மார்கழி மாதத்தில் உங்களுடைய வீட்டில் நீங்கள் போடும் கோலத்தை எங்களுடைய வலைத்தளத்தில் வெளியிட விருப்பமா?

மயிலாப்பூரில் மார்கழி மாதத்தில் முப்பது நாட்களும் பெரும்பாலான மக்கள் விடியற்காலை நேரத்தில் தங்கள் வீட்டு வாயில்களில் கோலங்கள் போடுவது வழக்கம். அதே போன்று மார்கழி முதல் நாளான இன்று மயிலாப்பூரில் பெரிய மற்றும் சிறிய தெருக்களில் மக்கள் அவரவர் வீட்டு முன்பு கோலங்கள் போட்டனர். சிலர் ரங்கோலி கோலங்கள் போட்டிருந்தனர். ஆனால் நமது புகைப்பட கலைஞர் வழக்கமாக கோலம் போடும் சில வீடுகளில் இன்று கோலம் போடவில்லை என்று தெரிவிக்கிறார். ஆனால் காரணம் தெரியவில்லை. நீங்கள் உங்கள் வீட்டில் பெரிய அளவில் கோலம் போட்டால் உங்களது கோலத்தை புகைப்படம் எடுத்து எங்களுக்கு மின்னஞ்சல் செய்யுங்கள். எங்கள் மின்னஞ்சல் முகவரி: mytimesedit@gmail.com. நாங்கள் உங்களது கோலம் புகைப்படத்தை சேர்த்து வீடியோவாக மூன்று நாட்களுக்கு ஒருமுறை எங்களுடைய யூடியூப் சேனலில் வெளியிடுவோம்.

admin

Recent Posts

அல்போன்சா மைதானத்தில் நடைபெற்ற ‘மாஸ்டர்ஸ்’ டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்

தமிழ்நாடு மாஸ்டர்ஸ் மாநில டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்பை சமீபத்தில் மந்தை வெளிப்பாக்கம் அல்போன்சா மைதானத்தில் உள்ள ஜி.சி.சி உட்புற மைதானத்தில்…

11 hours ago

தெற்கு கால்வாய் கரை சாலையில் உள்ள ஜி.சி.சி விளையாட்டு மைதானத்திற்கு புதிய சுற்றுச்சுவர் கட்டப்பட உள்ளது

மந்தைவெளிப்பாக்கம் தெற்கு கால்வாய் கரை சாலையில் உள்ள ஜி.சி.சி விளையாட்டு மைதானத்திற்கு புதிய சுற்றுச்சுவர் கட்டப்படுகிறது. (இந்த இடம் பொதுவாக…

22 hours ago

சாய்பாபா கோயிலுக்கு அருகிலுள்ள கடைகள் இடிப்பு. நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட நிர்வாகிகள் நடவடிக்கை.

மயிலாப்பூர், வெங்கடேச அக்ரஹாரம் தெருவில் உள்ள சாய்பாபா கோயில் வளாகத்தில் கட்டப்பட்ட சுமார் 30க்கும் மேற்பட்ட கடைகளை குடிமைப் பணியாளர்கள்…

2 days ago

மகளிர் தினத்தை முன்னிட்டு பல்வேறு இடங்களில் சிறப்பு நிகழ்ச்சிகள் மற்றும் கடைகளில் சிறப்பு சலுகைகள்

பெண்களுக்கான யோகா இலவச அனுபவம்; அடிப்படை பயிற்சி மந்தைவெளியில் உள்ள யோகா ஃபார் வெல்னஸ் ஸ்டுடியோவில். மார்ச் 8 காலை.…

3 days ago

மயிலாப்பூர் பள்ளி மாணவர்களுக்கான ‘அமைதி கிளப்புகள்’. இறுதிப் போட்டி.

காந்தி அமைதி அறக்கட்டளை, மெட்ராஸ் சமீபத்தில் சில உள்ளூர் பகுதி பள்ளிகளில் 2025–2026 கல்வியாண்டிற்கான 'பள்ளிகளில் அமைதி கிளப்புகள்' திட்டத்தை…

1 week ago

ஆர்.ஏ.புரத்தில் நவீன நூலகம் திறக்கப்பட்டது. மாணவர்களுக்கான படிப்பு அரங்கம், குழந்தைகளுக்கான பிரிவும் உள்ளது.

ஆர்.ஏ.புரத்தில் நவீன நூலகம் முறையாகத் திறக்கப்பட்டுள்ளது. தற்போதைய திமுக அரசாங்கத்தின் 'முதல்வர் படிப்பகம்' திட்டத்தின் கீழ் இது ஒரு சிஎம்டிஏ…

1 week ago