செய்திகள்

ஆழ்வார்பேட்டையிலுள்ள இந்த பள்ளிக்கு உடனடியாக வகுப்பறை, சமையலறை, கழிப்பறை போன்றவற்றை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுகோள்!

மயிலாப்பூரில் பெரும்பாலான பள்ளிகள் மேல்நிலை வகுப்பு மாணவர்களுக்கு கடந்த செப்டம்பர் 1ம் தேதி முதல் பாடங்களை நடத்த தொடங்கியுள்ளன.

சமீபத்திய ஆண்டுகளில் இது போன்ற மாநகராட்சி பள்ளிகள் சில பிரச்சனைகளை சந்தித்து வருகிறது. ஒரு சில பள்ளிகளில் மாணவர் சேர்க்கை சரிந்து வருகிறது. ஒரு சில பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்து வருகிறது. இதை கையாள்வதில் பெரும் சிக்கல் ஏற்படுகிறது.

ஆழ்வார்பேட்டை மண்டலத்திலுள்ள பீமன்னபேட்டை சென்னை மாநகராட்சி பள்ளியில் ஒரே வளாகத்தில் தொடக்க, நடுநிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது.

இந்த பள்ளியில் கழிப்பறை வசதி போதுமான அளவு இல்லை. அப்படியே இருந்தாலும் பயன்படுத்த ஏற்றதாக இல்லை.

மாணவர்களுக்கு போதுமான அளவு சுத்தமான குடிநீர் வசதி செய்து தரப்படவில்லை. எனவே ஆசிரியர்கள் மாணவர்களை பாட்டிலில் வீட்டிலிருந்து தண்ணீரை எடுத்துவர அறிவுறுத்துகின்றனர்.

மேலும் இந்த பள்ளியில் பயிலும் மாணவர்கள் மழைக்காலங்களில் மதிய உணவருந்த போதுமான இடவசதி செய்து தரப்படவில்லை. எனவே மாணவர்கள் வகுப்பறையிலேயே மதிய உணவருந்துகின்றனர்.

மாணவர்களுக்கு மதிய உணவு சமைக்கும் சமையல் கூடமும் ஒருபகுதி சேதமடைந்துள்ளது. இதனால் மழைக்காலங்களில் சமைப்பதற்கு சிரமம் ஏற்படுகிறது.

இந்த பள்ளியை மயிலாப்பூர் எம்.எல்.ஏ தா.வேலு பார்வையிட்டு போதுமான உதவிகள் செய்து தருவதாக தெரிவித்துள்ளதாக ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் லயன்ஸ் கிளப் மற்றும் ரோட்டரி கிளப் இது போன்ற தனியார் தொண்டுநிறுவனங்களிடமிருந்தும் உதவியை எதிர்பார்ப்பதாக ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.

admin

Recent Posts

மயிலாப்பூரில் நடைபெற்ற மகாராஷ்டிர தின நிகழ்ச்சியில் மாநில ஆளுநர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்

மகாராஷ்டிர சங்கம் சென்னை மயிலாப்பூரில் உள்ள சமஸ்கிருத கல்லூரி ஆடிட்டோரியத்தில் சத்ரபதி சிவாஜி ஜெயந்தி மற்றும் மகாராஷ்டிரா தினத்தை மே…

1 day ago

எம்.எல்.ஏ., ஸ்பான்சர்களுடன் சேர்ந்து, பெண்களுக்கான இலவச தையல் பயிற்சி முகாமை நடத்துகிறார்.

மயிலாப்பூரில் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் சுமார் 30 பெண்கள் தற்போது மந்தைவெளிப்பாக்கத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் இலவச தையல் பயிற்சி…

1 day ago

கோலங்கள் பற்றிய விரிவுரை. ஆர்.ஏ.புரத்தில் உள்ள கம்யூனிட்டி கிளப் நடத்தியது

சிஐடி காலனியில் வசிக்கும் ஆராய்ச்சியாளரும் கோலங்கள் குறித்த நிபுணருமான டாக்டர் காயத்ரி சங்கர்நாராயணன், சமீபத்தில் ஆர் ஏ புரம் நண்பர்கள்…

2 days ago

சாந்தோமில் உள்ள சிஎஸ்ஐ செயிண்ட் தாமஸ் தமிழ் தேவாலயத்தில் விடுமுறை பைபிள் பள்ளி

சாந்தோமில் உள்ள சிஎஸ்ஐ செயின்ட் தாமஸ் தமிழ் தேவாலயத்தில் ஏப்ரல் 26 முதல் மே 5 வரை விடுமுறை பைபிள்…

2 days ago

மாதவப்பெருமாள் கோவிலில் சித்திரை திருவோணப் பெருவிழா – ஏப்ரல் 30 முதல் மே 10 வரை.

மயிலாப்பூர் மாதவப்பெருமாள் திருக்கோயிலில் சித்திரை திருவோணப் பெருவிழா ஏப்ரல் 30 முதல் மே 10 வரை நடைபெறுகிறது. விழா விவரங்கள்:…

3 days ago

பி.எஸ்.மெட்ரிக் பள்ளியில் (வடக்கு) இந்த கல்வியாண்டு முதல் 11 ஆம் வகுப்பில் வணிகவியல் பாடம் அறிமுகம்.

மயிலாப்பூர் முண்டகக்கண்ணி அம்மன் கோவில் தெருவில் அமைந்துள்ள பிஎஸ் மெட்ரிகுலேஷன் (வடக்கு) பள்ளி, ஜூன் 2024 இல் தொடங்கும் கல்வியாண்டில்…

3 days ago