இன்று முன்னாள் முதல்வர் ஜெ. ஜெயலலிதா அவர்களின் நினைவிடம் திறப்பதையொட்டி வெளியூர்களிலிருந்து நிறைய அ.இ.அ.தி.மு.க கழக தொண்டர்கள் நகருக்குள் காலையிலேயே வந்திருந்தனர். இதில் மயிலாப்பூர் பகுதியில் மூன்று திருமண மண்டபங்களில் தங்கி காலை சிற்றுண்டியை முடித்துவிட்டு நிகழ்ச்சி நடைபெறும் மெரினா கடற்கரைக்கு சென்றனர். வெங்கடேச அக்ரஹாரம் தெருவில் உள்ள திருமண மண்டபத்தில் வெளியூரில் இருந்து வந்த நிறைய அ.இ.அ.தி.மு.க கழக தொண்டர்கள் நேற்றே இரவே வந்து தங்கியிருந்து காலையில் மெரினா கடற்கரைக்கு சென்றனர். காலையிலிருந்து மெரினா கடற்கரை கலங்கரை விளக்கம் முதல் சர்வீஸ் சாலையில் வெளியூரிலிருந்து வந்த அ.இ.அ.தி.மு.க கழக தொண்டர்களின் வாகனங்கள் நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. இன்று காலை முதலே கலங்கரை விளக்கம் அருகே போக்குவரத்து போலீசார் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினர்.
பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் எழுதவிருக்கும் மாணவர்களுக்காக, ஸ்ரீ வேதாந்த தேசிகர் தேவஸ்தானம் பிப்ரவரி 7…
ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலின் மூன்று நாள் தைப்பூசத் தெப்பத்திருவிழா ஞாயிற்றுக்கிழமை மாலை (பிப்ரவரி 1) தொடங்கியது. கபாலீஸ்வரப் பெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட…
லஸ் அவென்யூவில் உள்ள நாகேஸ்வர ராவ் பூங்காவின் ஒரு பகுதி இப்போது ஒரு வறண்ட மைதானம் போல் காட்சியளிக்கிறது. செவ்வாய்க்கிழமை…
2026 ஆம் ஆண்டுக்கான ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலின் மூன்று நாள் தெப்பத் திருவிழா பிப்ரவரி 1 முதல் 3 வரை…
101வது பழைய பீடியன்ஸ் அஸோஸியேஷனின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு, ஜனவரி 26 அன்று சாந்தோம், செயின்ட் பீட்ஸ் ஆங்கிலோ-இந்தியன் மேல்நிலைப்…
உங்கள் பொங்கல் கொண்டாட்டத்திற்காக அழகாக வடிவமைக்கப்பட்ட மண்பானைகளைத் தேடுகிறீர்களா? அப்படியானால், இங்குள்ள சாய் பாபா கோவில் அருகே வெங்கடேச அக்ரஹாரம்…