மெரினாவில் மீனவர்களால் அனுசரிக்கப்பட்ட சுனாமி நினைவு தினம்.

2004 ஆம் ஆண்டு டிசம்பர் 26-ம் தேதி காலை மெரினா கடற்கரையை சுனாமி தாக்கி பேரழிவை ஏற்படுத்தியது. இதில் ஏராளமானோர் உயிரிழந்தனர். சுனாமி தாக்கி உயிரிழந்தவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு மெரினா குப்பத்தில் உள்ள மீனவர்கள் கடற்கரையில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

இன்று காலை, ஒவ்வொரு குப்பத்திலும் ஆண்களும் பெண்களும் அடங்கிய சிறு குழுக்கள் கடலருகே உள்ள மணற்பரப்பில் பாரம்பரிய சடங்குகளை நடத்தி, தண்ணீருக்கு நடந்து சென்று காணிக்கை செலுத்தி, தங்களை பாதுகாக்குமாறு கடலிடம் பிரார்த்தனை செய்தனர்.

முள்ளிமா நகர் மற்றும் சீனிவாசபுரத்தில் உள்ள மீனவக் குழுக்கள் இந்த சடங்கை காலை 8.30 மணிக்கு கடற்கரையில் நடத்தினர், பின்னர் ஞாயிற்றுக்கிழமை என்பதால் விற்பனைக்காக தங்கள் மீன் கடைகளைத் திறந்தனர்.

செய்தி மற்றும் புகைப்படம் : கவிதா பென்னி

Verified by ExactMetrics