மயிலாப்பூர் பகுதிக்கு புதிய துணை கமிஷனர் திஷா மித்தல்

மயிலாப்பூர் மண்டலத்திற்கு சமீபத்தில் புதிய துணை கமிஷனராக திஷா மித்தல் நியமிக்கப்பட்டுள்ளார். இவருடைய அலுவலகம் மயிலாப்பூர் கச்சேரி சாலையில் உள்ள காவல் நிலைய வளாகத்தில் உள்ளது. இவர் தமிழ்நாட்டில் வெவ்வேறு பகுதிகளில் பணியாற்றி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் தமிழ்நாட்டில் முதலில் சிவகங்கை மாவட்டத்தில் நவம்பர் 2011ல் பணியில் சேர்ந்தார். அவர் பணியில் சேர்ந்த உடனேயே அவரிடம் பெரிய வழக்கு ஒன்று வழங்கப்பட்டது. இந்த வழக்கு பற்றி தமிழ்நாடே பேசியது. சென்னை உயர்நீதி மன்றமும் சிறப்பு கவனம் செலுத்தி விசாரிக்க உத்தரவிட்டது. இந்த வழக்கு மதுரை மாவட்டத்தில் ஒரு பள்ளியின் முதல்வர் அங்கு படிக்க வந்த மாணவிகளை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கியது சம்பந்தமானது. இதை விசாரிக்க டிஎஸ்பி தலைமையில் ஒரு சிறப்பு குழு அமைக்கப்பட்டது. அந்த சிறப்பு குழுவில் திஷா மிட்டல் சிறப்பாக பணியாற்றி ஐந்து மாதத்தில் அறிக்கையை தாக்கல் செய்தார். ஐந்து வருடங்கள் தொடர் விசாரணைக்கு பின் நீதிமன்றத்தில் குற்றம் செய்தவருக்கு தண்டனை வழங்கப்பட்டது. மயிலாப்பூர் புதிய துணை கமிஷனர் அலுவலக தொலைபேசி எண்: 2345 2553 / 2498 2797

<< Photo courtesy daily thanthi >>

admin

Recent Posts

ஆட்டோ ஓட்டுநர்கள், தூய்மை பணியாளர்களுக்கான இலவச கண் பரிசோதனை முகாம். ஆகஸ்ட்.31

ரோட்டரி கிளப் ஆஃப் சென்னை ஐடி சிட்டி, ஸ்ரீ ரமணா கண் மையம் மற்றும் ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்பாளர்கள் நல…

2 weeks ago

இலவச கண் பரிசோதனை முகாம். ஜூலை 27

ஜெயா கண் மருத்துவமனை ஜூலை 27 (ஞாயிற்றுக்கிழமை) அன்று கல்யாண நகர் சங்க வளாகத்தில் - எண்.29, டி.எம்.எஸ். சாலை,…

1 month ago

மெட்ராஸ் தினம் 2025: பவர்பாயிண்ட் புராஜெக்ட் போட்டி. பள்ளி மாணவர்களுக்கு

மெட்ராஸ் தினம் 2025 க்கு, மயிலாப்பூர் டைம்ஸ் பள்ளி அணிகளுக்கான வருடாந்திர பவர்பாயிண்ட் புராஜெக்ட் போட்டியை அறிவித்துள்ளது. இந்தப் போட்டியின்…

2 months ago

111வது ஆண்டில் இராணி மேரி கல்லூரி. எளிய, மகிழ்ச்சியான கொண்டாட்டங்கள்.

இராணி மேரி கல்லூரி வளாகத்தில் இன்று திங்கட்கிழமை காலை ஒரு எளிமையான விழா நடைபெற்றது. இது இந்த கல்லூரியின் 111…

2 months ago

சங்கீதா உணவகத்தில் ரூ.40க்கு மதிய உணவு

சங்கீதாவின் 40வது ஆண்டு விழா கொண்டாட்டங்களில், நகரம் முழுவதும் உள்ள அதன் உணவகங்கள் இப்போது மாறி மாறி வழங்கும் சிறப்பு…

2 months ago

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலுக்கு விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல், புரளி என தெரியவந்துள்ளது

புதன்கிழமை இரவு மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயில் அலுவலகத்திற்கு வெடிகுண்டு வெடிக்கும் என்று கூறி அனுப்பப்பட்ட மின்னஞ்சல் ஒரு புரளி…

2 months ago