இன்று மாலை நான்கு மணிமுதல் வாக்குச்சாவடிகளில் சுறுசுறுப்பாக தேர்தலுக்கான வேலைகள் நடைபெற்று வருகிறது. காலையில் வேலைகள் மெதுவாகவே நடந்தது. ஈவிம் இயந்திரம் தவிர மற்ற அனைத்து பொருட்களும் வந்திறங்கிவிட்டது. வாக்குச்சாவடி ஊழியர்களும் வந்துள்ளனர். காவல்துறை ஊழியர்களும் பணியில் உள்ளனர். தேனாம்பேட்டை, ஆழ்வார்பேட்டை, மயிலாப்பூர் பகுதிகளில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வேட்பாளரின் பெயர் மற்றும் சின்னம் ஒட்டும் பணி தொடங்கி நடைபெற்றுவருகிறது. இந்த வேலைகள் இரவுக்குள் முடிந்துவிடும்.
கோவிட் 19 தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது வைரஸ் அறிகுறி உள்ளவர்கள், வாக்களிக்க ஆர்வமுள்ளவர்கள் அவர்களுக்கு நியமிக்கப்பட்ட வாக்குச்சாவடியில் வாக்களிக்க அனுமதிக்கப்படுவார்கள் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. ஆனால் இது மாலை 6 மணி முதல் 7 மணி வரை மட்டுமே.
அரசு வழங்கும் கவச உடை அணிந்து வந்த பின்னரே வாக்களிக்க அனுமதிக்கப்படுவார்கள். இந்த கவச உடைகள் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சேமித்து வைக்கப்பட்டுள்ளது. வாக்களித்த உடன் கவச உடைகள் திரும்பபெறப்பட்டு அழிக்கப்படும்.
மிகப்பெரிய அளவில் புதுப்பிக்கப்பட்ட தொல்காப்பிய பூங்கா இன்னும் பொதுமக்களுக்கு திறக்கப்படவில்லை, இருப்பினும் இந்த திட்டத்திற்கு பொறுப்பான மாநில அமைச்சர் அனைத்து…
லஸ் சர்க்கிளைச் சுற்றி தங்கள் வியாபாரத்தை நடத்தி வந்த வியாபாரிகள், மயிலாப்பூரில் உள்ள முண்டகக்கண்ணி அம்மன் கோயில் எம்ஆர்டிஎஸ் நிலையத்திற்குச்…
மாநில மதுபான வர்த்தக நிறுவனமான டாஸ்மாக்கில் ரூ.1000 கோடி மதிப்பிலான மோசடி தொடர்பான விசாரணை தொடர்பாக, ஆர்.ஏ. புரத்தில் உள்ள…
அந்தி பொழுதில் பி.எஸ். பள்ளி மண்டலத்தில் உள்ள ராமகிருஷ்ண மடம் சாலையில் நீங்கள் நடந்து சென்றால், நன்கு ஒளிரும் பசுமை…
கற்பகதாசன் என்ற புனைப்பெயரைப் பயன்படுத்தும் அமெரிக்க ஒன்றியத்தில் பயிற்சி பெற்ற ஒவ்வாமை நிபுணர் டாக்டர் ஸ்ரீதரன், தான் எழுதிய பக்தி…
மயிலாப்பூரில் உள்ள பி.எஸ். சீனியர் மேல்நிலைப் பள்ளி, உயர்நிலைப் பள்ளி தனது மாணவர்களுக்கான சமூக சேவை நிகழ்வுகளை ஏற்பாடு செய்ய…