மயிலாப்பூர் சித்திர குளம் பகுதியில் உள்ள ஆதி கேசவ பெருமாள் கோவிலை தமிழக அரசின் இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை இரவு முதல் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளனர். இதுவரை இந்த கோவிலை தனியார் தொண்டு நிறுவனம் நிர்வகித்து வந்தது. நேற்று சனிக்கிழமை மாலை தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு கோவிலுக்கு வந்து கோவில் அர்ச்சகர்களிடம் அரசாணையை வழங்கி திங்கட்கிழமை முதல் கோவிலில் பூஜைகள் எவ்வாறு நடத்தப்படவேண்டும் என்று விவாதித்தார். மேலும் ஏற்கனெவே கோவிலை நிர்வகித்து வந்த அறங்காவலர் ஸ்ரீதர் மீது கோவில் நிலங்களை நடைமுறைக்கு மாறாக விற்பனை செய்ததாகவும் மேலும் சில புகார்கள் கடந்த ஆட்சி காலத்திலேயே வந்துள்ளதாகவும் அந்த புகார்கள் மீது கடந்த ஆட்சியாளர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் தற்போது திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு அந்த புகார்கள் மீது தற்போது நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்தார். கோவில் அறங்காவலர் சம்பந்தமான புகார் மீது விசாரணை நடத்தி அவர் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
‘பசுமை பயணம்’ என்ற கருப்பொருளில் நடத்தப்படும் மாரத்தான் சைக்கிள் ஓட்டுதல் முயற்சியின் இறுதி நிகழ்வு நவம்பர் 20, காலை 11.30…
மயிலாப்பூர், பஜார் சாலையில் உள்ள டீக்கடை உரிமையாளர் ஒருவர் தெரு நாயை அடித்துக் கொன்றதற்காக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, ஸ்டேஷன்…
ஆர்.ஏ. புரத்தில் உள்ள துர்காபாய் தேஷ்முக் பொது மருத்துவமனை நவம்பர் 18 அன்று காலை 8.30 மணி முதல் பிற்பகல்…
மயிலாப்பூர் எம்.எல்.ஏ. தா. வேலு, விளம்பரதாரர்களால் மோசமாக ஏமாற்றப்பட்டதாகக் கூறும் மயிலாப்பூர் நிதியின் வைப்பாளர்கள் தங்கள் வழக்கை முதல்வர் அல்லது…
பாரதிய வித்யா பவனின் சென்னை கேந்திரா, நவம்பர் 20 முதல் அதன் வருடாந்திர மார்கழி இசை நிகழ்ச்சிகளை நடத்துகிறது, மேலும்…
மயிலாப்பூர் ஸ்ரீ வாலீஸ்வரர் கோயிலில் கும்பாபிஷேகம் நவம்பர் 23ஆம் தேதி நடைபெற உள்ளது. கலைஞர்கள் மற்றும் தொழிலாளர்கள் குழு கோயிலை…