தேர்தல் 2021

தேர்தல் 2021: கோவிட்19 தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் வாக்களிக்க அனுமதி. மாலை 6 மணி முதல் 7 மணி வரை.

இன்று மாலை நான்கு மணிமுதல் வாக்குச்சாவடிகளில் சுறுசுறுப்பாக தேர்தலுக்கான வேலைகள் நடைபெற்று வருகிறது. காலையில் வேலைகள் மெதுவாகவே நடந்தது. ஈவிம் இயந்திரம் தவிர மற்ற அனைத்து பொருட்களும் வந்திறங்கிவிட்டது. வாக்குச்சாவடி ஊழியர்களும் வந்துள்ளனர். காவல்துறை ஊழியர்களும் பணியில் உள்ளனர். தேனாம்பேட்டை, ஆழ்வார்பேட்டை, மயிலாப்பூர் பகுதிகளில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வேட்பாளரின் பெயர் மற்றும் சின்னம் ஒட்டும் பணி தொடங்கி நடைபெற்றுவருகிறது. இந்த வேலைகள் இரவுக்குள் முடிந்துவிடும்.

கோவிட் 19 தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது வைரஸ் அறிகுறி உள்ளவர்கள், வாக்களிக்க ஆர்வமுள்ளவர்கள் அவர்களுக்கு நியமிக்கப்பட்ட வாக்குச்சாவடியில் வாக்களிக்க அனுமதிக்கப்படுவார்கள் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. ஆனால் இது மாலை 6 மணி முதல் 7 மணி வரை மட்டுமே.

அரசு வழங்கும் கவச உடை அணிந்து வந்த பின்னரே வாக்களிக்க அனுமதிக்கப்படுவார்கள். இந்த கவச உடைகள் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சேமித்து வைக்கப்பட்டுள்ளது. வாக்களித்த உடன் கவச உடைகள் திரும்பபெறப்பட்டு அழிக்கப்படும்.

admin

Recent Posts

கோடை காலத்திற்காக சித்திரகுளத்தில் தற்காலிக குடிநீர் பந்தலை எம்எல்ஏ திறந்து வைத்தார்

மயிலாப்பூர் எம்.எல்.ஏ., தா.வேலு கடந்த வார இறுதியில் மயிலாப்பூர் சித்திரகுளம் அருகே பொதுமக்களுக்காக குடிநீர் பந்தலை திறந்து வைத்தார். தேவைப்படுபவர்களுக்கு…

10 hours ago

பேருந்து நிறுத்தங்களில் தங்குமிடங்களுக்கான பயணிகளின் வேண்டுகோளுக்கு சென்னை மெட்ரோ இறுதியாக பதிலளித்துள்ளது.

கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு மெட்ரோ ரயில் பாதை பணியின் காரணமாக பேருந்துகள் மாற்றுப்பாதையில் திருப்பிவிடப்பட்டது. எம்டிசி பேருந்து நிறுத்தங்களில்…

11 hours ago

மெரினா லூப் சாலையில் சாலை மறியல்; மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்

பட்டினப்பாக்கத்தில் உள்ள மெரினா லூப் சாலை மற்றும் டாக்டர் டி.ஜி.எஸ்.தினகரன் சாலை சந்திப்பில் வெள்ளிக்கிழமை சாலை மறியல் சம்பவம் நடந்தது,…

1 day ago

இளைஞர்களுக்கான புகைப்பட பயிற்சி முகாம் இன்று தொடங்குகிறது. இதை மயிலாப்பூர் எம்எல்ஏ துவக்கி வைக்கிறார்.

மயிலாப்பூர் எம்.எல்.ஏ., தா.வேலு, ஆண்டுதோறும் நடத்துவது போல், இன்று, மே 4 முதல், இளைஞர்களுக்கான ‘புகைப்பட பயிற்சி முகாமை துவக்கி…

2 days ago

மயிலாப்பூரில் நடைபெற்ற மகாராஷ்டிர தின நிகழ்ச்சியில் மாநில ஆளுநர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்

மகாராஷ்டிர சங்கம் சென்னை மயிலாப்பூரில் உள்ள சமஸ்கிருத கல்லூரி ஆடிட்டோரியத்தில் சத்ரபதி சிவாஜி ஜெயந்தி மற்றும் மகாராஷ்டிரா தினத்தை மே…

4 days ago

எம்.எல்.ஏ., ஸ்பான்சர்களுடன் சேர்ந்து, பெண்களுக்கான இலவச தையல் பயிற்சி முகாமை நடத்துகிறார்.

மயிலாப்பூரில் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் சுமார் 30 பெண்கள் தற்போது மந்தைவெளிப்பாக்கத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் இலவச தையல் பயிற்சி…

4 days ago