124வது ஆண்டு விழாவை கொண்டாடிய ஆழ்வார்பேட்டையில் உள்ள சிஎஸ்ஐ குட் ஷெப்பர்ட் தேவாலயம்.

ஆழ்வார்பேட்டையில் உள்ள சிஎஸ்ஐ குட் ஷெப்பர்ட் தேவாலயம் 124 ஆண்டுகளை (25.1.1899 முதல் 24.1.2023 வரை) நிறைவு செய்து ஜனவரி 25ஆம் தேதி 125வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

ஜனவரி 25ல் சிறப்பு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி நடந்தது. பின், ஜனவரி 26ல், அருகில் உள்ள கிராமங்களை சேர்ந்த, நான்கு ஏழை ஜோடிகளுக்கு, இலவசமாக திருமணம் நடந்தது. தேவாலயமே முழு செலவுகளையும் ஏற்றுக்கொண்டது.

சபையின் வசதிக்காக ஜனவரி.29 ஞாயிற்றுக்கிழமை தேவாலய ஆண்டுவிழா நடைபெற்றது என ஆயர்குழுவின் செயலாளர் ஒய்.புவனேஷ்குமார் தெரிவித்தார்.

ஆயர் அருட்தந்தை எர்னஸ்ட் செல்வதுரை தலைமையில் பிரார்த்தனை நடைபெற்றது. திருச்சபையின் முன்னாள் போதகர்கள் மற்றும் பாஸ்டர் அம்மாக்கள் அனைவருக்கும் பரிசுகள் மற்றும் சால்வைகள் அணிவித்து கவுரவிக்கப்பட்டனர். 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் முதலிடம் பெற்ற மற்றும் விளையாட்டில் சிறந்து விளங்கிய குழந்தைகளுக்கு ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது.

திருச்சபை பெரியவர்களுக்கு ஆண்டுவிழா பரிசுகள் வழங்கப்பட்டன. மதிய உணவுடன் நிகழ்ச்சி நிறைவு பெற்றது.

செய்தி: ஜூலியானா ஸ்ரீதர்

admin

Recent Posts

சங்கீதா உணவகத்தில் ரூ.40க்கு மதிய உணவு

சங்கீதாவின் 40வது ஆண்டு விழா கொண்டாட்டங்களில், நகரம் முழுவதும் உள்ள அதன் உணவகங்கள் இப்போது மாறி மாறி வழங்கும் சிறப்பு…

3 days ago

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலுக்கு விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல், புரளி என தெரியவந்துள்ளது

புதன்கிழமை இரவு மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயில் அலுவலகத்திற்கு வெடிகுண்டு வெடிக்கும் என்று கூறி அனுப்பப்பட்ட மின்னஞ்சல் ஒரு புரளி…

1 week ago

மெரினா கடற்கரையின் ஒரு பகுதியை இராணி மேரி கல்லூரி மாணவிகள் சுத்தம் செய்தனர்.

ரோட்டரி சர்வதேச மாவட்டம் 3234, இராணி மேரி கல்லூரியைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகளுடன் இணைந்து பெரிய அளவிலான…

1 week ago

புனித தாமஸின் விழா: சாந்தோம் கதீட்ரலில் பேராயர் கொடியை ஏற்றினார்.

ஜூலை 2 புதன்கிழமை மாலை புனித தாமஸின் கொடியை பேராயர் ரெவ். ஜார்ஜ் அந்தோணிசாமி ஆசீர்வதித்து, பின்னர் புனித தாமஸின்…

1 week ago

திருவேங்கடம் சாலை சீரமைக்கப்பட்டது: ஆனால் சாலை சந்திப்பு மற்றும் தேவநாதன் தெரு ஆகிய இடங்களில் இன்னும் வேலை முடியவில்லை.

மந்தைவெளியில் வசிப்பவர்கள், திருவேங்கடம் தெரு - தேவநாதன் தெரு மற்றும் வெங்கடகிருஷ்ணா சாலையில் தொடங்கப்பட்ட சாலை தொடர் வேலைகளை ஜி.சி.சி.…

1 week ago

ஆர்.ஏ.புரத்தில் உள்ள ஜி.சி.சி.யின் மறுசுழற்சி பொருட்கள் சேமிக்கும் இடத்தில் தீ விபத்து.

ஆர்.ஏ.புரத்தில் உள்ள காமராஜ் சாலையில் அமைந்துள்ள சென்னை மாநகராட்சியின் அப்புறப்படுத்தப்பட்ட பொருட்களுக்கான முற்றத்தில் இன்று புதன்கிழமை (ஜூலை 2) காலை…

1 week ago