கடந்த புதன்கிழமை கபாலீஸ்வரர் கோவிலில் நடைபெற்ற பிரதோஷ விழாவில் சுமார் இருநூறு பேர் கலந்துகொண்டனர். தற்போது ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும் இந்த கோவிலில் பிரதோஷம் மற்றும் மற்ற முக்கியமான விழாக்கள் நடைபெறும் நாட்களில் மக்களை கோவிலுக்குள் அனுமதிப்பதில்லை. இதனால் மக்கள் வருத்தத்துடன் உள்ளனர். இந்த நடைமுறை சரியில்லை என்று தெரிவிக்கின்றனர்.
பிரதோஷம் நடைபெறும் நாட்களில் பிரதோஷ ஆராதனை நிகழ்ச்சி முடிந்த பிறகே கோவிலுக்குள் மக்களை அனுமதிக்கின்றனர். இவ்வாறு ஒரே நேரத்தில் மக்களை கோவிலுக்குள் அனுப்பும் போது சமூக இடைவெளியை கடைபிடிப்பதில்லை என்று சிலர் தெரிவிக்கின்றனர். இது பற்றி கடந்த இருபது வருடங்களுக்கும் மேலாக பிரதோஷ விழாவிற்கு வந்து செல்லும் சிலர், கோவிலுக்குள் பெரிய அளவில் இடவசதி இருக்கும் போது மக்களை கோவில் பிரகாரத்தில் அனுமதிக்கலாம் என்றும், சுவாமி கோவிலுக்குள் ஊர்வலம் வரும் போது சுவாமி தரிசனம் செய்ய இது வசதியாக இருக்கும் என்றும், இதை ஏன் கோவில் அலுவலர்கள் செய்வதில்லை என்று கேள்வி எழுப்புகின்றனர்.
இது பற்றி கோவில் அலுவலர் டி.காவேரி அவர்கள் அரசு வகுத்துள்ள விதிமுறைப்படியே தாங்கள் கோவில் நிகழ்ச்சிகளை நடத்துவதாக தெரிவிக்கின்றார். ஆனால் சில மக்கள் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் வழக்கம்போல் மக்களை கோவிலில் அனைத்து நிகழ்வுகளிலும் அனுமதிக்கின்றனர்என்றும், அங்கே மக்களை கோவிலுக்குள் அனுமதிக்கும்போது இங்கு ஏன் மக்களை கோவிலுக்குள் அனுமதிப்பதில்லை என்று கேள்வி எழுப்புகின்றனர்.
மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிடும் முன்னணி அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் தங்கள் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர். நேற்று ஏப்ரல் 6, 2026…
மந்தைவெளிப்பாக்கம் பகுதியின் உள்ளூர் குடியிருப்பாளர்களைக் கொண்ட அமைப்பான ‘Voices of Mandavelipakkam’ (VOM)-இன் உறுப்பினர்கள், பங்குனித் திருவிழாவின்போது பணியில் இருந்த…
நாகேஸ்வர ராவ் பூங்காவின் சீரமைப்புப் பணிகள் ஒன்று நிறுத்தப்பட்டிருக்க வேண்டும், அல்லது மிக மந்தமான வேகத்தில் நகர்ந்து கொண்டிருக்க வேண்டும்…
1905-ஆம் ஆண்டு நிறுவப்பட்ட ராமகிருஷ்ணா மிஷன் மாணவர் இல்லம் (Ramakrishna Mission Students’ Home), தேவைப்படும் மாணவர்களுக்கு இலவசக் கல்வி,…
ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலின் பங்குனித் திருவிழாவையொட்டி நடைபெறும் இசை மற்றும் நடன விழா, ஏப்ரல் 3 முதல் 16 வரை…
பிரதமர் நரேந்திர மோடி, ஏப்ரல் 4 அன்று மயிலாப்பூரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் உரையாற்றவுள்ளார். தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு அவர் மேற்கொள்ளும்…