லேடி சிவசாமி அய்யர் பெண்கள் பள்ளியின் மூத்த ஆசிரியர்கள் நான்கு பேர் கௌவுரவிக்கப்பட்டனர்.

தேர்வு அட்டவணையில் ஏற்பட்ட இடைவெளி லேடி சிவசாமி ஐயர் பெண்கள் பள்ளியின் நிர்வாகம் பள்ளி வளாகத்தில் ஒரு சிறப்பு நிகழ்வை நடத்த ஏதுவாக அமைந்தது, அங்கு நான்கு ஆசிரியர்கள் மீது கவனம் செலுத்தப்பட்டது.

டிசம்பர் 18, செவ்வாய்க் கிழமை காலை, 40 வருட சேவைக்குப் பிறகு ஓய்வுபெறும் மூத்த ஆசிரியை டாக்டர் வி. உமா, மேலும் மற்ற மூன்று ஆசிரியைகளின் நீண்ட சேவையைப் பாராட்டி விழா நடைபெற்றது.

விழாவானது நான்கு ஆசிரியர்களையும் பள்ளி இசைக்குழுவினர் மற்றும் அவர்களது சக ஊழியர்களையும் அரங்கிற்கு அழைத்துச் சென்ற சம்பிரதாய வரவேற்புடன் தொடங்கியது.

வத்சலா நாராயணசுவாமி, இதையும் மற்ற இரண்டு பள்ளிகளையும் நிர்வகிக்கும் சொசைட்டியின் உறுப்பினர், வயது முதிர்ந்த போதிலும்; நான்கு ஆசிரியர்களையும் ஆசீர்வதித்தார்.

இவ்விழாவில் பள்ளி தலைமை ஆசிரியை மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

செய்தி: மதன் குமார்

Verified by ExactMetrics