இன்று முன்னாள் முதல்வர் ஜெ. ஜெயலலிதா அவர்களின் நினைவிடம் திறப்பதையொட்டி வெளியூர்களிலிருந்து நிறைய அ.இ.அ.தி.மு.க கழக தொண்டர்கள் நகருக்குள் காலையிலேயே வந்திருந்தனர். இதில் மயிலாப்பூர் பகுதியில் மூன்று திருமண மண்டபங்களில் தங்கி காலை சிற்றுண்டியை முடித்துவிட்டு நிகழ்ச்சி நடைபெறும் மெரினா கடற்கரைக்கு சென்றனர். வெங்கடேச அக்ரஹாரம் தெருவில் உள்ள திருமண மண்டபத்தில் வெளியூரில் இருந்து வந்த நிறைய அ.இ.அ.தி.மு.க கழக தொண்டர்கள் நேற்றே இரவே வந்து தங்கியிருந்து காலையில் மெரினா கடற்கரைக்கு சென்றனர். காலையிலிருந்து மெரினா கடற்கரை கலங்கரை விளக்கம் முதல் சர்வீஸ் சாலையில் வெளியூரிலிருந்து வந்த அ.இ.அ.தி.மு.க கழக தொண்டர்களின் வாகனங்கள் நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. இன்று காலை முதலே கலங்கரை விளக்கம் அருகே போக்குவரத்து போலீசார் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினர்.
இந்த கடும் கோடைக்காலத்தில் சுவையான நுங்குகளை வாங்கிச் சுவையுங்கள். சாய்பாபா கோயில் அருகிலுள்ள வெங்கடேச அக்ரஹாரம் தெருவில், ரவி மற்றும்…
இராணி மேரி கல்லூரியில் சேர விரும்புவோர் இப்போது விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதியைத் தவறவிட்டவர்கள் www.tngasa.in என்ற இணையதளத்தின்…
மந்தைவெளி, ஆர்.கே. நகரில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசித் திட்டத்திற்கான சேவையை மேலும்…
மயிலாப்பூர் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ. ஆர். நடராஜ் அதிகாரப்பூர்வமாக த.வெ.க (TVK) கட்சியில் இணைந்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள…
மயிலாப்பூர் இந்து பர்மனன்ட் பண்ட் விவகாரம்: வைப்புதாரர்கள் எம்.எல்.ஏ.விடம் முக்கிய கோரிக்கைகள்: தமிழ்நாடு காவல்துறையின் பொருளாதார குற்றப்பிரிவு (EOW) தாமதமாகி…
மயிலாப்பூரில் உள்ள இராணி மேரி கல்லூரியில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வரும் நிலையில், கவனம் பெற வேண்டிய சில சிறப்புப்…