ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனையில் இன்று ஜூலை 9ம் தேதி முதல் ஸ்புட்னிக் தடுப்பூசி மக்களுக்கு வழங்கப்படுகிறது. ஏற்கனெவே அனைத்து மருத்துவமனைகளிலும் கோவிஷீல்ட் மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகள் மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது ஸ்புட்னிக் தடுப்பூசியும் சேர்ந்துள்ளது. இந்த தடுப்பூசி இந்தியாவில் பல்வேறு இடங்களில் கடந்த இரண்டு வாரங்களாக பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஸ்புட்னிக் தடுப்பூசி மதியம் 2 மணி முதல் 4.30 மணிமுதல் வழங்கப்படவுள்ளதாகவும் இதன் விலை 1,145 ரூபாய் என்றும் அதே நேரத்தில் யாரெல்லாம் இதுவரை ஒரு டோஸ் தடுப்பூசி கூட செலுத்தாமல் இருக்கிறார்களோ அவர்களே இந்த தடுப்பூசியை எடுக்கமுடியும் என்று காவேரி மருத்துவமனை ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.
காவேரி மருத்துவமனையில் கோவாக்சின் தடுப்பூசி காலையில் மக்களுக்கு வழங்கப்படுகிறது. இதன் விலை 1,410 ரூபாய். தடுப்பூசி போடுவதற்கு முன்பதிவு செய்ய வேண்டும். உங்களுக்கான நேரம் ஒதுக்கப்பட்ட பின்னரே நீங்கள் அங்கு சென்று தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம். முன்பதிவு செய்ய 044 40006000 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும்.
ஸ்ரீ வெள்ளீஸ்வரர் கோயிலில் வைகாசி பெருவிழா மே 21 முதல் ஜூன் 11 வரை நடைபெறுகிறது. நிகழ்ச்சி விவரங்கள் –…
மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினரான திரு. பி. வெங்கட்ரமணன், தமிழ்நாடு உணவு, குடிமைப் பொருள் வழங்கல், நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் விலைக்கட்டுப்பாடு…
ஆர். ஏ. புரத்தின் 2-வது பிரதான சாலையில் அமைந்துள்ள டாஸ்மாக் 'எலைட்' (Elite) கடையை, மாநில அரசு மூட வேண்டும்…
மந்தைவெளி, வி. கே. சாலையில் அமைந்திருந்த டாஸ்மாக் மது விற்பனைக் கடை, மே 13-ஆம் தேதி மாலை மூடப்பட்டது. மருத்துவமனைகள்,…
உங்கள் பகுதியில் அல்டிமேட் புரொஃபஷனல் டிரை கிளீனிங் வாகனத்தைக் கவனித்தீர்களா? இந்த வாரம் கிழக்கு அபிராமபுரம் 2வது தெருவில், வீட்டு…
சமீபத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் பி. வெங்கட்ரமணனின் அலுவலகம் இன்னும் முறையாகத் திறக்கப்படவில்லை. ஆழ்வார்பேட்டையில் உள்ள சி.பி. ராமசாமி…