நாளை நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குச்சாவடிகள் தயார்நிலையில் உள்ளது. நேற்று இரவு சில வாக்குச்சாவடிகளில் தடுப்புக்கட்டைகள் கட்டும் பணி நடைபெற்றுவந்தது. இன்று காலை மயிலாப்பூர் இராணி மெய்யம்மை பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் காவல்துறையை சேர்ந்த அதிகாரிகள் சுமார் ஐம்பது நபர்கள் நாளை வாக்குச்சாவடியில் எவ்வாறு பணியாற்ற வேண்டும் என்று விவாதித்தனர். மேலும் காலை பத்து மணியளவில் தேர்தல் நடத்தும் வாக்குச்சாவடி அதிகாரிகளும் வந்தனர். தேர்தலுக்கு தேவையான பொருட்களும் வந்து இறங்கியுள்ளது. இந்த வாக்குசாவடி மயிலாப்பூரில் ஒரு பெரிய வாக்குச்சாவடியாகும். இந்த முறை கோவிட் காரணமாக வாக்குச்சாவடிகள் அதிகரிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆர்.ஏ. புரத்தில் ஆந்திர மகிளா சபாவுக்குச் சொந்தமான பரந்த நிலப்பகுதியின் பெரும்பகுதி சமப்படுத்தப்பட்டு, புதிய மருத்துவமனை ஒன்றை அமைப்பதற்கான பணிகள்…
E1 மயிலாப்பூர் காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமையன்று வாராந்திர குறைகேட்புக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. காவல் உதவி ஆய்வாளர் முத்துகிருஷ்ணன் மற்றும்…
மெரினா கடற்கரையில் மற்றொரு 'ப்ளூ ஃபிளாக்' பகுதிக்கான இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இது கலங்கரை விளக்கத்திற்கு அருகிலும், காமராஜர்…
மயிலாப்பூர் எம்.எல்.ஏ.-வும் மாநில அமைச்சருமான பி. வெங்கடரமணன், ஆழ்வார்பேட்டையில் தனது அலுவலகத்தைத் திறந்ததிலிருந்து, அப்பகுதி மக்கள், சமூகத் தலைவர்கள் மற்றும்…
இந்த கடும் கோடைக்காலத்தில் சுவையான நுங்குகளை வாங்கிச் சுவையுங்கள். சாய்பாபா கோயில் அருகிலுள்ள வெங்கடேச அக்ரஹாரம் தெருவில், ரவி மற்றும்…
இராணி மேரி கல்லூரியில் சேர விரும்புவோர் இப்போது விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதியைத் தவறவிட்டவர்கள் www.tngasa.in என்ற இணையதளத்தின்…