மயிலாப்பூர் தொகுதியில் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே பெரும் போட்டி நிலவுகிறது. இது தவிர மக்கள் நீதி மய்யம் மற்றும் நாம் தமிழர் கட்சியும் களத்தில் உள்ளது. திமுக வேட்பாளர் த.வேலு நேற்று இரவு தேர்தல் பிரச்சாரம் முடிந்தவுடன், குப்பம் பகுதிகளிலும் மற்றும் குடிசை மாற்று வாரிய பகுதிகளிலும் அவர் எதிர்பார்த்ததை விட அதிகளவு மக்கள் ஆதரவு திமுகவிற்கு உள்ளதாக தெரிவித்துள்ளார். இவர் தற்போது இரண்டாவது சுற்று தேர்தல் பிரச்சாரத்தை முடித்துள்ளார். இவர் ஏற்கனெவே சென்னை கவுன்சிலராக இருந்த போது கேசவப்பெருமாள்புரம், ஸ்ரீனிவாசபுரத்தில் செய்த வேலைகளை மக்கள் நினைத்து ஆதரவளிப்பர் என்று நம்பிக்கை இருப்பதாக கூறுகிறார். இன்று மாலை எட்டு மணியளவில் திமுக தலைவர் ஸ்டாலின் அவர்கள் அம்பேத்கார் பாலம் அருகே தேர்தல் பிரச்சாரம் செய்ய வரவிருப்பதாக வேலு அவர்கள் நமக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். அதற்கு பின் வேலு மீண்டும் ஒரு இரண்டு சுற்று தேர்தல் பிரச்சாரம் செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மந்தைவெளி தபால் நிலையத்திற்கு அருகிலுள்ள ஆர். கே. மட சாலையில் அப்பல்லோ மருந்தகம் திறக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய விசாலமான மருந்தகத்தில்…
‘கலா உத்சவ்’ என்பது அக்டோபர் 19 வரை ஆழ்வார்பேட்டை கடையில் நடைபெறும் கைவினைக் கண்காட்சி மற்றும் விற்பனை ஆகும். இது…
ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்பாளர்கள் சங்கம் (RAPRA) சில ஆண்டுகளாக இந்த சுற்றுப்புறத்தில் உள்ள சென்னை பள்ளிகள் மற்றும் அரசு உதவி…
ஆழ்வார்பேட்டை காந்தி அமைதி அறக்கட்டளை தனது அலுவலக வளாகத்தில், வரும் அக்டோபர் 2-ஆம் தேதி (மகாத்மா காந்தியின் 156-ஆம் ஜெயந்தியை…
இந்து சமய அறநிலையத்துறை விவகாரங்களுக்கான மாநில அமைச்சர் பி.கே. சேகர் பாபு, செப்டம்பர் 22 மாலை மயிலாப்பூர் வெங்கடேச அக்ரஹாரத்…
தீபாவளி லேகியம் வாங்க இடம் தேடுகிறீர்களா? அதற்கு ஒரு சிறந்த இடம் மயிலாப்பூரில் உள்ள வெங்கட்ரமணா ஆயுர்வேத மருந்தகம். இது…