கடந்த புதன்கிழமை கபாலீஸ்வரர் கோவிலில் நடைபெற்ற பிரதோஷ விழாவில் சுமார் இருநூறு பேர் கலந்துகொண்டனர். தற்போது ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும் இந்த கோவிலில் பிரதோஷம் மற்றும் மற்ற முக்கியமான விழாக்கள் நடைபெறும் நாட்களில் மக்களை கோவிலுக்குள் அனுமதிப்பதில்லை. இதனால் மக்கள் வருத்தத்துடன் உள்ளனர். இந்த நடைமுறை சரியில்லை என்று தெரிவிக்கின்றனர்.
பிரதோஷம் நடைபெறும் நாட்களில் பிரதோஷ ஆராதனை நிகழ்ச்சி முடிந்த பிறகே கோவிலுக்குள் மக்களை அனுமதிக்கின்றனர். இவ்வாறு ஒரே நேரத்தில் மக்களை கோவிலுக்குள் அனுப்பும் போது சமூக இடைவெளியை கடைபிடிப்பதில்லை என்று சிலர் தெரிவிக்கின்றனர். இது பற்றி கடந்த இருபது வருடங்களுக்கும் மேலாக பிரதோஷ விழாவிற்கு வந்து செல்லும் சிலர், கோவிலுக்குள் பெரிய அளவில் இடவசதி இருக்கும் போது மக்களை கோவில் பிரகாரத்தில் அனுமதிக்கலாம் என்றும், சுவாமி கோவிலுக்குள் ஊர்வலம் வரும் போது சுவாமி தரிசனம் செய்ய இது வசதியாக இருக்கும் என்றும், இதை ஏன் கோவில் அலுவலர்கள் செய்வதில்லை என்று கேள்வி எழுப்புகின்றனர்.
இது பற்றி கோவில் அலுவலர் டி.காவேரி அவர்கள் அரசு வகுத்துள்ள விதிமுறைப்படியே தாங்கள் கோவில் நிகழ்ச்சிகளை நடத்துவதாக தெரிவிக்கின்றார். ஆனால் சில மக்கள் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் வழக்கம்போல் மக்களை கோவிலில் அனைத்து நிகழ்வுகளிலும் அனுமதிக்கின்றனர்என்றும், அங்கே மக்களை கோவிலுக்குள் அனுமதிக்கும்போது இங்கு ஏன் மக்களை கோவிலுக்குள் அனுமதிப்பதில்லை என்று கேள்வி எழுப்புகின்றனர்.
சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான இடங்களில் வளர்க்கப்பட்டுள்ள தாவரங்களுக்கு நீர்ப்பாசனம் செய்ய ஒரு எளிய யோசனையைக் கொண்டு வந்துள்ளது. மயிலாப்பூரில் உள்ள…
நான்கு வாரங்களுக்கும் மேலாக, மயிலாப்பூரில் உள்ள பள்ளி பள்ளிக்கூடங்களை சுற்றியுள்ள பகுதிகள் பெரிதாக பரபரப்பு ஏதும் இல்லாமல் இருந்தது. இந்த…
லயன்ஸ் கிளப் ஆஃப் மெட்ராஸ் பார்க் டவுன் அறக்கட்டளை, 9 மற்றும் 10 ஆம் வகுப்புகளில் பயிலும் ஏழை மாணவர்களுக்கு…
மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ வெள்ளீஸ்வரர் கோயிலின் வருடாந்திர வைகாசி விழா தொடங்கியது. ஜூன் 2 ஆம் தேதி காலை, ஏராளமான…
கேசவபெருமாள்புரம், கிரீன்வேஸ் சாலை, ஆர்.ஏ. புரம், ஸ்ரீ சக்தி விநாயகர் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் அன்ன பாவடை விழா சமீபத்தில்…
ஆர்.ஏ.புரத்தில் உள்ள தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியின் (தமிழ்நாடு டாக்டர். ஜே. ஜெயலலிதா இசை மற்றும் கலை பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது)…