தேர்தல் 2021: மக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளர் நடிகை ஸ்ரீப்ரியாவின் தேர்தல் பிரச்சாரம்

மயிலாப்பூர் தொகுதியில் நடிகர் கமலஹாசனின் மக்கள் நீதி மய்யத்தின் சார்பாக போட்டியிடுபவர் நடிகை ஸ்ரீப்ரியா. இவர் ராஜா அண்ணாமலைபுரத்தில் வசித்து வருகிறார். மக்கள் நீதி மய்யத்தின் மயிலாப்பூர் பகுதி தேர்தல் பிரச்சாரம் ஆங்காங்கே குறைந்த அளவில் நடைபெறுகிறது. மேலும் மக்கள் நீதி மய்யத்தின் சார்பாக மயிலாப்பூர் பகுதிக்கான திட்ட அறிக்கைகள் பற்றிய தகவல் ஏதும் இல்லை. இன்று காலை மந்தைவெளி செயின்ட். ஜான்ஸ் பள்ளி அருகே ஆட்டோ ரிக்ஷா மூலம் பிரச்சாரம் செய்ய திட்டமிட்டிருந்தனர். அதே நேரத்தில் நாளை கமலஹாசன் மயிலாப்பூர் பகுதியில் பிரச்சாரம் செய்யவுள்ளதாக அலுவலகத்தில் இருந்து தகவல் வரவே நாளையே ஸ்ரீபிரியாவின் பிரச்சாரமும் செய்ய திட்டமிட்டிருக்கின்றனர். மக்கள் நீதி மய்யத்தின் சார்பாக போட்டியிடும் வேட்பாளர் நடிகை ஸ்ரீப்ரியா மயிலாப்பூர் பகுதிக்கு சரியான பிரச்சார திட்டங்கள் மற்றும் அறிக்கைகள் ஏதும் தயாரிக்கவில்லை என்றே தோன்றுகிறது.

admin

Recent Posts

அல்போன்சா மைதானத்தில் நடைபெற்ற ‘மாஸ்டர்ஸ்’ டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்

தமிழ்நாடு மாஸ்டர்ஸ் மாநில டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்பை சமீபத்தில் மந்தை வெளிப்பாக்கம் அல்போன்சா மைதானத்தில் உள்ள ஜி.சி.சி உட்புற மைதானத்தில்…

9 hours ago

தெற்கு கால்வாய் கரை சாலையில் உள்ள ஜி.சி.சி விளையாட்டு மைதானத்திற்கு புதிய சுற்றுச்சுவர் கட்டப்பட உள்ளது

மந்தைவெளிப்பாக்கம் தெற்கு கால்வாய் கரை சாலையில் உள்ள ஜி.சி.சி விளையாட்டு மைதானத்திற்கு புதிய சுற்றுச்சுவர் கட்டப்படுகிறது. (இந்த இடம் பொதுவாக…

20 hours ago

சாய்பாபா கோயிலுக்கு அருகிலுள்ள கடைகள் இடிப்பு. நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட நிர்வாகிகள் நடவடிக்கை.

மயிலாப்பூர், வெங்கடேச அக்ரஹாரம் தெருவில் உள்ள சாய்பாபா கோயில் வளாகத்தில் கட்டப்பட்ட சுமார் 30க்கும் மேற்பட்ட கடைகளை குடிமைப் பணியாளர்கள்…

2 days ago

மகளிர் தினத்தை முன்னிட்டு பல்வேறு இடங்களில் சிறப்பு நிகழ்ச்சிகள் மற்றும் கடைகளில் சிறப்பு சலுகைகள்

பெண்களுக்கான யோகா இலவச அனுபவம்; அடிப்படை பயிற்சி மந்தைவெளியில் உள்ள யோகா ஃபார் வெல்னஸ் ஸ்டுடியோவில். மார்ச் 8 காலை.…

3 days ago

மயிலாப்பூர் பள்ளி மாணவர்களுக்கான ‘அமைதி கிளப்புகள்’. இறுதிப் போட்டி.

காந்தி அமைதி அறக்கட்டளை, மெட்ராஸ் சமீபத்தில் சில உள்ளூர் பகுதி பள்ளிகளில் 2025–2026 கல்வியாண்டிற்கான 'பள்ளிகளில் அமைதி கிளப்புகள்' திட்டத்தை…

1 week ago

ஆர்.ஏ.புரத்தில் நவீன நூலகம் திறக்கப்பட்டது. மாணவர்களுக்கான படிப்பு அரங்கம், குழந்தைகளுக்கான பிரிவும் உள்ளது.

ஆர்.ஏ.புரத்தில் நவீன நூலகம் முறையாகத் திறக்கப்பட்டுள்ளது. தற்போதைய திமுக அரசாங்கத்தின் 'முதல்வர் படிப்பகம்' திட்டத்தின் கீழ் இது ஒரு சிஎம்டிஏ…

1 week ago