செய்திகள்

ஆழ்வார்பேட்டை கம்யூனிட்டி கல்லூரியில் குறுகியகால டிப்ளமோ படிப்புகளுக்கு அட்மிஷன் நடைபெறுகிறது.

சென்னை மாநகராட்சி ஆழ்வார்பேட்டையில் கம்யூனிட்டி கல்லூரியை (சமுதாய கல்லூரி) நடத்தி வருகின்றனர். இந்த கல்லூரியில் லேப் டெக்னீசியன், ரேடியோலஜி, ஸ்போக்கன் இங்கிலீஷ், கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்ஸ் போன்ற ஓராண்டு டிப்ளமோ படிப்புகளுக்கு சேர்க்கை நடைபெற்றுவருகிறது. ஓராண்டுக்கு ரூபாய் 1500 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. மாணவர் சேர்க்கை செப்டம்பர் மாத இறுதி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வகுப்புகள் காலை நேரத்திலும் பயிற்சிகள் மாலையிலும் நடத்தப்படும். மெடிக்கல் சம்பந்தமான படிப்புகளுக்கு அருகில் உள்ள காவேரி மருத்துவமனையில் பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இங்கு சேரலாம்.

ஓய்வுபெற்ற சென்னை மாநகராட்சி பள்ளியின் தலைமையாசிரியர் சங்கரநாராயணன் இந்த கல்லூரியின் நிர்வாகியாக செயல்பட்டு வருகிறார். இவர் இந்த படிப்புகள் சம்பந்தமான விவரங்களை அருகிலுள்ள சென்னை மாநகராட்சி பள்ளிகளுக்கு தெரிவித்து வருகிறார்.

இந்த படிப்புகள் குறுகிய காலத்தில் ஏழை மாணவர்களின் திறனை வளர்த்து அவர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தும் நோக்கில் தொடங்கப்பட்டு சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

கல்லூரியில் சேர விரும்புபவர்கள் ஆழ்வார்பேட்டை மேம்பாலம் அருகே உள்ள விண்ணர்ஸ் பேக்கரியின் பின்புறத்தில் உள்ள கம்யூனிட்டி கல்லூரியை தொடர்புகொள்ளவும்.

சேர்க்கை சம்பந்தமான விவரங்களுக்கு தொடர்பு கொள்ள தொலைபேசி எண் : 9941629635.

admin

Recent Posts

இளைஞர்களுக்கான புகைப்பட பயிற்சி முகாம் இன்று தொடங்குகிறது. இதை மயிலாப்பூர் எம்எல்ஏ துவக்கி வைக்கிறார்.

மயிலாப்பூர் எம்.எல்.ஏ., தா.வேலு, ஆண்டுதோறும் நடத்துவது போல், இன்று, மே 4 முதல், இளைஞர்களுக்கான ‘புகைப்பட பயிற்சி முகாமை துவக்கி…

22 hours ago

மயிலாப்பூரில் நடைபெற்ற மகாராஷ்டிர தின நிகழ்ச்சியில் மாநில ஆளுநர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்

மகாராஷ்டிர சங்கம் சென்னை மயிலாப்பூரில் உள்ள சமஸ்கிருத கல்லூரி ஆடிட்டோரியத்தில் சத்ரபதி சிவாஜி ஜெயந்தி மற்றும் மகாராஷ்டிரா தினத்தை மே…

3 days ago

எம்.எல்.ஏ., ஸ்பான்சர்களுடன் சேர்ந்து, பெண்களுக்கான இலவச தையல் பயிற்சி முகாமை நடத்துகிறார்.

மயிலாப்பூரில் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் சுமார் 30 பெண்கள் தற்போது மந்தைவெளிப்பாக்கத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் இலவச தையல் பயிற்சி…

3 days ago

கோலங்கள் பற்றிய விரிவுரை. ஆர்.ஏ.புரத்தில் உள்ள கம்யூனிட்டி கிளப் நடத்தியது

சிஐடி காலனியில் வசிக்கும் ஆராய்ச்சியாளரும் கோலங்கள் குறித்த நிபுணருமான டாக்டர் காயத்ரி சங்கர்நாராயணன், சமீபத்தில் ஆர் ஏ புரம் நண்பர்கள்…

4 days ago

சாந்தோமில் உள்ள சிஎஸ்ஐ செயிண்ட் தாமஸ் தமிழ் தேவாலயத்தில் விடுமுறை பைபிள் பள்ளி

சாந்தோமில் உள்ள சிஎஸ்ஐ செயின்ட் தாமஸ் தமிழ் தேவாலயத்தில் ஏப்ரல் 26 முதல் மே 5 வரை விடுமுறை பைபிள்…

4 days ago

மாதவப்பெருமாள் கோவிலில் சித்திரை திருவோணப் பெருவிழா – ஏப்ரல் 30 முதல் மே 10 வரை.

மயிலாப்பூர் மாதவப்பெருமாள் திருக்கோயிலில் சித்திரை திருவோணப் பெருவிழா ஏப்ரல் 30 முதல் மே 10 வரை நடைபெறுகிறது. விழா விவரங்கள்:…

5 days ago