இந்தியாவின் 75வது சுதந்திரதினம் மற்றும் அப்பல்லோ மருத்துவமனையின் 40வது ஆண்டு விழாவை முன்னிட்டு, எம்ஆர்சி நகர் & ஆழ்வார்பேட்டையில் உள்ள அப்பல்லோ ஸ்பெக்ட்ரா மல்டி-ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை ஆகஸ்ட் 15 முதல் செப்டம்பர் 18 வரை இலவச சலுகையுடன் கூடிய மருத்துவ பராமரிப்பு திட்டத்தை அறிமுகப்படுத்துகிறது.
இந்த இலவச மருத்துவ சேவையில் அப்பல்லோவின் நிபுணத்துவத்தைப் பகிர்ந்துகொள்வது மற்றும் நல்ல ஆரோக்கியத்தை உறுதிசெய்வதற்காக தனிப்பட்ட சுகாதார விஷயங்களில் வழிகாட்டுதலை வழங்குவது ஆகியவை அடங்கும். மயிலாப்பூர்வாசிகள் பின்வரும் சேவைகளில் ஏதேனும் அல்லது அனைத்தையும் இலவசமாகத் தேர்வு செய்யலாம்: அடிப்படை மருத்துவ சேவை, இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு சோதனை, கண் பரிசோதனை, ENT மற்றும் பல் பரிசோதனை, மருத்துவ பதிவுகள் மற்றும் பரிந்துரைகள் டிஜிட்டல் மயமாக்கல், தனிப்பயனாக்கப்பட்ட ஊட்டச்சத்து மற்றும் வாழ்க்கை முறை திட்டம் மற்றும் சில.
இதில் பயன் பெற பதிவுகள் இப்போது தொடங்கப்பட்டுள்ளது; சிறப்பு சேவைகளைப் பயன்படுத்துவதற்கான போக்குவரத்து மருத்துவமனையால் ஏற்பாடு செய்யப்படும். மருத்துவமனைகயின் மக்கள் தொடர்பாளர் பிரிவின் செய்தி குறிப்பு கூறுகிறது.
மேலும் விவரங்களுக்கு – ராமநாதன் லக்ஷ்மணன் / மேலாளர்- செயல்பாடுகள்/ அப்பல்லோ ஸ்பெக்ட்ரா மருத்துவமனைகள் – எம்.ஆர்.சி நகர் தொலைபேசி எண்: 044 66862000, 6380742387
'இணையக் குற்றங்களில் பண இழப்பு: தடுப்பு முறைகளும் பாதுகாப்பு நடவடிக்கைகளும்' – இதுவே, 'சென்னை ஃப்ரெண்ட்ஸ் ஃபோரம்' (Chennai Friends…
நந்தலாலா மருத்துவ அறக்கட்டளையின் சார்பில் மார்ச் 22 அன்று காலை 9:30 மணி முதல் பிற்பகல் 12:30 மணி வரை…
ஸ்பீடு போஸ்ட் மூலம் பதிவு செய்யப்படும் கடிதங்கள் அல்லது உறைகள், முக்கிய நகரங்களுக்கு 24 மணி நேரத்திற்குள் விநியோகிக்கப்படும் என்று…
மயிலாப்பூரில் அமைந்துள்ள ஸ்ரீ வேதாந்த தேசிகர் ஆலயத்தின் மகா சம்ப்ரோக்ஷணம் (குடமுழக்கு விழா), திங்கள்கிழமை, மார்ச் 16 அன்று காலை…
தமிழக சட்டமன்றத் தேர்தல்கள் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மார்ச் 15 மாலை முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. அரசு…
தொல்காப்பியப் பூங்காவின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள அடையாறு முகத்துவாரம் வற்றி வருகிறது. பூங்காவின் கிழக்குப் பகுதியிலிருந்து, அலைகளின் மூலம் வரும்…