124வது ஆண்டு விழாவை கொண்டாடிய ஆழ்வார்பேட்டையில் உள்ள சிஎஸ்ஐ குட் ஷெப்பர்ட் தேவாலயம்.

ஆழ்வார்பேட்டையில் உள்ள சிஎஸ்ஐ குட் ஷெப்பர்ட் தேவாலயம் 124 ஆண்டுகளை (25.1.1899 முதல் 24.1.2023 வரை) நிறைவு செய்து ஜனவரி 25ஆம் தேதி 125வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

ஜனவரி 25ல் சிறப்பு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி நடந்தது. பின், ஜனவரி 26ல், அருகில் உள்ள கிராமங்களை சேர்ந்த, நான்கு ஏழை ஜோடிகளுக்கு, இலவசமாக திருமணம் நடந்தது. தேவாலயமே முழு செலவுகளையும் ஏற்றுக்கொண்டது.

சபையின் வசதிக்காக ஜனவரி.29 ஞாயிற்றுக்கிழமை தேவாலய ஆண்டுவிழா நடைபெற்றது என ஆயர்குழுவின் செயலாளர் ஒய்.புவனேஷ்குமார் தெரிவித்தார்.

ஆயர் அருட்தந்தை எர்னஸ்ட் செல்வதுரை தலைமையில் பிரார்த்தனை நடைபெற்றது. திருச்சபையின் முன்னாள் போதகர்கள் மற்றும் பாஸ்டர் அம்மாக்கள் அனைவருக்கும் பரிசுகள் மற்றும் சால்வைகள் அணிவித்து கவுரவிக்கப்பட்டனர். 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் முதலிடம் பெற்ற மற்றும் விளையாட்டில் சிறந்து விளங்கிய குழந்தைகளுக்கு ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது.

திருச்சபை பெரியவர்களுக்கு ஆண்டுவிழா பரிசுகள் வழங்கப்பட்டன. மதிய உணவுடன் நிகழ்ச்சி நிறைவு பெற்றது.

செய்தி: ஜூலியானா ஸ்ரீதர்

admin

Recent Posts

ஆர். கே. மட சாலையில் அப்பல்லோ மருந்தகம் திறப்பு. டோர் டெலிவரி வசதி உண்டு.

மந்தைவெளி தபால் நிலையத்திற்கு அருகிலுள்ள ஆர். கே. மட சாலையில் அப்பல்லோ மருந்தகம் திறக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய விசாலமான மருந்தகத்தில்…

6 days ago

ஆழ்வார்பேட்டை கடையில் கைவினைப் பொருட்கள் விற்பனை. அக்டோபர் 19 வரை.

‘கலா உத்சவ்’ என்பது அக்டோபர் 19 வரை ஆழ்வார்பேட்டை கடையில் நடைபெறும் கைவினைக் கண்காட்சி மற்றும் விற்பனை ஆகும். இது…

7 days ago

மாணவர்களுக்கு மடிக்கணினிகளை நன்கொடையாக வழங்கிய ஆர்.ஏ.புரம் சமூகத்தினர்.

ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்பாளர்கள் சங்கம் (RAPRA) சில ஆண்டுகளாக இந்த சுற்றுப்புறத்தில் உள்ள சென்னை பள்ளிகள் மற்றும் அரசு உதவி…

1 week ago

மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி. காந்தியின் படைப்புகள் பற்றிய கருப்பொருள். தமிழில்.

ஆழ்வார்பேட்டை காந்தி அமைதி அறக்கட்டளை தனது அலுவலக வளாகத்தில், வரும் அக்டோபர் 2-ஆம் தேதி (மகாத்மா காந்தியின் 156-ஆம் ஜெயந்தியை…

3 weeks ago

நவராத்திரி 2025: ஸ்ரீ கபாலீஸ்வரர் கற்பகாம்பாள் கல்யாண மண்டபத்தில் பிரமாண்டமான கொலு

இந்து சமய அறநிலையத்துறை விவகாரங்களுக்கான மாநில அமைச்சர் பி.கே. சேகர் பாபு, செப்டம்பர் 22 மாலை மயிலாப்பூர் வெங்கடேச அக்ரஹாரத்…

3 weeks ago

வெங்கட்ரமணா ஆயுர்வேத மருந்தகத்தில் தீபாவளி லேகியம் விற்பனைக்கு தயார்.

தீபாவளி லேகியம் வாங்க இடம் தேடுகிறீர்களா? அதற்கு ஒரு சிறந்த இடம் மயிலாப்பூரில் உள்ள வெங்கட்ரமணா ஆயுர்வேத மருந்தகம். இது…

3 weeks ago