இன்று முன்னாள் முதல்வர் ஜெ. ஜெயலலிதா அவர்களின் நினைவிடம் திறப்பதையொட்டி வெளியூர்களிலிருந்து நிறைய அ.இ.அ.தி.மு.க கழக தொண்டர்கள் நகருக்குள் காலையிலேயே வந்திருந்தனர். இதில் மயிலாப்பூர் பகுதியில் மூன்று திருமண மண்டபங்களில் தங்கி காலை சிற்றுண்டியை முடித்துவிட்டு நிகழ்ச்சி நடைபெறும் மெரினா கடற்கரைக்கு சென்றனர். வெங்கடேச அக்ரஹாரம் தெருவில் உள்ள திருமண மண்டபத்தில் வெளியூரில் இருந்து வந்த நிறைய அ.இ.அ.தி.மு.க கழக தொண்டர்கள் நேற்றே இரவே வந்து தங்கியிருந்து காலையில் மெரினா கடற்கரைக்கு சென்றனர். காலையிலிருந்து மெரினா கடற்கரை கலங்கரை விளக்கம் முதல் சர்வீஸ் சாலையில் வெளியூரிலிருந்து வந்த அ.இ.அ.தி.மு.க கழக தொண்டர்களின் வாகனங்கள் நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. இன்று காலை முதலே கலங்கரை விளக்கம் அருகே போக்குவரத்து போலீசார் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினர்.
மயிலாப்பூரில் நடைபெறும் பங்குனித் திருவிழாவின் தேரோட்ட நிகழ்வுகளை வரைவதற்காக, 'சென்னை வீக்கெண்ட் ஆர்ட்டிஸ்ட்ஸ்' (CWA) குழுவின் உறுப்பினர்கள் மாட வீதிகளின்…
இலவச பொது மருத்துவம் மற்றும் கண் பரிசோதனை முகாம் – ஸ்ரீ மகாவீர் சேவா சங்கம், ஆர்.ஏ.புரம். மார்ச் 29.…
மந்தைவெளிப்பாக்கம், கால்வாய் கரைச் சாலையில் சென்னை மாநகராட்சியால் (GCC) நடத்தப்படும் சென்னை தொடக்கப்பள்ளியின் மாணவர்கள், தங்கள் வகுப்பறைகளில் ஓர் அறிவியல்…
அதிமுக தலைவர் எடப்பாடி பழனிசாமியும், பாஜகவின் தமிழிசை சௌந்தரராஜனும் மார்ச் 25 மாலை, இணைந்து பிரச்சாரத்தை தொடங்கினர். தேசிய ஜனநாயக…
பரந்து விரிந்த, இளம் நீல நிற வானத்தின் கீழும்; மெல்லிய காற்று வீசியும், அதே சமயம் அரிதாகவும் இருந்த ஒரு…
ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலின் பங்குனி திருவிழாவிற்கான முக்கிய பூஜை இது. இது ஒரு நீண்ட பாரம்பரியத்தைக் கொண்டுள்ளது. விழாவை சிறப்பாக…