ஆர்.ஏ.புரம் மண்டலத்திலிருந்து வெளியேற்றப்படும் குடும்பங்களுக்கு மயிலாப்பூரில் தங்கும் இடம் வழங்கப்படும் என முதல்வர் அறிவிப்பு.

சுப்ரீம் கோர்ட் உத்தரவையடுத்து, ஆக்கிரமிப்பு பகுதியில் வசித்து வந்தவர்களை வெளியேற்றும் திட்டத்தின் ஒரு பகுதியாக, கோவிந்தசுவாமி நகர் (ஆர்.ஏ.புரம் மண்டலம்) பகுதியில் வசிப்பவர்கள், மயிலாப்பூர் மற்றும் மந்தைவெளியில் மீண்டும் குடியமர்த்தப்படுவார்கள் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இங்கிருந்து ஏற்கனெவே வெளியேற்றப்பட்ட குடியிருப்பாளர்கள் (சிலர் ஏற்கனவே பெரும்பாக்கத்தில் உள்ள குடியிருப்புகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர்) மயிலாப்பூர் மண்டலத்தில் பல இடங்களில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் கட்டும் புதிய குடியிருப்புத் கட்டிடங்களில் தங்கலாம்.

திங்களன்று, நகரில் பாதிக்கப்பட்ட சமூகத்தினர் எம்.ஆர்.டி.எஸ் ரயில் நிலைய வளாகத்திற்கு அருகிலுள்ள பிரதான சாலையில் நீண்ட, தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒருவர் தீக்குளித்து பின்னர் இறந்தார்.

மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக இந்த நகரில் வசிப்பதாகவும், மின்சாரம் மற்றும் தண்ணீர் கட்டணம் செலுத்தியுள்ளதாகவும் குடியிருப்பாளர்கள் கூறினர்; அவர்களை தொலைதூர வளாகங்களுக்கு மாற்றுவதன் மூலம், அவர்களின் வாழ்வாதாரம் மற்றும் அவர்களின் குழந்தைகளின் படிப்பு மோசமாக பாதிக்கப்படும் என்று சிலர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர திட்டமிட்டுள்ளனர்.

admin

Recent Posts

இலவச கண் பரிசோதனை முகாம். ஜூலை 27

ஜெயா கண் மருத்துவமனை ஜூலை 27 (ஞாயிற்றுக்கிழமை) அன்று கல்யாண நகர் சங்க வளாகத்தில் - எண்.29, டி.எம்.எஸ். சாலை,…

4 hours ago

மெட்ராஸ் தினம் 2025: பவர்பாயிண்ட் புராஜெக்ட் போட்டி. பள்ளி மாணவர்களுக்கு

மெட்ராஸ் தினம் 2025 க்கு, மயிலாப்பூர் டைம்ஸ் பள்ளி அணிகளுக்கான வருடாந்திர பவர்பாயிண்ட் புராஜெக்ட் போட்டியை அறிவித்துள்ளது. இந்தப் போட்டியின்…

2 weeks ago

111வது ஆண்டில் இராணி மேரி கல்லூரி. எளிய, மகிழ்ச்சியான கொண்டாட்டங்கள்.

இராணி மேரி கல்லூரி வளாகத்தில் இன்று திங்கட்கிழமை காலை ஒரு எளிமையான விழா நடைபெற்றது. இது இந்த கல்லூரியின் 111…

2 weeks ago

சங்கீதா உணவகத்தில் ரூ.40க்கு மதிய உணவு

சங்கீதாவின் 40வது ஆண்டு விழா கொண்டாட்டங்களில், நகரம் முழுவதும் உள்ள அதன் உணவகங்கள் இப்போது மாறி மாறி வழங்கும் சிறப்பு…

2 weeks ago

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலுக்கு விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல், புரளி என தெரியவந்துள்ளது

புதன்கிழமை இரவு மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயில் அலுவலகத்திற்கு வெடிகுண்டு வெடிக்கும் என்று கூறி அனுப்பப்பட்ட மின்னஞ்சல் ஒரு புரளி…

3 weeks ago

மெரினா கடற்கரையின் ஒரு பகுதியை இராணி மேரி கல்லூரி மாணவிகள் சுத்தம் செய்தனர்.

ரோட்டரி சர்வதேச மாவட்டம் 3234, இராணி மேரி கல்லூரியைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகளுடன் இணைந்து பெரிய அளவிலான…

3 weeks ago