செய்திகள்

ஆழ்வார்பேட்டையிலுள்ள இந்த பள்ளிக்கு உடனடியாக வகுப்பறை, சமையலறை, கழிப்பறை போன்றவற்றை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுகோள்!

மயிலாப்பூரில் பெரும்பாலான பள்ளிகள் மேல்நிலை வகுப்பு மாணவர்களுக்கு கடந்த செப்டம்பர் 1ம் தேதி முதல் பாடங்களை நடத்த தொடங்கியுள்ளன.

சமீபத்திய ஆண்டுகளில் இது போன்ற மாநகராட்சி பள்ளிகள் சில பிரச்சனைகளை சந்தித்து வருகிறது. ஒரு சில பள்ளிகளில் மாணவர் சேர்க்கை சரிந்து வருகிறது. ஒரு சில பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்து வருகிறது. இதை கையாள்வதில் பெரும் சிக்கல் ஏற்படுகிறது.

ஆழ்வார்பேட்டை மண்டலத்திலுள்ள பீமன்னபேட்டை சென்னை மாநகராட்சி பள்ளியில் ஒரே வளாகத்தில் தொடக்க, நடுநிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது.

இந்த பள்ளியில் கழிப்பறை வசதி போதுமான அளவு இல்லை. அப்படியே இருந்தாலும் பயன்படுத்த ஏற்றதாக இல்லை.

மாணவர்களுக்கு போதுமான அளவு சுத்தமான குடிநீர் வசதி செய்து தரப்படவில்லை. எனவே ஆசிரியர்கள் மாணவர்களை பாட்டிலில் வீட்டிலிருந்து தண்ணீரை எடுத்துவர அறிவுறுத்துகின்றனர்.

மேலும் இந்த பள்ளியில் பயிலும் மாணவர்கள் மழைக்காலங்களில் மதிய உணவருந்த போதுமான இடவசதி செய்து தரப்படவில்லை. எனவே மாணவர்கள் வகுப்பறையிலேயே மதிய உணவருந்துகின்றனர்.

மாணவர்களுக்கு மதிய உணவு சமைக்கும் சமையல் கூடமும் ஒருபகுதி சேதமடைந்துள்ளது. இதனால் மழைக்காலங்களில் சமைப்பதற்கு சிரமம் ஏற்படுகிறது.

இந்த பள்ளியை மயிலாப்பூர் எம்.எல்.ஏ தா.வேலு பார்வையிட்டு போதுமான உதவிகள் செய்து தருவதாக தெரிவித்துள்ளதாக ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் லயன்ஸ் கிளப் மற்றும் ரோட்டரி கிளப் இது போன்ற தனியார் தொண்டுநிறுவனங்களிடமிருந்தும் உதவியை எதிர்பார்ப்பதாக ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.

admin

Recent Posts

பெண் குழந்தைகளை ஆதரிக்கும் சேமிப்புத் திட்டத்தை பிரபலப்படுத்த மயிலாப்பூர் தபால் அலுவலகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

மயிலாப்பூர், கச்சேரி சாலையில் உள்ள மயிலாப்பூர் தபால் நிலையத்தில் பிப்ரவரி 21 அன்று ஒரு பரபரப்பு ஏற்பட்டது; இங்குள்ள ஊழியர்கள்…

2 months ago

ஆர்.ஏ.புரம் கல்யாண மண்டபத்தில் 30 ஜோடிகளுக்கு ‘சுயமரியாதை கல்யாணம்’ நடத்திய தி.மு.க.

ஆர்.ஏ.புரத்தில் உள்ள கபாலீஸ்வரர் - கற்பகாம்பாள் கல்யாண மண்டபத்தில் கடந்த வாரம் 30 ஜோடிகளுக்கு திருமண ஏற்பாடுகளை தமிழக இந்து…

2 months ago

சென்னை மெட்ரோ: ஆர்.எச். சாலையில் சிறிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன

சென்னை மெட்ரோ தொடர்பான பணிகளுக்காக மயிலாப்பூர் ராயப்பேட்டை நெடுஞ்சாலையில் சிறிய மாற்றங்கள் தொடர்ந்து செய்யப்படுகின்றன. சமீபத்தில், சமஸ்கிருதக் கல்லூரிக்கு வெளியே…

2 months ago

சிட்டி சென்டர் மாலில் பாட்டில் ஆர்ட் வேடிக்கை நிகழ்ச்சி. பிப்ரவரி 16 வரை.

மயிலாப்பூரில் இந்த வார இறுதியில் சிட்டி சென்டர் மாலில் நீங்கள் இருந்தால், இந்த ஷாப்பிங் மாலின் தரை தளத்தில் நடைபெறும்…

2 months ago

மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ காஞ்சி மகா பெரியவா ஆலயத்தின் மஹாகும்பாபிஷேகம் நடைபெற்றது.

மயிலாப்பூரில் பிப்ரவரி 10 அன்று நடைபெற்ற ஸ்ரீ காஞ்சி மகா பெரியவா ஆலயத்தின் மஹாகும்பாபிஷேகம், ஒரு அறக்கட்டளை, அதன் ஆதரவாளர்கள்…

2 months ago

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலின் தெப்ப விழா; கோயில் குளத்திற்குள் பணிகள் தொடங்கியது.

மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலின் தைப்பூச விழாவிற்கான தெப்பம் அமைக்கும் பணி வியாழக்கிழமை (பிப்ரவரி 6) காலை தொடங்கியது. டஜன்…

2 months ago