மயிலாப்பூர் பிச்சுப்பிள்ளை தெருவில் மகா பெரியவா சந்நிதி

மயிலை மகா பெரியவா அனுஷம் அறக்கட்டளை மூலம் பிச்சுப்பிள்ளை தெருவில் காஞ்சி மகா பெரியவா சந்நிதிக்கான இடம் இறுதி செய்யப்பட்டுள்ளது.

உபன்யாசகர் கணேஷ் சர்மா வியாழன் காலை மயிலாப்பூர் டைம்ஸிடம் கூறுகையில், மகா பெரியவா சந்நிதிக்காக ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலைச் சுற்றி ஒரு நல்ல இடம் கடந்த நான்கு மாதங்களாக தேடப்பட்டது, கடைசியாக பிச்சுப்பிள்ளை தெருவில், மாமி டிஃபெனுக்கு எதிரே உள்ள இரண்டு மாடி குடியிருப்பு தேர்ந்தெடுக்கப்பட்டது என்று கூறினார்.

இந்த இடத்தின் அளவு ஒரு கிரவுண்ட். ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலின் தெற்குப் பக்கமாக பிச்சு பிள்ளை தெருவின் எண். 4 இல் அமைந்துள்ளது. கட்டிடம், மறுவடிவமைப்பு மற்றும் மாற்றம் உள்ளிட்ட செலவுகள் சுமார் ரூ. 10 கோடி. சொத்து உரிமையாளர்களுக்கு முன்பணம் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் பக்தர்கள் மற்றும் நன்கொடையாளர்களிடமிருந்து நன்கொடை வாங்க வேண்டி இருப்பதால் ஒரு வருடம் கால அவகாசம் கேட்கப்பட்டுள்ளது. மேலும் கட்டிடத்தின் உரிமையாளர்கள் எங்களுக்கு முழு கட்டணத்தையும் செலுத்த போதிய கால அவகாசம் கொடுத்துள்ளார்.

ஆரம்பத்தில் சந்நிதி இந்த வீட்டின் தரைத்தளத்தில் வரும் என்றார். ஒத்த கருத்தை கொண்ட பக்தர்களிடம் இருந்து முழுப் பணமும் வசூலிக்கப்பட்டதும், சந்நிதியின் மறுவடிவமைப்பு குறித்த மேலும் குறிப்பிட்ட சில திட்டங்களை அறக்கட்டளை இறுதி செய்யும்.

மயிலாப்பூர் ஒரு புண்ணிய ஸ்தலம் என்பதாலும், மஹா பெரியவா இத்தலத்தில் அருளியிருப்பதாலும், நான்கு மாட வீதிகளுக்குள்ளேயே மத ஊர்வலங்களை நடத்துவதற்கு ஒரு இடம் வேண்டும் என்று கணேஷ் சர்மா கூறினார்.

இந்த அறக்கட்டளை மாதாந்திர அனுஷம் மற்றும் வருடாந்திர ஜெயந்தி ஹோமங்கள், பதுகா பூஜை, வேதபாராயணம் மற்றும் ஆன்மீக சொற்பொழிவுகளை நடத்துகிறது. அனைத்தும் மஹா பெரியவாவின் பெயரில்.

செய்தி : எஸ்.பிரபு

admin

Recent Posts

மெட்ராஸ் தினம் 2025: பவர்பாயிண்ட் புராஜெக்ட் போட்டி. பள்ளி மாணவர்களுக்கு

மெட்ராஸ் தினம் 2025 க்கு, மயிலாப்பூர் டைம்ஸ் பள்ளி அணிகளுக்கான வருடாந்திர பவர்பாயிண்ட் புராஜெக்ட் போட்டியை அறிவித்துள்ளது. இந்தப் போட்டியின்…

7 days ago

111வது ஆண்டில் இராணி மேரி கல்லூரி. எளிய, மகிழ்ச்சியான கொண்டாட்டங்கள்.

இராணி மேரி கல்லூரி வளாகத்தில் இன்று திங்கட்கிழமை காலை ஒரு எளிமையான விழா நடைபெற்றது. இது இந்த கல்லூரியின் 111…

1 week ago

சங்கீதா உணவகத்தில் ரூ.40க்கு மதிய உணவு

சங்கீதாவின் 40வது ஆண்டு விழா கொண்டாட்டங்களில், நகரம் முழுவதும் உள்ள அதன் உணவகங்கள் இப்போது மாறி மாறி வழங்கும் சிறப்பு…

2 weeks ago

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலுக்கு விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல், புரளி என தெரியவந்துள்ளது

புதன்கிழமை இரவு மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயில் அலுவலகத்திற்கு வெடிகுண்டு வெடிக்கும் என்று கூறி அனுப்பப்பட்ட மின்னஞ்சல் ஒரு புரளி…

3 weeks ago

மெரினா கடற்கரையின் ஒரு பகுதியை இராணி மேரி கல்லூரி மாணவிகள் சுத்தம் செய்தனர்.

ரோட்டரி சர்வதேச மாவட்டம் 3234, இராணி மேரி கல்லூரியைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகளுடன் இணைந்து பெரிய அளவிலான…

3 weeks ago

புனித தாமஸின் விழா: சாந்தோம் கதீட்ரலில் பேராயர் கொடியை ஏற்றினார்.

ஜூலை 2 புதன்கிழமை மாலை புனித தாமஸின் கொடியை பேராயர் ரெவ். ஜார்ஜ் அந்தோணிசாமி ஆசீர்வதித்து, பின்னர் புனித தாமஸின்…

3 weeks ago