மயிலாப்பூர் தொகுதியில் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே பெரும் போட்டி நிலவுகிறது. இது தவிர மக்கள் நீதி மய்யம் மற்றும் நாம் தமிழர் கட்சியும் களத்தில் உள்ளது. திமுக வேட்பாளர் த.வேலு நேற்று இரவு தேர்தல் பிரச்சாரம் முடிந்தவுடன், குப்பம் பகுதிகளிலும் மற்றும் குடிசை மாற்று வாரிய பகுதிகளிலும் அவர் எதிர்பார்த்ததை விட அதிகளவு மக்கள் ஆதரவு திமுகவிற்கு உள்ளதாக தெரிவித்துள்ளார். இவர் தற்போது இரண்டாவது சுற்று தேர்தல் பிரச்சாரத்தை முடித்துள்ளார். இவர் ஏற்கனெவே சென்னை கவுன்சிலராக இருந்த போது கேசவப்பெருமாள்புரம், ஸ்ரீனிவாசபுரத்தில் செய்த வேலைகளை மக்கள் நினைத்து ஆதரவளிப்பர் என்று நம்பிக்கை இருப்பதாக கூறுகிறார். இன்று மாலை எட்டு மணியளவில் திமுக தலைவர் ஸ்டாலின் அவர்கள் அம்பேத்கார் பாலம் அருகே தேர்தல் பிரச்சாரம் செய்ய வரவிருப்பதாக வேலு அவர்கள் நமக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். அதற்கு பின் வேலு மீண்டும் ஒரு இரண்டு சுற்று தேர்தல் பிரச்சாரம் செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் வியாழக்கிழமை மாலை (டிசம்பர் 4) கார்த்திகை தீப விழா தொடங்கிய நேரத்தில், லேசான,…
மந்தைவெளி ராஜா தெரு குடியிருப்பாளர்கள் நலச் சங்கம் அதன் பொங்கல் விழாவின் ஒரு பகுதியாக “ஊடக உலகம்” என்ற கருப்பொருளை…
‘பசுமை பயணம்’ என்ற கருப்பொருளில் நடத்தப்படும் மாரத்தான் சைக்கிள் ஓட்டுதல் முயற்சியின் இறுதி நிகழ்வு நவம்பர் 20, காலை 11.30…
மயிலாப்பூர், பஜார் சாலையில் உள்ள டீக்கடை உரிமையாளர் ஒருவர் தெரு நாயை அடித்துக் கொன்றதற்காக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, ஸ்டேஷன்…
ஆர்.ஏ. புரத்தில் உள்ள துர்காபாய் தேஷ்முக் பொது மருத்துவமனை நவம்பர் 18 அன்று காலை 8.30 மணி முதல் பிற்பகல்…
மயிலாப்பூர் எம்.எல்.ஏ. தா. வேலு, விளம்பரதாரர்களால் மோசமாக ஏமாற்றப்பட்டதாகக் கூறும் மயிலாப்பூர் நிதியின் வைப்பாளர்கள் தங்கள் வழக்கை முதல்வர் அல்லது…