மயிலாப்பூர் பிச்சுப்பிள்ளை தெருவில் மகா பெரியவா சந்நிதி

மயிலை மகா பெரியவா அனுஷம் அறக்கட்டளை மூலம் பிச்சுப்பிள்ளை தெருவில் காஞ்சி மகா பெரியவா சந்நிதிக்கான இடம் இறுதி செய்யப்பட்டுள்ளது.

உபன்யாசகர் கணேஷ் சர்மா வியாழன் காலை மயிலாப்பூர் டைம்ஸிடம் கூறுகையில், மகா பெரியவா சந்நிதிக்காக ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலைச் சுற்றி ஒரு நல்ல இடம் கடந்த நான்கு மாதங்களாக தேடப்பட்டது, கடைசியாக பிச்சுப்பிள்ளை தெருவில், மாமி டிஃபெனுக்கு எதிரே உள்ள இரண்டு மாடி குடியிருப்பு தேர்ந்தெடுக்கப்பட்டது என்று கூறினார்.

இந்த இடத்தின் அளவு ஒரு கிரவுண்ட். ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலின் தெற்குப் பக்கமாக பிச்சு பிள்ளை தெருவின் எண். 4 இல் அமைந்துள்ளது. கட்டிடம், மறுவடிவமைப்பு மற்றும் மாற்றம் உள்ளிட்ட செலவுகள் சுமார் ரூ. 10 கோடி. சொத்து உரிமையாளர்களுக்கு முன்பணம் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் பக்தர்கள் மற்றும் நன்கொடையாளர்களிடமிருந்து நன்கொடை வாங்க வேண்டி இருப்பதால் ஒரு வருடம் கால அவகாசம் கேட்கப்பட்டுள்ளது. மேலும் கட்டிடத்தின் உரிமையாளர்கள் எங்களுக்கு முழு கட்டணத்தையும் செலுத்த போதிய கால அவகாசம் கொடுத்துள்ளார்.

ஆரம்பத்தில் சந்நிதி இந்த வீட்டின் தரைத்தளத்தில் வரும் என்றார். ஒத்த கருத்தை கொண்ட பக்தர்களிடம் இருந்து முழுப் பணமும் வசூலிக்கப்பட்டதும், சந்நிதியின் மறுவடிவமைப்பு குறித்த மேலும் குறிப்பிட்ட சில திட்டங்களை அறக்கட்டளை இறுதி செய்யும்.

மயிலாப்பூர் ஒரு புண்ணிய ஸ்தலம் என்பதாலும், மஹா பெரியவா இத்தலத்தில் அருளியிருப்பதாலும், நான்கு மாட வீதிகளுக்குள்ளேயே மத ஊர்வலங்களை நடத்துவதற்கு ஒரு இடம் வேண்டும் என்று கணேஷ் சர்மா கூறினார்.

இந்த அறக்கட்டளை மாதாந்திர அனுஷம் மற்றும் வருடாந்திர ஜெயந்தி ஹோமங்கள், பதுகா பூஜை, வேதபாராயணம் மற்றும் ஆன்மீக சொற்பொழிவுகளை நடத்துகிறது. அனைத்தும் மஹா பெரியவாவின் பெயரில்.

செய்தி : எஸ்.பிரபு

admin

Recent Posts

ஆர். கே. மட சாலையில் அப்பல்லோ மருந்தகம் திறப்பு. டோர் டெலிவரி வசதி உண்டு.

மந்தைவெளி தபால் நிலையத்திற்கு அருகிலுள்ள ஆர். கே. மட சாலையில் அப்பல்லோ மருந்தகம் திறக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய விசாலமான மருந்தகத்தில்…

2 weeks ago

ஆழ்வார்பேட்டை கடையில் கைவினைப் பொருட்கள் விற்பனை. அக்டோபர் 19 வரை.

‘கலா உத்சவ்’ என்பது அக்டோபர் 19 வரை ஆழ்வார்பேட்டை கடையில் நடைபெறும் கைவினைக் கண்காட்சி மற்றும் விற்பனை ஆகும். இது…

2 weeks ago

மாணவர்களுக்கு மடிக்கணினிகளை நன்கொடையாக வழங்கிய ஆர்.ஏ.புரம் சமூகத்தினர்.

ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்பாளர்கள் சங்கம் (RAPRA) சில ஆண்டுகளாக இந்த சுற்றுப்புறத்தில் உள்ள சென்னை பள்ளிகள் மற்றும் அரசு உதவி…

2 weeks ago

மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி. காந்தியின் படைப்புகள் பற்றிய கருப்பொருள். தமிழில்.

ஆழ்வார்பேட்டை காந்தி அமைதி அறக்கட்டளை தனது அலுவலக வளாகத்தில், வரும் அக்டோபர் 2-ஆம் தேதி (மகாத்மா காந்தியின் 156-ஆம் ஜெயந்தியை…

4 weeks ago

நவராத்திரி 2025: ஸ்ரீ கபாலீஸ்வரர் கற்பகாம்பாள் கல்யாண மண்டபத்தில் பிரமாண்டமான கொலு

இந்து சமய அறநிலையத்துறை விவகாரங்களுக்கான மாநில அமைச்சர் பி.கே. சேகர் பாபு, செப்டம்பர் 22 மாலை மயிலாப்பூர் வெங்கடேச அக்ரஹாரத்…

4 weeks ago

வெங்கட்ரமணா ஆயுர்வேத மருந்தகத்தில் தீபாவளி லேகியம் விற்பனைக்கு தயார்.

தீபாவளி லேகியம் வாங்க இடம் தேடுகிறீர்களா? அதற்கு ஒரு சிறந்த இடம் மயிலாப்பூரில் உள்ள வெங்கட்ரமணா ஆயுர்வேத மருந்தகம். இது…

4 weeks ago