ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள குடியிருப்போர் நலச்சங்கமும் தமிழ்நாடு அரசின் தோட்டக்கலைத்துறையும் இணைந்து டிசம்பர் 13ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலையில் ஆர்.ஏ புரத்தில் ஒரு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளனர். இந்நிகழ்ச்சி காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை ஆர்.ஏ புரத்தில் 7வது சாலையில் உள்ள சென்னை கார்ப்பரேஷன் அலுவலக வாயிலில் நடைபெற உள்ளது.
இதில் பங்கு பெற அனுமதி இலவசம்.
இந்த நிகழ்ச்சியில் அரசு அதிகாரி ஒருவர் மக்கள் அவரவர் வீட்டின் மாடிகளில் எவ்வாறு மாடித்தோட்டங்கள் அமைக்கலாம் என்று விவரித்து பேசவுள்ளார். மேலும் இங்கு மாடித்தோட்டம் அமைக்க தேவையான விதை, தொட்டிகள், உரங்கள், போன்றவற்றை விற்பனை செய்கின்றனர். இந்த மாடித்தோட்டம் அமைக்க தேவையான பொருட்கள் அடங்கிய ஒரு சிறப்பு தொகுப்பை குறைந்த விலையில் வழங்க உள்ளனர். நீங்கள் இந்த சிறப்பு தொகுப்பை குறைந்த விலையில் பெற விரும்பினால் உங்களுடைய ஆதார் கார்டு நகலையும் மற்றும் ஒரு பாஸ்போர்ட் சைஸ் புகைப்படத்தையும் வழங்க வேண்டும்.
நீங்கள் இந்த மாடித்தோட்ட வகுப்பு பற்றி மேலும் தெரிந்துகொள்ள விரும்பினால் திருமதி. ராதிகாவை தொடர்பு கொள்ளவும். தொலைபேசி எண் : 9790899758
உங்கள் பொங்கல் கொண்டாட்டத்திற்காக அழகாக வடிவமைக்கப்பட்ட மண்பானைகளைத் தேடுகிறீர்களா? அப்படியானால், இங்குள்ள சாய் பாபா கோவில் அருகே வெங்கடேச அக்ரஹாரம்…
மயிலாப்பூரில் வருடந்தோறும் ஜனவரி தொடக்கத்தில் நடைபெறும் சுந்தரம் பைனான்ஸின் மயிலாப்பூர் விழா ஜனவரி 8 ம் தேதி காலை 7…
மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் வியாழக்கிழமை மாலை (டிசம்பர் 4) கார்த்திகை தீப விழா தொடங்கிய நேரத்தில், லேசான,…
மந்தைவெளி ராஜா தெரு குடியிருப்பாளர்கள் நலச் சங்கம் அதன் பொங்கல் விழாவின் ஒரு பகுதியாக “ஊடக உலகம்” என்ற கருப்பொருளை…
‘பசுமை பயணம்’ என்ற கருப்பொருளில் நடத்தப்படும் மாரத்தான் சைக்கிள் ஓட்டுதல் முயற்சியின் இறுதி நிகழ்வு நவம்பர் 20, காலை 11.30…
மயிலாப்பூர், பஜார் சாலையில் உள்ள டீக்கடை உரிமையாளர் ஒருவர் தெரு நாயை அடித்துக் கொன்றதற்காக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, ஸ்டேஷன்…