ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள குடியிருப்போர் நலச்சங்கமும் தமிழ்நாடு அரசின் தோட்டக்கலைத்துறையும் இணைந்து டிசம்பர் 13ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலையில் ஆர்.ஏ புரத்தில் ஒரு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளனர். இந்நிகழ்ச்சி காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை ஆர்.ஏ புரத்தில் 7வது சாலையில் உள்ள சென்னை கார்ப்பரேஷன் அலுவலக வாயிலில் நடைபெற உள்ளது.
இதில் பங்கு பெற அனுமதி இலவசம்.
இந்த நிகழ்ச்சியில் அரசு அதிகாரி ஒருவர் மக்கள் அவரவர் வீட்டின் மாடிகளில் எவ்வாறு மாடித்தோட்டங்கள் அமைக்கலாம் என்று விவரித்து பேசவுள்ளார். மேலும் இங்கு மாடித்தோட்டம் அமைக்க தேவையான விதை, தொட்டிகள், உரங்கள், போன்றவற்றை விற்பனை செய்கின்றனர். இந்த மாடித்தோட்டம் அமைக்க தேவையான பொருட்கள் அடங்கிய ஒரு சிறப்பு தொகுப்பை குறைந்த விலையில் வழங்க உள்ளனர். நீங்கள் இந்த சிறப்பு தொகுப்பை குறைந்த விலையில் பெற விரும்பினால் உங்களுடைய ஆதார் கார்டு நகலையும் மற்றும் ஒரு பாஸ்போர்ட் சைஸ் புகைப்படத்தையும் வழங்க வேண்டும்.
நீங்கள் இந்த மாடித்தோட்ட வகுப்பு பற்றி மேலும் தெரிந்துகொள்ள விரும்பினால் திருமதி. ராதிகாவை தொடர்பு கொள்ளவும். தொலைபேசி எண் : 9790899758
காந்தி அமைதி அறக்கட்டளை, மெட்ராஸ் சமீபத்தில் சில உள்ளூர் பகுதி பள்ளிகளில் 2025–2026 கல்வியாண்டிற்கான 'பள்ளிகளில் அமைதி கிளப்புகள்' திட்டத்தை…
ஆர்.ஏ.புரத்தில் நவீன நூலகம் முறையாகத் திறக்கப்பட்டுள்ளது. தற்போதைய திமுக அரசாங்கத்தின் 'முதல்வர் படிப்பகம்' திட்டத்தின் கீழ் இது ஒரு சிஎம்டிஏ…
மாசி மகம் சடங்குகள் மார்ச் 3 ஆம் தேதி அதிகாலை தொடங்கின. ஸ்ரீ வெள்ளீஸ்வரர் கோயில் மற்றும் ஸ்ரீ கபாலீஸ்வரர்…
தபால் நிலைய பயனர்கள் மற்றும் பொதுமக்களின் வசதிக்காக, மயிலாப்பூர் தலைமை தபால் நிலையம் நவம்பர் 2025 இல் ஒரு ஏடிஎம்…
மயிலாப்பூர் ஸ்ரீ வேதாந்த தேசிகர் கோவிலில் வருடாந்திர தவானோத்சவம் மார்ச் 1 முதல் 3 வரை கொண்டாடப்பட உள்ளது. காலை,…
மயிலாப்பூரில் புதிதாகக் கட்டப்பட்ட திருவள்ளுவர் கோயிலின் பிரமாண்ட கும்பாபிஷேகம் பிப்ரவரி 27 ஆம் தேதி காலை 8 மணிக்குத் தொடங்குகிறது.…