நேற்றைய தேர்தல் சில இடங்களில் சுமூகமாக நடந்து முடிந்தது. நேற்று நடந்த தேர்தல் சில இடங்களில் சில கசப்பான அனுபவங்களை தந்தது. சில வாக்குச்சாவடிகளில் விதிமுறைகள் மிகவும் கடுமையாக இருந்தது. சாந்தோம் பள்ளியின் வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் குப்பம் பகுதியில் நடைபெற்ற கட்சிகளுக்கிடையேயான அடிதடிகள் வாக்குச்சாவடி வரை வந்தது. மேலும் வாக்குப்பதிவு செய்வதற்கு வாக்காளர்களுக்கு கொடுக்கப்பட்ட கையுறைகளை வாக்காளர்கள் ஆங்காங்கே வீசி சென்றனர்.
மாலை ஆறு மணி முதல் ஏழு மணி வரை கோவிட் நோயினால் பாதிக்கப்படுவார்கள் வாக்களிக்க தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கி இருந்தது. அதே நேரத்தில் பொதுமக்களும் வாக்களிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நேரத்தில் பணியாற்ற வாக்குச்சாவடியில் பணிபுரியும் ஊழியர்களுக்கு கவச உடைகள் வழங்கப்பட்டது. ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள செயின்ட் எப்பாஸ் பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள திமுக பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி வாக்களிக்க வரும் செய்தி கேட்டு பத்திரிக்கை புகைப்படகலைஞர்கள் குழுமி இருந்தனர். அவரும் குறிப்பிட்ட நேரத்தில் வந்து வாக்களித்து சென்றார். இதுபோல் மேலும் சில வாக்குச்சாவடிகளில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட சிலர் வாக்களித்தனர். கடைசியாக ஏழுமணிக்கு பின் தேர்தல் அலுவலர்கள் ஈவிஎம் இயந்திரங்களை மூடி முத்திரையிட்டு லாரியில் வாக்குகள் எண்ணும் மையத்திற்கு அனுப்பிவைத்தனர்.
மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிடும் முன்னணி அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் தங்கள் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர். நேற்று ஏப்ரல் 6, 2026…
மந்தைவெளிப்பாக்கம் பகுதியின் உள்ளூர் குடியிருப்பாளர்களைக் கொண்ட அமைப்பான ‘Voices of Mandavelipakkam’ (VOM)-இன் உறுப்பினர்கள், பங்குனித் திருவிழாவின்போது பணியில் இருந்த…
நாகேஸ்வர ராவ் பூங்காவின் சீரமைப்புப் பணிகள் ஒன்று நிறுத்தப்பட்டிருக்க வேண்டும், அல்லது மிக மந்தமான வேகத்தில் நகர்ந்து கொண்டிருக்க வேண்டும்…
1905-ஆம் ஆண்டு நிறுவப்பட்ட ராமகிருஷ்ணா மிஷன் மாணவர் இல்லம் (Ramakrishna Mission Students’ Home), தேவைப்படும் மாணவர்களுக்கு இலவசக் கல்வி,…
ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலின் பங்குனித் திருவிழாவையொட்டி நடைபெறும் இசை மற்றும் நடன விழா, ஏப்ரல் 3 முதல் 16 வரை…
பிரதமர் நரேந்திர மோடி, ஏப்ரல் 4 அன்று மயிலாப்பூரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் உரையாற்றவுள்ளார். தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு அவர் மேற்கொள்ளும்…