காவேரி மருத்துவமனையில் இன்று முதல் ஸ்புட்னிக் தடுப்பூசி வழங்கப்படுகிறது.

ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனையில் இன்று ஜூலை 9ம் தேதி முதல் ஸ்புட்னிக் தடுப்பூசி மக்களுக்கு வழங்கப்படுகிறது. ஏற்கனெவே அனைத்து மருத்துவமனைகளிலும் கோவிஷீல்ட் மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகள் மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது ஸ்புட்னிக் தடுப்பூசியும் சேர்ந்துள்ளது. இந்த தடுப்பூசி இந்தியாவில் பல்வேறு இடங்களில் கடந்த இரண்டு வாரங்களாக பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஸ்புட்னிக் தடுப்பூசி மதியம் 2 மணி முதல் 4.30 மணிமுதல் வழங்கப்படவுள்ளதாகவும் இதன் விலை 1,145 ரூபாய் என்றும் அதே நேரத்தில் யாரெல்லாம் இதுவரை ஒரு டோஸ் தடுப்பூசி கூட செலுத்தாமல் இருக்கிறார்களோ அவர்களே இந்த தடுப்பூசியை எடுக்கமுடியும் என்று காவேரி மருத்துவமனை ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.

காவேரி மருத்துவமனையில் கோவாக்சின் தடுப்பூசி காலையில் மக்களுக்கு வழங்கப்படுகிறது. இதன் விலை 1,410 ரூபாய். தடுப்பூசி போடுவதற்கு முன்பதிவு செய்ய வேண்டும். உங்களுக்கான நேரம் ஒதுக்கப்பட்ட பின்னரே நீங்கள் அங்கு சென்று தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம். முன்பதிவு செய்ய 044 40006000 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும்.

 

admin

Recent Posts

தேர்தல் 2026: முன்னணி கட்சிகளின் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்.

மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிடும் முன்னணி அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் தங்கள் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர். நேற்று ஏப்ரல் 6, 2026…

7 days ago

பணியின்போது உயிரிழந்த Urbaser ஊழியரின் குடும்பத்திற்கு மந்தைவெளிப்பாக்கம் சமூகம் நிதியுதவி

மந்தைவெளிப்பாக்கம் பகுதியின் உள்ளூர் குடியிருப்பாளர்களைக் கொண்ட அமைப்பான ‘Voices of Mandavelipakkam’ (VOM)-இன் உறுப்பினர்கள், பங்குனித் திருவிழாவின்போது பணியில் இருந்த…

1 week ago

மந்தமாக நடைபெற்று வரும் நாகேஸ்வர ராவ் பூங்காவின் சீரமைப்புப் பணிகள்

நாகேஸ்வர ராவ் பூங்காவின் சீரமைப்புப் பணிகள் ஒன்று நிறுத்தப்பட்டிருக்க வேண்டும், அல்லது மிக மந்தமான வேகத்தில் நகர்ந்து கொண்டிருக்க வேண்டும்…

1 week ago

Tally-யின் அடிப்படைகள் குறித்த இலவசப் பயிற்சி. ஏழை இளைஞர்களுக்காக. இப்போதே முன் பதிவு செய்யுங்கள்.

1905-ஆம் ஆண்டு நிறுவப்பட்ட ராமகிருஷ்ணா மிஷன் மாணவர் இல்லம் (Ramakrishna Mission Students’ Home), தேவைப்படும் மாணவர்களுக்கு இலவசக் கல்வி,…

1 week ago

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலில் பங்குனி திருவிழாவின் விடையாற்றி விழா ஏப்ரல் 3 முதல் தொடங்குகிறது.

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலின் பங்குனித் திருவிழாவையொட்டி நடைபெறும் இசை மற்றும் நடன விழா, ஏப்ரல் 3 முதல் 16 வரை…

2 weeks ago

தேர்தல் 2026: ஏப்ரல் 4 அன்று மயிலாப்பூரில் பொதுக்கூட்டத்தில் மோடி உரையாற்றுகிறார் – பாஜக தேர்தல் பிரச்சாரம்

பிரதமர் நரேந்திர மோடி, ஏப்ரல் 4 அன்று மயிலாப்பூரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் உரையாற்றவுள்ளார். தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு அவர் மேற்கொள்ளும்…

2 weeks ago