காவேரி மருத்துவமனையில் இன்று முதல் ஸ்புட்னிக் தடுப்பூசி வழங்கப்படுகிறது.

ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனையில் இன்று ஜூலை 9ம் தேதி முதல் ஸ்புட்னிக் தடுப்பூசி மக்களுக்கு வழங்கப்படுகிறது. ஏற்கனெவே அனைத்து மருத்துவமனைகளிலும் கோவிஷீல்ட் மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகள் மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது ஸ்புட்னிக் தடுப்பூசியும் சேர்ந்துள்ளது. இந்த தடுப்பூசி இந்தியாவில் பல்வேறு இடங்களில் கடந்த இரண்டு வாரங்களாக பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஸ்புட்னிக் தடுப்பூசி மதியம் 2 மணி முதல் 4.30 மணிமுதல் வழங்கப்படவுள்ளதாகவும் இதன் விலை 1,145 ரூபாய் என்றும் அதே நேரத்தில் யாரெல்லாம் இதுவரை ஒரு டோஸ் தடுப்பூசி கூட செலுத்தாமல் இருக்கிறார்களோ அவர்களே இந்த தடுப்பூசியை எடுக்கமுடியும் என்று காவேரி மருத்துவமனை ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.

காவேரி மருத்துவமனையில் கோவாக்சின் தடுப்பூசி காலையில் மக்களுக்கு வழங்கப்படுகிறது. இதன் விலை 1,410 ரூபாய். தடுப்பூசி போடுவதற்கு முன்பதிவு செய்ய வேண்டும். உங்களுக்கான நேரம் ஒதுக்கப்பட்ட பின்னரே நீங்கள் அங்கு சென்று தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம். முன்பதிவு செய்ய 044 40006000 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும்.

 

admin

Recent Posts

மயிலாப்பூரில் ஜூனியர்களுக்கான செஸ் போட்டி

64 ஸ்கொயர்ஸ் செஸ் அகாடமி, மே 31 சனிக்கிழமை, மயிலாப்பூர் டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள சென்னை சிட்டி சென்டர்…

11 hours ago

மயிலாப்பூரில் உள்ள எரிவாயு மூலம் இயங்கும் தகனக்கூடம் பழுதுபார்ப்புக்காக மூடப்பட்டது.

மயிலாப்பூரில் உள்ள எரிவாயு மூலம் இயங்கும் தகனக்கூடம் தற்போது மூடப்பட்டுள்ளது. பழுதுபார்ப்பு மற்றும் மேம்படுத்தல் பணிகளுக்காக மே 30 வரை…

11 hours ago

ராயப்பேட்டை நெடுஞ்சாலையில் உள்ள ஆட்டோ உதிரிபாகங்கள் கடைக்கு சென்னை மாநகராட்சி சீல்.

மயிலாப்பூரில் உள்ள ராயப்பேட்டை நெடுஞ்சாலையில் உள்ள ஒரு ஆட்டோமொபைல் உதிரி பாகங்கள் கடைக்கு சென்னை மாநகராட்சி சீல் வைத்துள்ளது. கடை…

12 hours ago

வில்லிவாக்கத்தில் குடும்பத்தினருடன் ‘காணாமல் போன நபர்’ மீண்டும் இணைந்தார்.

மயிலாப்பூரில் இன்று காலை வழி தவறி, மயிலாப்பூர் குடியிருப்பாளர்களின் தளங்களில் ஆன்லைனில் பகிரப்பட்ட செய்திகளால் ‘காணாமல் போனதாக’ அறிவிக்கப்பட்ட முதியவர்…

1 day ago

மயிலாப்பூர் ஆன்லைன் சமூகக் குழுக்களில் பகிரப்பட்ட ‘நபர் காணவில்லை’ என்ற செய்தி.

இந்த புதன்கிழமை நண்பகல் முதல் ‘நபர் காணவில்லை’ என்ற ஆன்லைன் செய்தி பரவி வருகிறது. இதுதான் செய்தி – மந்தைவெளிப்பாக்கம்…

1 day ago

தொல்காப்பிய பூங்காவில், பணிகள் இன்னும் நடந்து வருவதால் விடுமுறை நாட்களில் வரும் கூட்டத்தை இழந்துள்ளது.

மிகப்பெரிய அளவில் புதுப்பிக்கப்பட்ட தொல்காப்பிய பூங்கா இன்னும் பொதுமக்களுக்கு திறக்கப்படவில்லை, இருப்பினும் இந்த திட்டத்திற்கு பொறுப்பான மாநில அமைச்சர் அனைத்து…

2 days ago