ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள புனித லாசரஸ் பேராலயத்தில் கடந்த வாரம் சனிக்கிழமை லாசரஸ் தேர் திருவிழா நடைபெற்றது. இந்த பகுதியில் வசிக்கும் மக்கள் வருடா வருடம் ட்ரஸ்ட் மூலம் இந்த தேர் திருவிழாவை நடத்துவது வழக்கம்.
அலங்கரிக்கப்பட்ட ஒன்பது தேர்கள் பேராலயத்தை சுற்றியுள்ள தெருக்களில் ஊர்வலம் வந்தது. அவ்வாறு ஊர்வலம் வரும் போது சில இடங்களில் வழக்கமாக தேர்கள் நின்று செல்லும். இந்த வருடம் கொரோனா காரணமாக மக்கள் கூட்டம் குறைவாகவே காணப்பட்டது. தேர் திருவிழாவின் போது மாதாவை வரவேற்கும் விதமாக மக்கள் தங்கள் வீடுகளை அலங்கரிப்பது வழக்கம். அந்த வகையில் சோபியா பீட்டர் அவரது வீட்டில் மாதாவை வரவேற்கும் விதமாக வீட்டின் கதவருகே மாதா சிலையை வைத்து அலங்கரித்து அங்கிருந்து தெரு வரைக்கும் ரங்கோலி கோலம் போட்டிருந்தார்.
மந்தைவெளி தபால் நிலையத்திற்கு அருகிலுள்ள ஆர். கே. மட சாலையில் அப்பல்லோ மருந்தகம் திறக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய விசாலமான மருந்தகத்தில்…
‘கலா உத்சவ்’ என்பது அக்டோபர் 19 வரை ஆழ்வார்பேட்டை கடையில் நடைபெறும் கைவினைக் கண்காட்சி மற்றும் விற்பனை ஆகும். இது…
ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்பாளர்கள் சங்கம் (RAPRA) சில ஆண்டுகளாக இந்த சுற்றுப்புறத்தில் உள்ள சென்னை பள்ளிகள் மற்றும் அரசு உதவி…
ஆழ்வார்பேட்டை காந்தி அமைதி அறக்கட்டளை தனது அலுவலக வளாகத்தில், வரும் அக்டோபர் 2-ஆம் தேதி (மகாத்மா காந்தியின் 156-ஆம் ஜெயந்தியை…
இந்து சமய அறநிலையத்துறை விவகாரங்களுக்கான மாநில அமைச்சர் பி.கே. சேகர் பாபு, செப்டம்பர் 22 மாலை மயிலாப்பூர் வெங்கடேச அக்ரஹாரத்…
தீபாவளி லேகியம் வாங்க இடம் தேடுகிறீர்களா? அதற்கு ஒரு சிறந்த இடம் மயிலாப்பூரில் உள்ள வெங்கட்ரமணா ஆயுர்வேத மருந்தகம். இது…