ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலின் முதல் நாள் தெப்பத்திருவிழா நேற்று ஜனவரி 28 ம் தேதி நடைபெற்றது. இதில் குறிப்பிடத்தக்க செய்தி என்னவென்றால் கொரோனா விதிமுறைகள் பின்பற்றப்படுவதால் தெப்ப திருவிழாவை காண்பதற்கு பொதுமக்களுக்கு அனுமதியில்லை என்று கோவில் நிர்வாகம் ஏற்கனவே தெரிவித்திருந்தது. இந்த நிலையில் நேற்று பொதுமக்கள் தெப்பத்திருவிழாவை காண குளத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர்.
தெப்பம் இரண்டு சுற்றுகள் குளத்தை சுற்றிவந்த பிறகு, சுமார் ஆயிரம் நபர்களுக்கு மேல் குளத்தை சுற்றியுள்ள மூன்று பகுதிகளில் உள்ளே அனுமதிக்கப்பட்டு தெப்ப திருவிழாவை கண்டு களித்தனர். தெப்ப திருவிழா இன்றும் நாளையும் நடைபெறவுள்ளது. ஆனால் பொதுமக்கள் நேற்றுபோல் குளத்தின் உள்ளே அனுமதிக்கப்படுவார்களா என்ற அதிகாரபூர்வ தகவல் ஏதுமில்லை.
மந்தைவெளி தபால் நிலையத்திற்கு அருகிலுள்ள ஆர். கே. மட சாலையில் அப்பல்லோ மருந்தகம் திறக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய விசாலமான மருந்தகத்தில்…
‘கலா உத்சவ்’ என்பது அக்டோபர் 19 வரை ஆழ்வார்பேட்டை கடையில் நடைபெறும் கைவினைக் கண்காட்சி மற்றும் விற்பனை ஆகும். இது…
ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்பாளர்கள் சங்கம் (RAPRA) சில ஆண்டுகளாக இந்த சுற்றுப்புறத்தில் உள்ள சென்னை பள்ளிகள் மற்றும் அரசு உதவி…
ஆழ்வார்பேட்டை காந்தி அமைதி அறக்கட்டளை தனது அலுவலக வளாகத்தில், வரும் அக்டோபர் 2-ஆம் தேதி (மகாத்மா காந்தியின் 156-ஆம் ஜெயந்தியை…
இந்து சமய அறநிலையத்துறை விவகாரங்களுக்கான மாநில அமைச்சர் பி.கே. சேகர் பாபு, செப்டம்பர் 22 மாலை மயிலாப்பூர் வெங்கடேச அக்ரஹாரத்…
தீபாவளி லேகியம் வாங்க இடம் தேடுகிறீர்களா? அதற்கு ஒரு சிறந்த இடம் மயிலாப்பூரில் உள்ள வெங்கட்ரமணா ஆயுர்வேத மருந்தகம். இது…