ஆழ்வார்பேட்டை கம்யூனிட்டி கல்லூரியில் குறுகியகால டிப்ளமோ படிப்புகளுக்கு அட்மிஷன் நடைபெறுகிறது.

சென்னை மாநகராட்சி ஆழ்வார்பேட்டையில் கம்யூனிட்டி கல்லூரியை (சமுதாய கல்லூரி) நடத்தி வருகின்றனர். இந்த கல்லூரியில் லேப் டெக்னீசியன், ரேடியோலஜி, ஸ்போக்கன் இங்கிலீஷ், கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்ஸ் போன்ற ஓராண்டு டிப்ளமோ படிப்புகளுக்கு சேர்க்கை நடைபெற்றுவருகிறது. ஓராண்டுக்கு ரூபாய் 1500 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. மாணவர் சேர்க்கை செப்டம்பர் மாத இறுதி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வகுப்புகள் காலை நேரத்திலும் பயிற்சிகள் மாலையிலும் நடத்தப்படும். மெடிக்கல் சம்பந்தமான படிப்புகளுக்கு அருகில் உள்ள காவேரி மருத்துவமனையில் பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இங்கு சேரலாம்.

ஓய்வுபெற்ற சென்னை மாநகராட்சி பள்ளியின் தலைமையாசிரியர் சங்கரநாராயணன் இந்த கல்லூரியின் நிர்வாகியாக செயல்பட்டு வருகிறார். இவர் இந்த படிப்புகள் சம்பந்தமான விவரங்களை அருகிலுள்ள சென்னை மாநகராட்சி பள்ளிகளுக்கு தெரிவித்து வருகிறார்.

இந்த படிப்புகள் குறுகிய காலத்தில் ஏழை மாணவர்களின் திறனை வளர்த்து அவர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தும் நோக்கில் தொடங்கப்பட்டு சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

கல்லூரியில் சேர விரும்புபவர்கள் ஆழ்வார்பேட்டை மேம்பாலம் அருகே உள்ள விண்ணர்ஸ் பேக்கரியின் பின்புறத்தில் உள்ள கம்யூனிட்டி கல்லூரியை தொடர்புகொள்ளவும்.

சேர்க்கை சம்பந்தமான விவரங்களுக்கு தொடர்பு கொள்ள தொலைபேசி எண் : 9941629635.

admin

Recent Posts

அல்போன்சா மைதானத்தில் நடைபெற்ற ‘மாஸ்டர்ஸ்’ டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்

தமிழ்நாடு மாஸ்டர்ஸ் மாநில டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்பை சமீபத்தில் மந்தை வெளிப்பாக்கம் அல்போன்சா மைதானத்தில் உள்ள ஜி.சி.சி உட்புற மைதானத்தில்…

19 hours ago

தெற்கு கால்வாய் கரை சாலையில் உள்ள ஜி.சி.சி விளையாட்டு மைதானத்திற்கு புதிய சுற்றுச்சுவர் கட்டப்பட உள்ளது

மந்தைவெளிப்பாக்கம் தெற்கு கால்வாய் கரை சாலையில் உள்ள ஜி.சி.சி விளையாட்டு மைதானத்திற்கு புதிய சுற்றுச்சுவர் கட்டப்படுகிறது. (இந்த இடம் பொதுவாக…

1 day ago

சாய்பாபா கோயிலுக்கு அருகிலுள்ள கடைகள் இடிப்பு. நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட நிர்வாகிகள் நடவடிக்கை.

மயிலாப்பூர், வெங்கடேச அக்ரஹாரம் தெருவில் உள்ள சாய்பாபா கோயில் வளாகத்தில் கட்டப்பட்ட சுமார் 30க்கும் மேற்பட்ட கடைகளை குடிமைப் பணியாளர்கள்…

2 days ago

மகளிர் தினத்தை முன்னிட்டு பல்வேறு இடங்களில் சிறப்பு நிகழ்ச்சிகள் மற்றும் கடைகளில் சிறப்பு சலுகைகள்

பெண்களுக்கான யோகா இலவச அனுபவம்; அடிப்படை பயிற்சி மந்தைவெளியில் உள்ள யோகா ஃபார் வெல்னஸ் ஸ்டுடியோவில். மார்ச் 8 காலை.…

3 days ago

மயிலாப்பூர் பள்ளி மாணவர்களுக்கான ‘அமைதி கிளப்புகள்’. இறுதிப் போட்டி.

காந்தி அமைதி அறக்கட்டளை, மெட்ராஸ் சமீபத்தில் சில உள்ளூர் பகுதி பள்ளிகளில் 2025–2026 கல்வியாண்டிற்கான 'பள்ளிகளில் அமைதி கிளப்புகள்' திட்டத்தை…

1 week ago

ஆர்.ஏ.புரத்தில் நவீன நூலகம் திறக்கப்பட்டது. மாணவர்களுக்கான படிப்பு அரங்கம், குழந்தைகளுக்கான பிரிவும் உள்ளது.

ஆர்.ஏ.புரத்தில் நவீன நூலகம் முறையாகத் திறக்கப்பட்டுள்ளது. தற்போதைய திமுக அரசாங்கத்தின் 'முதல்வர் படிப்பகம்' திட்டத்தின் கீழ் இது ஒரு சிஎம்டிஏ…

1 week ago