பி.எஸ். உயர்நிலைப்பள்ளியில் 1971ம் ஆண்டு படித்த முன்னாள் மாணவர்கள் பள்ளிக்கு புதிய வசதிகள் ஏற்படுத்தி கொடுத்துள்ளனர். விழா பிப்ரவரி 1ம் தேதி நடைபெறவுள்ளது.

பி.எஸ். உயர்நிலைப்பள்ளியில் 1971ம் ஆண்டு படித்த மாணவர்கள் அவர்களின் பொன்விழாவை கொண்டாடுகின்றனர். வருடா வருடம் நடைபெறும் பொன்விழாவில் முன்னாள் மாணவர்கள் சில உதவிகளை பள்ளிக்கு செய்து வருகின்றனர். அந்த வகையில் இந்த வருட விழாவில் 1971 ஆண்டு படித்த மாணவர்கள் பள்ளிக்கு புதியதாக கழிப்பறை வசதிகள் செய்தும் மற்றும் சில கட்டிடங்களை சரி செய்தும் தந்துள்ளனர். இந்த கட்டிடத்தின் திறப்பு விழா நிகழ்ச்சி பிப்ரவரி 1ம் தேதி காலை 11 மணிக்கு சிறிய அளவில் நடைபெறவுள்ளது. நீங்கள் இது வரை இந்த 1971 ஆம் ஆண்டின் குழுவில் சேரவில்லையென்றால் இந்த குழுவில் உள்ள லோகநாதனை தொடர்புகொள்ளலாம். தொலைபேசி எண் : 9841759842

admin

Recent Posts

ஆர்.ஏ. புரத்தில் உள்ள ஆந்திர மகிளா சபாவுக்குச் சொந்தமான இடத்தில் 300 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை அமையவுள்ளது.

ஆர்.ஏ. புரத்தில் ஆந்திர மகிளா சபாவுக்குச் சொந்தமான பரந்த நிலப்பகுதியின் பெரும்பகுதி சமப்படுத்தப்பட்டு, புதிய மருத்துவமனை ஒன்றை அமைப்பதற்கான பணிகள்…

2 months ago

மயிலாப்பூர் காவல் நிலையத்தில் வாராந்திர குறைகேட்புக் கூட்டம் தொடங்கியது

E1 மயிலாப்பூர் காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமையன்று வாராந்திர குறைகேட்புக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. காவல் உதவி ஆய்வாளர் முத்துகிருஷ்ணன் மற்றும்…

2 months ago

மெரினாவில் மற்றொரு ‘ப்ளூ ஃபிளாக்’ (Blue Flag) பகுதி – கலங்கரை விளக்கத்திற்கு அருகில்

மெரினா கடற்கரையில் மற்றொரு 'ப்ளூ ஃபிளாக்' பகுதிக்கான இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இது கலங்கரை விளக்கத்திற்கு அருகிலும், காமராஜர்…

3 months ago

மயிலாப்பூர் எம்.எல்.ஏ-வை மயிலாப்பூர் மக்கள் தொடர்புகொள்ள தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி அறிமுகம்.

மயிலாப்பூர் எம்.எல்.ஏ.-வும் மாநில அமைச்சருமான பி. வெங்கடரமணன், ஆழ்வார்பேட்டையில் தனது அலுவலகத்தைத் திறந்ததிலிருந்து, அப்பகுதி மக்கள், சமூகத் தலைவர்கள் மற்றும்…

3 months ago

சாய்பாபா கோயில் அருகே ECR-லிருந்து கொண்டுவரப்பட்ட நுங்குகள் விற்பனை

இந்த கடும் கோடைக்காலத்தில் சுவையான நுங்குகளை வாங்கிச் சுவையுங்கள். சாய்பாபா கோயில் அருகிலுள்ள வெங்கடேச அக்ரஹாரம் தெருவில், ரவி மற்றும்…

3 months ago

இராணி மேரி கல்லூரியில் சேர்க்கை இன்னும் நடைபெறுகிறது.

இராணி மேரி கல்லூரியில் சேர விரும்புவோர் இப்போது விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதியைத் தவறவிட்டவர்கள் www.tngasa.in என்ற இணையதளத்தின்…

3 months ago