மீன் உணவு ஆர்வலர்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை மார்க்கெட் மூடப்படும் என்பதை நினைவில் வைத்துக் கொண்டு, நேற்று மாலை தங்களுக்குப் பிடித்தமான மீன் வாங்குவதற்கு சாந்தோமில் உள்ள மெரினா லூப் சாலையில் உள்ள மீன் மார்க்கெட்டில் குவிந்தனர்.
மாலை 5 மணி முதல் நூற்றுக்கணக்கான மக்கள் இந்த லூப் சாலையில் மீன் வாங்க வாகனங்களை ஓட்டிச் சென்றனர், சிறிய கடைகளில் சிலர் பேரம் பேசி மீன்களை வாங்கி சென்றனர்.
மீன் வியாபாரிகள் விலை வழக்கத்தை விட அதிகமாக இருப்பதாக ஒப்புக்கொண்டனர். கொரோனா தொற்று நேர விதிமுறைகள் காரணமாக இன்று ஞாயிற்றுக்கிழமை கடைகள் மூடப்படுவதால் அந்த வியாபாரத்தை ஈடுகட்ட இந்த விலை தற்காலிகமாக உயர்த்தப்பட்டுள்ளது.
மெரினா லூப் சாலையில் இருக்கும் திறந்தவெளி மீன் மார்க்கெட்டில் பல்வேறு வகையான மீன்கள் விற்பனைக்கு உள்ளன. மேலும் கடல் அருகே இருப்பதால் கடலில் பிடிக்கப்படும் மீன்கள் நேரடியாக விற்பனைக்கு வருகிறது. நூற்றுக்கணக்கான மக்கள் இங்கு வந்து தினமும் மீன்களை வாங்கி செல்கின்றனர்.
ரோட்டரி கிளப் ஆஃப் சென்னை ஐடி சிட்டி, ஸ்ரீ ரமணா கண் மையம் மற்றும் ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்பாளர்கள் நல…
ஜெயா கண் மருத்துவமனை ஜூலை 27 (ஞாயிற்றுக்கிழமை) அன்று கல்யாண நகர் சங்க வளாகத்தில் - எண்.29, டி.எம்.எஸ். சாலை,…
மெட்ராஸ் தினம் 2025 க்கு, மயிலாப்பூர் டைம்ஸ் பள்ளி அணிகளுக்கான வருடாந்திர பவர்பாயிண்ட் புராஜெக்ட் போட்டியை அறிவித்துள்ளது. இந்தப் போட்டியின்…
இராணி மேரி கல்லூரி வளாகத்தில் இன்று திங்கட்கிழமை காலை ஒரு எளிமையான விழா நடைபெற்றது. இது இந்த கல்லூரியின் 111…
சங்கீதாவின் 40வது ஆண்டு விழா கொண்டாட்டங்களில், நகரம் முழுவதும் உள்ள அதன் உணவகங்கள் இப்போது மாறி மாறி வழங்கும் சிறப்பு…
புதன்கிழமை இரவு மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயில் அலுவலகத்திற்கு வெடிகுண்டு வெடிக்கும் என்று கூறி அனுப்பப்பட்ட மின்னஞ்சல் ஒரு புரளி…