மயிலாப்பூர் மாட வீதிகளில் மார்கழி மாதத்தில் பஜனை பாடுவது வழக்கம். மார்கழி முதல் நாளான இன்று பஜனை குழுவினர் பஜனை பாடல்களை பாடி சென்றதை பார்க்க முடிந்தது. ஆனால் மார்கழி மாதத்தில் சுமார் நான்கு குழுவினர் மாட வீதிகளில் பஜனை பாடல்கள் பாடி செல்வது வழக்கம். இந்த வருடம் கொரோனா காரணமாக சுவாமி ஹரிதாஸ் கிரி அவர்களின் பஜனை குழுவினர் மட்டுமே பஜனை பாடல்களை பாடி சென்றனர். இந்த குழுவில் முதியவர்களும் இருப்பார்கள். அந்த வகையில் இன்று பஜனை பாடி சென்ற குழுவில் கோவிட்-19 காரணமாக குறைந்தளவு முதியவர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். இன்று பஜனை பாடி சென்ற குழுவில் பெரும்பாலானவர்கள் முகக்கவசம் அணியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஆர்.ஏ. புரத்தில் ஆந்திர மகிளா சபாவுக்குச் சொந்தமான பரந்த நிலப்பகுதியின் பெரும்பகுதி சமப்படுத்தப்பட்டு, புதிய மருத்துவமனை ஒன்றை அமைப்பதற்கான பணிகள்…
E1 மயிலாப்பூர் காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமையன்று வாராந்திர குறைகேட்புக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. காவல் உதவி ஆய்வாளர் முத்துகிருஷ்ணன் மற்றும்…
மெரினா கடற்கரையில் மற்றொரு 'ப்ளூ ஃபிளாக்' பகுதிக்கான இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இது கலங்கரை விளக்கத்திற்கு அருகிலும், காமராஜர்…
மயிலாப்பூர் எம்.எல்.ஏ.-வும் மாநில அமைச்சருமான பி. வெங்கடரமணன், ஆழ்வார்பேட்டையில் தனது அலுவலகத்தைத் திறந்ததிலிருந்து, அப்பகுதி மக்கள், சமூகத் தலைவர்கள் மற்றும்…
இந்த கடும் கோடைக்காலத்தில் சுவையான நுங்குகளை வாங்கிச் சுவையுங்கள். சாய்பாபா கோயில் அருகிலுள்ள வெங்கடேச அக்ரஹாரம் தெருவில், ரவி மற்றும்…
இராணி மேரி கல்லூரியில் சேர விரும்புவோர் இப்போது விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதியைத் தவறவிட்டவர்கள் www.tngasa.in என்ற இணையதளத்தின்…