மார்கழி முதல் நாளான இன்று மாட வீதிகளில் மார்கழி பஜனை பாடல்களை ஒரு குழுவினர் பாடி சென்றனர்.

மயிலாப்பூர் மாட வீதிகளில் மார்கழி மாதத்தில் பஜனை பாடுவது வழக்கம். மார்கழி முதல் நாளான இன்று பஜனை குழுவினர் பஜனை பாடல்களை பாடி சென்றதை பார்க்க முடிந்தது. ஆனால் மார்கழி மாதத்தில் சுமார் நான்கு குழுவினர் மாட வீதிகளில் பஜனை பாடல்கள் பாடி செல்வது வழக்கம். இந்த வருடம் கொரோனா காரணமாக சுவாமி ஹரிதாஸ் கிரி அவர்களின் பஜனை குழுவினர் மட்டுமே பஜனை பாடல்களை பாடி சென்றனர். இந்த குழுவில் முதியவர்களும் இருப்பார்கள். அந்த வகையில் இன்று பஜனை பாடி சென்ற குழுவில் கோவிட்-19 காரணமாக குறைந்தளவு முதியவர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். இன்று பஜனை பாடி சென்ற குழுவில் பெரும்பாலானவர்கள் முகக்கவசம் அணியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

admin

Recent Posts

தமிழகத் தேர்தல் குறித்த கலந்துரையாடல். ஏப்ரல் 17 மாலை. ஆர். ஏ. புரத்தில்

தமிழகத் தேர்தல்களை அடிப்படையாகக் கொண்ட இந்தக் கலந்துரையாடலின் கருப்பொருள் 'தமிழகம் 2026; இனிவரும் பாதை' என்பதாகும். இக்கலந்துரையாடல் ஏப்ரல் 17…

3 weeks ago

மின்சார இருசக்கர வாகனங்களுக்கான பேட்டரி மாற்றும் வசதி. மந்தைவெளி, எம்.கே. அம்மன் கோயில் எம்.ஆர்.டி.எஸ் ரயில் நிலையங்களில்.

மயிலாப்பூரில் உள்ள இரண்டு முக்கிய இடங்களான எம்.ஆர்.டி.எஸ்-இன் முண்டக்கக்கன்னி அம்மன் கோயில் நிலையம் மற்றும் மந்தைவெளி நிலையத்தில், மின்சார இருசக்கர…

3 weeks ago

ஸ்ரீ ரமண மகரிஷி 76வது ஆராதனை விழா. ஏப்ரல் 15

ரமண கேந்திரா அறக்கட்டளை சார்பில் ஏப்ரல் 15ம் தேதி ஸ்ரீ ரமண மகரிஷி 76வது ஆராதனை விழா, காலை 6…

3 weeks ago

இளம் பருவத்தினருக்கான எழுத்துப் பயிலரங்குகள்.

10 முதல் 13 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்காக, எழுத்தாளர் பிரவீணா சிவராம் அவர்கள் நடத்தும் இரண்டு நாள் படைப்பு எழுத்துப் பயிலரங்கு…

3 weeks ago

ஆர்.ஏ.புரத்தில் குழந்தைகளுக்கான ஒரு மன்றம். இலவச நிகழ்வுகள். இப்போதே பதிவு செய்யுங்கள்.

ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்போர் சங்கம் (RAPRA), 5 முதல் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளை வளர்த்தெடுக்கும் நோக்கில், 'RAPRA குழந்தைகள் மன்றம்'…

4 weeks ago

ஸ்ரீ வெங்கடேச பெருமாள் கோவில் பிரம்மோற்சவம். ஏப்ரல் 12 முதல் 21 வரை

மந்தைவெளி மாரி செட்டி தெருவில் உள்ள ஸ்ரீ வெங்கடேச பெருமாள் கோவிலில் பங்குனி பிரம்மோற்சவம் ஏப்ரல் 12 முதல் 21…

4 weeks ago