆண்டுகளை (25.1.1899 முதல் 24.1.2023 வரை) நிறைவு செய்து ஜனவரி 25ஆம் தேதி 125வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

ஜனவரி 25ல் சிறப்பு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி நடந்தது. பின், ஜனவரி 26ல், அருகில் உள்ள கிராமங்களை சேர்ந்த, நான்கு ஏழை ஜோடிகளுக்கு, இலவசமாக திருமணம் நடந்தது. தேவாலயமே முழு செலவுகளையும் ஏற்றுக்கொண்டது.

சபையின் வசதிக்காக ஜனவரி.29 ஞாயிற்றுக்கிழமை தேவாலய ஆண்டுவிழா நடைபெற்றது என ஆயர்குழுவின் செயலாளர் ஒய்.புவனேஷ்குமார் தெரிவித்தார்.

ஆயர் அருட்தந்தை எர்னஸ்ட் செல்வதுரை தலைமையில் பிரார்த்தனை நடைபெற்றது. திருச்சபையின் முன்னாள் போதகர்கள் மற்றும் பாஸ்டர் அம்மாக்கள் அனைவருக்கும் பரிசுகள் மற்றும் சால்வைகள் அணிவித்து கவுரவிக்கப்பட்டனர். 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் முதலிடம் பெற்ற மற்றும் விளையாட்டில் சிறந்து விளங்கிய குழந்தைகளுக்கு ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது.

திருச்சபை பெரியவர்களுக்கு ஆண்டுவிழா பரிசுகள் வழங்கப்பட்டன. மதிய உணவுடன் நிகழ்ச்சி நிறைவு பெற்றது.

செய்தி: ஜூலியானா ஸ்ரீதர்

admin

Recent Posts

மயிலாப்பூர் பள்ளி மாணவர்களுக்கான ‘அமைதி கிளப்புகள்’. இறுதிப் போட்டி.

காந்தி அமைதி அறக்கட்டளை, மெட்ராஸ் சமீபத்தில் சில உள்ளூர் பகுதி பள்ளிகளில் 2025–2026 கல்வியாண்டிற்கான 'பள்ளிகளில் அமைதி கிளப்புகள்' திட்டத்தை…

4 days ago

ஆர்.ஏ.புரத்தில் நவீன நூலகம் திறக்கப்பட்டது. மாணவர்களுக்கான படிப்பு அரங்கம், குழந்தைகளுக்கான பிரிவும் உள்ளது.

ஆர்.ஏ.புரத்தில் நவீன நூலகம் முறையாகத் திறக்கப்பட்டுள்ளது. தற்போதைய திமுக அரசாங்கத்தின் 'முதல்வர் படிப்பகம்' திட்டத்தின் கீழ் இது ஒரு சிஎம்டிஏ…

4 days ago

மெரினா கடற்கரையில் மாசி மகம் சடங்குகள்

மாசி மகம் சடங்குகள் மார்ச் 3 ஆம் தேதி அதிகாலை தொடங்கின. ஸ்ரீ வெள்ளீஸ்வரர் கோயில் மற்றும் ஸ்ரீ கபாலீஸ்வரர்…

4 days ago

மயிலாப்பூர் தபால் நிலையத்தில் உள்ள ஏடிஎம் இப்போது 24 மணி நேரமும் செயல்படுகிறது.

தபால் நிலைய பயனர்கள் மற்றும் பொதுமக்களின் வசதிக்காக, மயிலாப்பூர் தலைமை தபால் நிலையம் நவம்பர் 2025 இல் ஒரு ஏடிஎம்…

5 days ago

ஸ்ரீ வேதாந்த தேசிகர் கோவிலில் தவானோத்சவம். மார்ச் 1 முதல் 3 வரை

மயிலாப்பூர் ஸ்ரீ வேதாந்த தேசிகர் கோவிலில் வருடாந்திர தவானோத்சவம் மார்ச் 1 முதல் 3 வரை கொண்டாடப்பட உள்ளது. காலை,…

1 week ago

புதிதாகக் கட்டப்பட்ட திருவள்ளுவர் கோயிலின் கும்பாபிஷேகம்: பிப்ரவரி 27ல்.

மயிலாப்பூரில் புதிதாகக் கட்டப்பட்ட திருவள்ளுவர் கோயிலின் பிரமாண்ட கும்பாபிஷேகம் பிப்ரவரி 27 ஆம் தேதி காலை 8 மணிக்குத் தொடங்குகிறது.…

1 week ago