மீன் உணவு ஆர்வலர்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை மார்க்கெட் மூடப்படும் என்பதை நினைவில் வைத்துக் கொண்டு, நேற்று மாலை தங்களுக்குப் பிடித்தமான மீன் வாங்குவதற்கு சாந்தோமில் உள்ள மெரினா லூப் சாலையில் உள்ள மீன் மார்க்கெட்டில் குவிந்தனர்.
மாலை 5 மணி முதல் நூற்றுக்கணக்கான மக்கள் இந்த லூப் சாலையில் மீன் வாங்க வாகனங்களை ஓட்டிச் சென்றனர், சிறிய கடைகளில் சிலர் பேரம் பேசி மீன்களை வாங்கி சென்றனர்.
மீன் வியாபாரிகள் விலை வழக்கத்தை விட அதிகமாக இருப்பதாக ஒப்புக்கொண்டனர். கொரோனா தொற்று நேர விதிமுறைகள் காரணமாக இன்று ஞாயிற்றுக்கிழமை கடைகள் மூடப்படுவதால் அந்த வியாபாரத்தை ஈடுகட்ட இந்த விலை தற்காலிகமாக உயர்த்தப்பட்டுள்ளது.
மெரினா லூப் சாலையில் இருக்கும் திறந்தவெளி மீன் மார்க்கெட்டில் பல்வேறு வகையான மீன்கள் விற்பனைக்கு உள்ளன. மேலும் கடல் அருகே இருப்பதால் கடலில் பிடிக்கப்படும் மீன்கள் நேரடியாக விற்பனைக்கு வருகிறது. நூற்றுக்கணக்கான மக்கள் இங்கு வந்து தினமும் மீன்களை வாங்கி செல்கின்றனர்.
மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிடும் முன்னணி அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் தங்கள் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர். நேற்று ஏப்ரல் 6, 2026…
மந்தைவெளிப்பாக்கம் பகுதியின் உள்ளூர் குடியிருப்பாளர்களைக் கொண்ட அமைப்பான ‘Voices of Mandavelipakkam’ (VOM)-இன் உறுப்பினர்கள், பங்குனித் திருவிழாவின்போது பணியில் இருந்த…
நாகேஸ்வர ராவ் பூங்காவின் சீரமைப்புப் பணிகள் ஒன்று நிறுத்தப்பட்டிருக்க வேண்டும், அல்லது மிக மந்தமான வேகத்தில் நகர்ந்து கொண்டிருக்க வேண்டும்…
1905-ஆம் ஆண்டு நிறுவப்பட்ட ராமகிருஷ்ணா மிஷன் மாணவர் இல்லம் (Ramakrishna Mission Students’ Home), தேவைப்படும் மாணவர்களுக்கு இலவசக் கல்வி,…
ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலின் பங்குனித் திருவிழாவையொட்டி நடைபெறும் இசை மற்றும் நடன விழா, ஏப்ரல் 3 முதல் 16 வரை…
பிரதமர் நரேந்திர மோடி, ஏப்ரல் 4 அன்று மயிலாப்பூரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் உரையாற்றவுள்ளார். தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு அவர் மேற்கொள்ளும்…