Vector illustration in flat style
சென்னை மாநகராட்சி ஆழ்வார்பேட்டையில் கம்யூனிட்டி கல்லூரியை (சமுதாய கல்லூரி) நடத்தி வருகின்றனர். இந்த கல்லூரியில் லேப் டெக்னீசியன், ரேடியோலஜி, ஸ்போக்கன் இங்கிலீஷ், கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்ஸ் போன்ற ஓராண்டு டிப்ளமோ படிப்புகளுக்கு சேர்க்கை நடைபெற்றுவருகிறது. ஓராண்டுக்கு ரூபாய் 1500 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. மாணவர் சேர்க்கை செப்டம்பர் மாத இறுதி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வகுப்புகள் காலை நேரத்திலும் பயிற்சிகள் மாலையிலும் நடத்தப்படும். மெடிக்கல் சம்பந்தமான படிப்புகளுக்கு அருகில் உள்ள காவேரி மருத்துவமனையில் பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இங்கு சேரலாம்.
ஓய்வுபெற்ற சென்னை மாநகராட்சி பள்ளியின் தலைமையாசிரியர் சங்கரநாராயணன் இந்த கல்லூரியின் நிர்வாகியாக செயல்பட்டு வருகிறார். இவர் இந்த படிப்புகள் சம்பந்தமான விவரங்களை அருகிலுள்ள சென்னை மாநகராட்சி பள்ளிகளுக்கு தெரிவித்து வருகிறார்.
இந்த படிப்புகள் குறுகிய காலத்தில் ஏழை மாணவர்களின் திறனை வளர்த்து அவர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தும் நோக்கில் தொடங்கப்பட்டு சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
கல்லூரியில் சேர விரும்புபவர்கள் ஆழ்வார்பேட்டை மேம்பாலம் அருகே உள்ள விண்ணர்ஸ் பேக்கரியின் பின்புறத்தில் உள்ள கம்யூனிட்டி கல்லூரியை தொடர்புகொள்ளவும்.
சேர்க்கை சம்பந்தமான விவரங்களுக்கு தொடர்பு கொள்ள தொலைபேசி எண் : 9941629635.
மந்தைவெளி தபால் நிலையத்திற்கு அருகிலுள்ள ஆர். கே. மட சாலையில் அப்பல்லோ மருந்தகம் திறக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய விசாலமான மருந்தகத்தில்…
‘கலா உத்சவ்’ என்பது அக்டோபர் 19 வரை ஆழ்வார்பேட்டை கடையில் நடைபெறும் கைவினைக் கண்காட்சி மற்றும் விற்பனை ஆகும். இது…
ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்பாளர்கள் சங்கம் (RAPRA) சில ஆண்டுகளாக இந்த சுற்றுப்புறத்தில் உள்ள சென்னை பள்ளிகள் மற்றும் அரசு உதவி…
ஆழ்வார்பேட்டை காந்தி அமைதி அறக்கட்டளை தனது அலுவலக வளாகத்தில், வரும் அக்டோபர் 2-ஆம் தேதி (மகாத்மா காந்தியின் 156-ஆம் ஜெயந்தியை…
இந்து சமய அறநிலையத்துறை விவகாரங்களுக்கான மாநில அமைச்சர் பி.கே. சேகர் பாபு, செப்டம்பர் 22 மாலை மயிலாப்பூர் வெங்கடேச அக்ரஹாரத்…
தீபாவளி லேகியம் வாங்க இடம் தேடுகிறீர்களா? அதற்கு ஒரு சிறந்த இடம் மயிலாப்பூரில் உள்ள வெங்கட்ரமணா ஆயுர்வேத மருந்தகம். இது…