மயிலாப்பூர் தொகுதியில் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே பெரும் போட்டி நிலவுகிறது. இது தவிர மக்கள் நீதி மய்யம் மற்றும் நாம் தமிழர் கட்சியும் களத்தில் உள்ளது. திமுக வேட்பாளர் த.வேலு நேற்று இரவு தேர்தல் பிரச்சாரம் முடிந்தவுடன், குப்பம் பகுதிகளிலும் மற்றும் குடிசை மாற்று வாரிய பகுதிகளிலும் அவர் எதிர்பார்த்ததை விட அதிகளவு மக்கள் ஆதரவு திமுகவிற்கு உள்ளதாக தெரிவித்துள்ளார். இவர் தற்போது இரண்டாவது சுற்று தேர்தல் பிரச்சாரத்தை முடித்துள்ளார். இவர் ஏற்கனெவே சென்னை கவுன்சிலராக இருந்த போது கேசவப்பெருமாள்புரம், ஸ்ரீனிவாசபுரத்தில் செய்த வேலைகளை மக்கள் நினைத்து ஆதரவளிப்பர் என்று நம்பிக்கை இருப்பதாக கூறுகிறார். இன்று மாலை எட்டு மணியளவில் திமுக தலைவர் ஸ்டாலின் அவர்கள் அம்பேத்கார் பாலம் அருகே தேர்தல் பிரச்சாரம் செய்ய வரவிருப்பதாக வேலு அவர்கள் நமக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். அதற்கு பின் வேலு மீண்டும் ஒரு இரண்டு சுற்று தேர்தல் பிரச்சாரம் செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
கேசவபெருமாள்புரம், கிரீன்வேஸ் சாலை, ஆர்.ஏ. புரம், ஸ்ரீ சக்தி விநாயகர் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் அன்ன பாவடை விழா சமீபத்தில்…
ஆர்.ஏ.புரத்தில் உள்ள தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியின் (தமிழ்நாடு டாக்டர். ஜே. ஜெயலலிதா இசை மற்றும் கலை பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது)…
மயிலாப்பூர், ஆர் ஆர் சபாவில் மே 30, இன்று வெள்ளிக்கிழமை, ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ என்ற தமிழ் திரைப்படம் திரையிடப்படுகிறது. இந்த…
பி.எஸ். உயர்நிலைப் பள்ளி (வடக்கு) 1977 பேட்ச் எஸ்.எஸ்.எல்.சி (11 'ஏ' பிரிவு) 'பழைய மாணவர்கள்' சமீபத்தில் மயிலாப்பூரில் உள்ள…
உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு ஜூன் 5 அன்று நடைபெறும் ‘மயிலையை மறுசுழற்சி செய்தல் - 21 நாள் சவால்’…
ராணி மேரி கல்லூரி வளாகத்தில் இப்போது ஒரு புதிய விடுதி துவங்கப்பட்டுள்ளது. முதல்வர் எம்.கே. ஸ்டாலின் மே 21 அன்று…