மயிலாப்பூர் தொகுதியில் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே பெரும் போட்டி நிலவுகிறது. இது தவிர மக்கள் நீதி மய்யம் மற்றும் நாம் தமிழர் கட்சியும் களத்தில் உள்ளது. திமுக வேட்பாளர் த.வேலு நேற்று இரவு தேர்தல் பிரச்சாரம் முடிந்தவுடன், குப்பம் பகுதிகளிலும் மற்றும் குடிசை மாற்று வாரிய பகுதிகளிலும் அவர் எதிர்பார்த்ததை விட அதிகளவு மக்கள் ஆதரவு திமுகவிற்கு உள்ளதாக தெரிவித்துள்ளார். இவர் தற்போது இரண்டாவது சுற்று தேர்தல் பிரச்சாரத்தை முடித்துள்ளார். இவர் ஏற்கனெவே சென்னை கவுன்சிலராக இருந்த போது கேசவப்பெருமாள்புரம், ஸ்ரீனிவாசபுரத்தில் செய்த வேலைகளை மக்கள் நினைத்து ஆதரவளிப்பர் என்று நம்பிக்கை இருப்பதாக கூறுகிறார். இன்று மாலை எட்டு மணியளவில் திமுக தலைவர் ஸ்டாலின் அவர்கள் அம்பேத்கார் பாலம் அருகே தேர்தல் பிரச்சாரம் செய்ய வரவிருப்பதாக வேலு அவர்கள் நமக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். அதற்கு பின் வேலு மீண்டும் ஒரு இரண்டு சுற்று தேர்தல் பிரச்சாரம் செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலின் மூன்று நாள் தைப்பூசத் தெப்பத்திருவிழா ஞாயிற்றுக்கிழமை மாலை (பிப்ரவரி 1) தொடங்கியது. கபாலீஸ்வரப் பெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட…
லஸ் அவென்யூவில் உள்ள நாகேஸ்வர ராவ் பூங்காவின் ஒரு பகுதி இப்போது ஒரு வறண்ட மைதானம் போல் காட்சியளிக்கிறது. செவ்வாய்க்கிழமை…
2026 ஆம் ஆண்டுக்கான ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலின் மூன்று நாள் தெப்பத் திருவிழா பிப்ரவரி 1 முதல் 3 வரை…
101வது பழைய பீடியன்ஸ் அஸோஸியேஷனின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு, ஜனவரி 26 அன்று சாந்தோம், செயின்ட் பீட்ஸ் ஆங்கிலோ-இந்தியன் மேல்நிலைப்…
உங்கள் பொங்கல் கொண்டாட்டத்திற்காக அழகாக வடிவமைக்கப்பட்ட மண்பானைகளைத் தேடுகிறீர்களா? அப்படியானால், இங்குள்ள சாய் பாபா கோவில் அருகே வெங்கடேச அக்ரஹாரம்…
மயிலாப்பூரில் வருடந்தோறும் ஜனவரி தொடக்கத்தில் நடைபெறும் சுந்தரம் பைனான்ஸின் மயிலாப்பூர் விழா ஜனவரி 8 ம் தேதி காலை 7…