ஆதி கேசவ பெருமாள் கோவிலின் அறங்காவலர் கோவில் நிலங்களை விற்றதாக வந்த புகாரின் மீது இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் நடவடிக்கை

மயிலாப்பூர் சித்திர குளம் பகுதியில் உள்ள ஆதி கேசவ பெருமாள் கோவிலை தமிழக அரசின் இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை இரவு முதல் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளனர். இதுவரை இந்த கோவிலை தனியார் தொண்டு நிறுவனம் நிர்வகித்து வந்தது. நேற்று சனிக்கிழமை மாலை தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு கோவிலுக்கு வந்து கோவில் அர்ச்சகர்களிடம் அரசாணையை வழங்கி திங்கட்கிழமை முதல் கோவிலில் பூஜைகள் எவ்வாறு நடத்தப்படவேண்டும் என்று விவாதித்தார். மேலும் ஏற்கனெவே கோவிலை நிர்வகித்து வந்த அறங்காவலர் ஸ்ரீதர் மீது கோவில் நிலங்களை நடைமுறைக்கு மாறாக விற்பனை செய்ததாகவும் மேலும் சில புகார்கள் கடந்த ஆட்சி காலத்திலேயே வந்துள்ளதாகவும் அந்த புகார்கள் மீது கடந்த ஆட்சியாளர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் தற்போது திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு அந்த புகார்கள் மீது தற்போது நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்தார். கோவில் அறங்காவலர் சம்பந்தமான புகார் மீது விசாரணை நடத்தி அவர் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

admin

Recent Posts

மயிலாப்பூர் பள்ளி மாணவர்களுக்கான ‘அமைதி கிளப்புகள்’. இறுதிப் போட்டி.

காந்தி அமைதி அறக்கட்டளை, மெட்ராஸ் சமீபத்தில் சில உள்ளூர் பகுதி பள்ளிகளில் 2025–2026 கல்வியாண்டிற்கான 'பள்ளிகளில் அமைதி கிளப்புகள்' திட்டத்தை…

4 days ago

ஆர்.ஏ.புரத்தில் நவீன நூலகம் திறக்கப்பட்டது. மாணவர்களுக்கான படிப்பு அரங்கம், குழந்தைகளுக்கான பிரிவும் உள்ளது.

ஆர்.ஏ.புரத்தில் நவீன நூலகம் முறையாகத் திறக்கப்பட்டுள்ளது. தற்போதைய திமுக அரசாங்கத்தின் 'முதல்வர் படிப்பகம்' திட்டத்தின் கீழ் இது ஒரு சிஎம்டிஏ…

4 days ago

மெரினா கடற்கரையில் மாசி மகம் சடங்குகள்

மாசி மகம் சடங்குகள் மார்ச் 3 ஆம் தேதி அதிகாலை தொடங்கின. ஸ்ரீ வெள்ளீஸ்வரர் கோயில் மற்றும் ஸ்ரீ கபாலீஸ்வரர்…

4 days ago

மயிலாப்பூர் தபால் நிலையத்தில் உள்ள ஏடிஎம் இப்போது 24 மணி நேரமும் செயல்படுகிறது.

தபால் நிலைய பயனர்கள் மற்றும் பொதுமக்களின் வசதிக்காக, மயிலாப்பூர் தலைமை தபால் நிலையம் நவம்பர் 2025 இல் ஒரு ஏடிஎம்…

6 days ago

ஸ்ரீ வேதாந்த தேசிகர் கோவிலில் தவானோத்சவம். மார்ச் 1 முதல் 3 வரை

மயிலாப்பூர் ஸ்ரீ வேதாந்த தேசிகர் கோவிலில் வருடாந்திர தவானோத்சவம் மார்ச் 1 முதல் 3 வரை கொண்டாடப்பட உள்ளது. காலை,…

1 week ago

புதிதாகக் கட்டப்பட்ட திருவள்ளுவர் கோயிலின் கும்பாபிஷேகம்: பிப்ரவரி 27ல்.

மயிலாப்பூரில் புதிதாகக் கட்டப்பட்ட திருவள்ளுவர் கோயிலின் பிரமாண்ட கும்பாபிஷேகம் பிப்ரவரி 27 ஆம் தேதி காலை 8 மணிக்குத் தொடங்குகிறது.…

1 week ago