தேர்தல் 2021: மயிலாப்பூரில் நேற்று நடைபெற்ற தேர்தல் சுமூகமாக நடந்து முடிந்ததா?

நேற்றைய தேர்தல் சில இடங்களில் சுமூகமாக நடந்து முடிந்தது. நேற்று நடந்த தேர்தல் சில இடங்களில் சில கசப்பான அனுபவங்களை தந்தது. சில வாக்குச்சாவடிகளில் விதிமுறைகள் மிகவும் கடுமையாக இருந்தது. சாந்தோம் பள்ளியின் வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் குப்பம் பகுதியில் நடைபெற்ற கட்சிகளுக்கிடையேயான அடிதடிகள் வாக்குச்சாவடி வரை வந்தது. மேலும் வாக்குப்பதிவு செய்வதற்கு வாக்காளர்களுக்கு கொடுக்கப்பட்ட கையுறைகளை வாக்காளர்கள் ஆங்காங்கே வீசி சென்றனர்.

மாலை ஆறு மணி முதல் ஏழு மணி வரை கோவிட் நோயினால் பாதிக்கப்படுவார்கள் வாக்களிக்க தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கி இருந்தது. அதே நேரத்தில் பொதுமக்களும் வாக்களிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நேரத்தில் பணியாற்ற வாக்குச்சாவடியில் பணிபுரியும் ஊழியர்களுக்கு கவச உடைகள் வழங்கப்பட்டது. ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள செயின்ட் எப்பாஸ் பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள திமுக பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி வாக்களிக்க வரும் செய்தி கேட்டு பத்திரிக்கை புகைப்படகலைஞர்கள் குழுமி இருந்தனர். அவரும் குறிப்பிட்ட நேரத்தில் வந்து வாக்களித்து சென்றார். இதுபோல் மேலும் சில வாக்குச்சாவடிகளில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட சிலர் வாக்களித்தனர். கடைசியாக ஏழுமணிக்கு பின் தேர்தல் அலுவலர்கள் ஈவிஎம் இயந்திரங்களை மூடி முத்திரையிட்டு லாரியில் வாக்குகள் எண்ணும் மையத்திற்கு அனுப்பிவைத்தனர்.

admin

Recent Posts

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலுக்கு விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல், புரளி என தெரியவந்துள்ளது

புதன்கிழமை இரவு மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயில் அலுவலகத்திற்கு வெடிகுண்டு வெடிக்கும் என்று கூறி அனுப்பப்பட்ட மின்னஞ்சல் ஒரு புரளி…

2 days ago

மெரினா கடற்கரையின் ஒரு பகுதியை இராணி மேரி கல்லூரி மாணவிகள் சுத்தம் செய்தனர்.

ரோட்டரி சர்வதேச மாவட்டம் 3234, இராணி மேரி கல்லூரியைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகளுடன் இணைந்து பெரிய அளவிலான…

3 days ago

புனித தாமஸின் விழா: சாந்தோம் கதீட்ரலில் பேராயர் கொடியை ஏற்றினார்.

ஜூலை 2 புதன்கிழமை மாலை புனித தாமஸின் கொடியை பேராயர் ரெவ். ஜார்ஜ் அந்தோணிசாமி ஆசீர்வதித்து, பின்னர் புனித தாமஸின்…

3 days ago

திருவேங்கடம் சாலை சீரமைக்கப்பட்டது: ஆனால் சாலை சந்திப்பு மற்றும் தேவநாதன் தெரு ஆகிய இடங்களில் இன்னும் வேலை முடியவில்லை.

மந்தைவெளியில் வசிப்பவர்கள், திருவேங்கடம் தெரு - தேவநாதன் தெரு மற்றும் வெங்கடகிருஷ்ணா சாலையில் தொடங்கப்பட்ட சாலை தொடர் வேலைகளை ஜி.சி.சி.…

3 days ago

ஆர்.ஏ.புரத்தில் உள்ள ஜி.சி.சி.யின் மறுசுழற்சி பொருட்கள் சேமிக்கும் இடத்தில் தீ விபத்து.

ஆர்.ஏ.புரத்தில் உள்ள காமராஜ் சாலையில் அமைந்துள்ள சென்னை மாநகராட்சியின் அப்புறப்படுத்தப்பட்ட பொருட்களுக்கான முற்றத்தில் இன்று புதன்கிழமை (ஜூலை 2) காலை…

5 days ago

நந்தலாலா மையத்தில் வராஹி நவராத்திரி கொண்டாட்டங்கள்.

பூஜ்யஸ்ரீ மதியொலி சரஸ்வதி பிருந்தாவன் என்று அழைக்கப்படும் டாக்டர் ரங்கா சாலையில் உள்ள நந்தலாலா மையத்தில் வராஹி நவராத்திரி கொண்டாட்டங்கள்…

1 week ago