ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள புனித லாசரஸ் பேராலயத்தில் கடந்த வாரம் சனிக்கிழமை லாசரஸ் தேர் திருவிழா நடைபெற்றது. இந்த பகுதியில் வசிக்கும் மக்கள் வருடா வருடம் ட்ரஸ்ட் மூலம் இந்த தேர் திருவிழாவை நடத்துவது வழக்கம்.
அலங்கரிக்கப்பட்ட ஒன்பது தேர்கள் பேராலயத்தை சுற்றியுள்ள தெருக்களில் ஊர்வலம் வந்தது. அவ்வாறு ஊர்வலம் வரும் போது சில இடங்களில் வழக்கமாக தேர்கள் நின்று செல்லும். இந்த வருடம் கொரோனா காரணமாக மக்கள் கூட்டம் குறைவாகவே காணப்பட்டது. தேர் திருவிழாவின் போது மாதாவை வரவேற்கும் விதமாக மக்கள் தங்கள் வீடுகளை அலங்கரிப்பது வழக்கம். அந்த வகையில் சோபியா பீட்டர் அவரது வீட்டில் மாதாவை வரவேற்கும் விதமாக வீட்டின் கதவருகே மாதா சிலையை வைத்து அலங்கரித்து அங்கிருந்து தெரு வரைக்கும் ரங்கோலி கோலம் போட்டிருந்தார்.
மயிலாப்பூர் ஸ்ரீ வேதாந்த தேசிகர் கோவிலில் வருடாந்திர தவானோத்சவம் மார்ச் 1 முதல் 3 வரை கொண்டாடப்பட உள்ளது. காலை,…
மயிலாப்பூரில் புதிதாகக் கட்டப்பட்ட திருவள்ளுவர் கோயிலின் பிரமாண்ட கும்பாபிஷேகம் பிப்ரவரி 27 ஆம் தேதி காலை 8 மணிக்குத் தொடங்குகிறது.…
ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலின் வருடாந்திர பங்குனி திருவிழாவின் முதல் படி பிப்ரவரி 26 அன்று நடைபெற உள்ளது. அன்று மாலை…
ஸ்ரீ கபாலீஸ்வர் கோயிலின் புதிய விளக்கு அமைப்பை பிப்ரவரி 15 அன்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி. கே.…
பிப்ரவரி 19 வியாழக்கிழமை முண்டகக்கண்ணி அம்மன் எம்ஆர்டிஎஸ் ரயில் நிலையத்தில் உள்ள லிஃப்ட் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக வேலை செய்யவில்லை,…
அனைத்து உள்ளூர் தேவாலயங்களிலும் பிப்ரவரி 18 அன்று சாம்பல் புதன் அனுசரிக்கப்பட்டது. இது தவக்காலத்தின் தொடக்கத்தைக் குறிக்கிறது, இது பிரார்த்தனை,…