மயிலாப்பூர் பி.எஸ் பள்ளியையொட்டி உள்ள விளையாட்டு மைதானத்தை பொதுமக்களும் பயன்படுத்தும் வகையில் நேற்று திங்கட்கிழமை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு திறந்து வைத்தார்.
கபாலீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான இந்த இடத்தை நீண்ட நாட்களுக்கு குத்தகைக்கு கொடுக்கப்பட்டிருந்தது. சரியாக குத்தகை வழங்கப்படாத காரணத்தால், இந்த இடத்தை அறநிலையத்துறை எடுத்து சீரமைத்து பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் விளையாட்டு மைதானமாக மாற்றியுள்ளது.
இது மட்டுமில்லாமல் இந்த விளையாட்டு மைதானத்தை நடைப்பயிற்சி செய்ய ஏற்றவகையிலும் மற்றும் இன்னும் பிற விளையாட்டுகள் விளையாட ஏற்ற வகையில் மேம்படுத்த உள்ளதாக மயிலாப்பூர் எம்.எல்.ஏ தா.வேலு கூறுகிறார்.
ஆர்.ஏ. புரத்தில் ஆந்திர மகிளா சபாவுக்குச் சொந்தமான பரந்த நிலப்பகுதியின் பெரும்பகுதி சமப்படுத்தப்பட்டு, புதிய மருத்துவமனை ஒன்றை அமைப்பதற்கான பணிகள்…
E1 மயிலாப்பூர் காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமையன்று வாராந்திர குறைகேட்புக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. காவல் உதவி ஆய்வாளர் முத்துகிருஷ்ணன் மற்றும்…
மெரினா கடற்கரையில் மற்றொரு 'ப்ளூ ஃபிளாக்' பகுதிக்கான இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இது கலங்கரை விளக்கத்திற்கு அருகிலும், காமராஜர்…
மயிலாப்பூர் எம்.எல்.ஏ.-வும் மாநில அமைச்சருமான பி. வெங்கடரமணன், ஆழ்வார்பேட்டையில் தனது அலுவலகத்தைத் திறந்ததிலிருந்து, அப்பகுதி மக்கள், சமூகத் தலைவர்கள் மற்றும்…
இந்த கடும் கோடைக்காலத்தில் சுவையான நுங்குகளை வாங்கிச் சுவையுங்கள். சாய்பாபா கோயில் அருகிலுள்ள வெங்கடேச அக்ரஹாரம் தெருவில், ரவி மற்றும்…
இராணி மேரி கல்லூரியில் சேர விரும்புவோர் இப்போது விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதியைத் தவறவிட்டவர்கள் www.tngasa.in என்ற இணையதளத்தின்…