மெரினா கடற்கரை எப்பொழுதும் பிசியாக காணப்படும் கடற்கரை ஊரடங்கு நேரத்தில் கூட மக்கள் கடற்கரையோரம் வந்து சென்றனர். தற்போது ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பிறகு மக்கள் காலை நேரத்தில் நிறைய பேர் நடைபயிற்சிக்கு வருகின்றனர். ஆனால் போலீசார் மெரினா சர்வீஸ் சாலையிலும் நடைபாதையிலும் நடைபயிற்சி செய்ய அறிவுறுத்தினர். மக்கள் கலங்கரைவிளக்கம் முதல் அண்ணாசதுக்கம் வரை நடைபயிற்சிக்கு சென்று வந்தனர். ஆனால் இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை கடற்கரையில் காற்று வாங்க மக்கள் திரண்டு வந்திருந்தனர். போலீசார் கடற்கரை சாலையில் காந்தி சிலை அருகே மட்டும் மக்கள் அமர அனுமதி அளித்தனர். ஆனால் சில மக்கள் பட்டினப்பாக்கம் லூப் சாலை வழியாக கடற்கரை வரை சென்று வந்தனர். ஆனால் இங்குள்ள மீன் மார்க்கெட் எப்பொழுதும் கூட்டம் நிறைந்து காணப்படும் நேற்றும் அதே போல காலை மற்றும் மாலையில் மக்கள் கூட்டம் நிறைந்து காணப்பட்டது.
மிகப்பெரிய அளவில் புதுப்பிக்கப்பட்ட தொல்காப்பிய பூங்கா இன்னும் பொதுமக்களுக்கு திறக்கப்படவில்லை, இருப்பினும் இந்த திட்டத்திற்கு பொறுப்பான மாநில அமைச்சர் அனைத்து…
லஸ் சர்க்கிளைச் சுற்றி தங்கள் வியாபாரத்தை நடத்தி வந்த வியாபாரிகள், மயிலாப்பூரில் உள்ள முண்டகக்கண்ணி அம்மன் கோயில் எம்ஆர்டிஎஸ் நிலையத்திற்குச்…
மாநில மதுபான வர்த்தக நிறுவனமான டாஸ்மாக்கில் ரூ.1000 கோடி மதிப்பிலான மோசடி தொடர்பான விசாரணை தொடர்பாக, ஆர்.ஏ. புரத்தில் உள்ள…
அந்தி பொழுதில் பி.எஸ். பள்ளி மண்டலத்தில் உள்ள ராமகிருஷ்ண மடம் சாலையில் நீங்கள் நடந்து சென்றால், நன்கு ஒளிரும் பசுமை…
கற்பகதாசன் என்ற புனைப்பெயரைப் பயன்படுத்தும் அமெரிக்க ஒன்றியத்தில் பயிற்சி பெற்ற ஒவ்வாமை நிபுணர் டாக்டர் ஸ்ரீதரன், தான் எழுதிய பக்தி…
மயிலாப்பூரில் உள்ள பி.எஸ். சீனியர் மேல்நிலைப் பள்ளி, உயர்நிலைப் பள்ளி தனது மாணவர்களுக்கான சமூக சேவை நிகழ்வுகளை ஏற்பாடு செய்ய…