சாந்தோம் தேவாலயத்தின் பாதிரியார் தலைமையில் இளைஞர்கள் சேர்ந்து சென்னை நகரில் உள்ள வெவ்வேறு தேவாலயங்களில் இந்த கொரோனா தொற்று நேரத்தில் மக்களுக்கு சேவை செய்ய குழுவை உருவாக்கி வருகின்றனர். மூன்று குழுக்களை உருவாக்கி வருகின்றனர். இவர்களுடைய நிர்வாக தலைமையகம் கச்சேரி சாலையில் உள்ள பாஸ்டரல் மையத்தில் அமைய உள்ளது. ஒரு குழு மக்களுக்கு தேவையான தடுப்பூசி செலுத்தும் இடங்கள், படுக்கை வசதிகள் இருக்கும் மருத்துவமனை விவரங்கள், போன்ற செய்திகள் வழங்கவும், இரண்டாவது குழு மருந்து மற்றும் உணவு தேவைக்காகவும், மூன்றாவது குழு கொரோனவினால் இறந்தவர்களை அடக்கம் செய்ய தேவையான உதவிகளை வழங்கவும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அனைத்து இளைஞர்கள் குழுவுக்கு பாதிரியார் ரொனால்டு ரிச்சர்டு ஏற்ற தலைவர். தற்போது பேராயர், ரெவ். ஜார்ஜ் அந்தோணிசாமி இந்த திட்டங்களை பார்வையிட்டு வருகிறார். திட்டவேளைகள் முடிந்த பிறகு முழு வீச்சில் இந்த இளைஞர்கள் குழு செயல்பட துவங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிடும் முன்னணி அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் தங்கள் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர். நேற்று ஏப்ரல் 6, 2026…
மந்தைவெளிப்பாக்கம் பகுதியின் உள்ளூர் குடியிருப்பாளர்களைக் கொண்ட அமைப்பான ‘Voices of Mandavelipakkam’ (VOM)-இன் உறுப்பினர்கள், பங்குனித் திருவிழாவின்போது பணியில் இருந்த…
நாகேஸ்வர ராவ் பூங்காவின் சீரமைப்புப் பணிகள் ஒன்று நிறுத்தப்பட்டிருக்க வேண்டும், அல்லது மிக மந்தமான வேகத்தில் நகர்ந்து கொண்டிருக்க வேண்டும்…
1905-ஆம் ஆண்டு நிறுவப்பட்ட ராமகிருஷ்ணா மிஷன் மாணவர் இல்லம் (Ramakrishna Mission Students’ Home), தேவைப்படும் மாணவர்களுக்கு இலவசக் கல்வி,…
ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலின் பங்குனித் திருவிழாவையொட்டி நடைபெறும் இசை மற்றும் நடன விழா, ஏப்ரல் 3 முதல் 16 வரை…
பிரதமர் நரேந்திர மோடி, ஏப்ரல் 4 அன்று மயிலாப்பூரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் உரையாற்றவுள்ளார். தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு அவர் மேற்கொள்ளும்…