மயிலாப்பூரில் மார்கழி மாதத்தில் முப்பது நாட்களும் பெரும்பாலான மக்கள் விடியற்காலை நேரத்தில் தங்கள் வீட்டு வாயில்களில் கோலங்கள் போடுவது வழக்கம். அதே போன்று மார்கழி முதல் நாளான இன்று மயிலாப்பூரில் பெரிய மற்றும் சிறிய தெருக்களில் மக்கள் அவரவர் வீட்டு முன்பு கோலங்கள் போட்டனர். சிலர் ரங்கோலி கோலங்கள் போட்டிருந்தனர். ஆனால் நமது புகைப்பட கலைஞர் வழக்கமாக கோலம் போடும் சில வீடுகளில் இன்று கோலம் போடவில்லை என்று தெரிவிக்கிறார். ஆனால் காரணம் தெரியவில்லை. நீங்கள் உங்கள் வீட்டில் பெரிய அளவில் கோலம் போட்டால் உங்களது கோலத்தை புகைப்படம் எடுத்து எங்களுக்கு மின்னஞ்சல் செய்யுங்கள். எங்கள் மின்னஞ்சல் முகவரி: mytimesedit@gmail.com. நாங்கள் உங்களது கோலம் புகைப்படத்தை சேர்த்து வீடியோவாக மூன்று நாட்களுக்கு ஒருமுறை எங்களுடைய யூடியூப் சேனலில் வெளியிடுவோம்.
தமிழகத் தேர்தல்களை அடிப்படையாகக் கொண்ட இந்தக் கலந்துரையாடலின் கருப்பொருள் 'தமிழகம் 2026; இனிவரும் பாதை' என்பதாகும். இக்கலந்துரையாடல் ஏப்ரல் 17…
மயிலாப்பூரில் உள்ள இரண்டு முக்கிய இடங்களான எம்.ஆர்.டி.எஸ்-இன் முண்டக்கக்கன்னி அம்மன் கோயில் நிலையம் மற்றும் மந்தைவெளி நிலையத்தில், மின்சார இருசக்கர…
ரமண கேந்திரா அறக்கட்டளை சார்பில் ஏப்ரல் 15ம் தேதி ஸ்ரீ ரமண மகரிஷி 76வது ஆராதனை விழா, காலை 6…
10 முதல் 13 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்காக, எழுத்தாளர் பிரவீணா சிவராம் அவர்கள் நடத்தும் இரண்டு நாள் படைப்பு எழுத்துப் பயிலரங்கு…
ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்போர் சங்கம் (RAPRA), 5 முதல் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளை வளர்த்தெடுக்கும் நோக்கில், 'RAPRA குழந்தைகள் மன்றம்'…
மந்தைவெளி மாரி செட்டி தெருவில் உள்ள ஸ்ரீ வெங்கடேச பெருமாள் கோவிலில் பங்குனி பிரம்மோற்சவம் ஏப்ரல் 12 முதல் 21…