மீன் உணவு ஆர்வலர்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை மார்க்கெட் மூடப்படும் என்பதை நினைவில் வைத்துக் கொண்டு, நேற்று மாலை தங்களுக்குப் பிடித்தமான மீன் வாங்குவதற்கு சாந்தோமில் உள்ள மெரினா லூப் சாலையில் உள்ள மீன் மார்க்கெட்டில் குவிந்தனர்.
மாலை 5 மணி முதல் நூற்றுக்கணக்கான மக்கள் இந்த லூப் சாலையில் மீன் வாங்க வாகனங்களை ஓட்டிச் சென்றனர், சிறிய கடைகளில் சிலர் பேரம் பேசி மீன்களை வாங்கி சென்றனர்.
மீன் வியாபாரிகள் விலை வழக்கத்தை விட அதிகமாக இருப்பதாக ஒப்புக்கொண்டனர். கொரோனா தொற்று நேர விதிமுறைகள் காரணமாக இன்று ஞாயிற்றுக்கிழமை கடைகள் மூடப்படுவதால் அந்த வியாபாரத்தை ஈடுகட்ட இந்த விலை தற்காலிகமாக உயர்த்தப்பட்டுள்ளது.
மெரினா லூப் சாலையில் இருக்கும் திறந்தவெளி மீன் மார்க்கெட்டில் பல்வேறு வகையான மீன்கள் விற்பனைக்கு உள்ளன. மேலும் கடல் அருகே இருப்பதால் கடலில் பிடிக்கப்படும் மீன்கள் நேரடியாக விற்பனைக்கு வருகிறது. நூற்றுக்கணக்கான மக்கள் இங்கு வந்து தினமும் மீன்களை வாங்கி செல்கின்றனர்.
மயிலாப்பூரில் வருடந்தோறும் ஜனவரி தொடக்கத்தில் நடைபெறும் சுந்தரம் பைனான்ஸின் மயிலாப்பூர் விழா ஜனவரி 8 ம் தேதி காலை 7…
மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் வியாழக்கிழமை மாலை (டிசம்பர் 4) கார்த்திகை தீப விழா தொடங்கிய நேரத்தில், லேசான,…
மந்தைவெளி ராஜா தெரு குடியிருப்பாளர்கள் நலச் சங்கம் அதன் பொங்கல் விழாவின் ஒரு பகுதியாக “ஊடக உலகம்” என்ற கருப்பொருளை…
‘பசுமை பயணம்’ என்ற கருப்பொருளில் நடத்தப்படும் மாரத்தான் சைக்கிள் ஓட்டுதல் முயற்சியின் இறுதி நிகழ்வு நவம்பர் 20, காலை 11.30…
மயிலாப்பூர், பஜார் சாலையில் உள்ள டீக்கடை உரிமையாளர் ஒருவர் தெரு நாயை அடித்துக் கொன்றதற்காக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, ஸ்டேஷன்…
ஆர்.ஏ. புரத்தில் உள்ள துர்காபாய் தேஷ்முக் பொது மருத்துவமனை நவம்பர் 18 அன்று காலை 8.30 மணி முதல் பிற்பகல்…