மயிலாப்பூரில் உள்ள சில சபாக்களில் மார்கழி இசை விழாக்கள் ஆங்காங்கே தொடங்கியுள்ளது. கொஞ்ச நாட்களுக்கு முன் பாரதிய வித்யா பவனில் இசைவிழா தொடங்கப்பட்டு மாலையில் கச்சேரிகள் நடைபெற்று வருகிறது. அதே போல லஸ் அருகே உள்ள ஆர்கே சென்டரில் இசை விழா தொடங்கி கச்சேரிகள் நடைபெற்று வருகிறது.
மயிலாப்பூர் சுந்தரேஸ்வரர் தெருவில் உள்ள ஆர்.ஆர். சபாவில் கடந்த சனிக்கிழமை இசை விழா தொடங்கப்பட்டுள்ளது. இந்த சபாவில் சபா உறுப்பினர்களையும் மற்றும் இசை ரசிகர்களையும் கச்சேரியை காண்பதற்கு அரசின் கொரோனா விதிமுறைகளை பின்பற்றி அனுமதிக்கின்றனர். அதே நேரத்தில் ஆர்.ஆர். சபாவில் நடைபெறும் கச்சேரிகளை அவர்களின் சமூக வலைதள பக்கத்தில் ஒளிபரப்பு செய்து வருகின்றனர்.
மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் வியாழக்கிழமை மாலை (டிசம்பர் 4) கார்த்திகை தீப விழா தொடங்கிய நேரத்தில், லேசான,…
மந்தைவெளி ராஜா தெரு குடியிருப்பாளர்கள் நலச் சங்கம் அதன் பொங்கல் விழாவின் ஒரு பகுதியாக “ஊடக உலகம்” என்ற கருப்பொருளை…
‘பசுமை பயணம்’ என்ற கருப்பொருளில் நடத்தப்படும் மாரத்தான் சைக்கிள் ஓட்டுதல் முயற்சியின் இறுதி நிகழ்வு நவம்பர் 20, காலை 11.30…
மயிலாப்பூர், பஜார் சாலையில் உள்ள டீக்கடை உரிமையாளர் ஒருவர் தெரு நாயை அடித்துக் கொன்றதற்காக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, ஸ்டேஷன்…
ஆர்.ஏ. புரத்தில் உள்ள துர்காபாய் தேஷ்முக் பொது மருத்துவமனை நவம்பர் 18 அன்று காலை 8.30 மணி முதல் பிற்பகல்…
மயிலாப்பூர் எம்.எல்.ஏ. தா. வேலு, விளம்பரதாரர்களால் மோசமாக ஏமாற்றப்பட்டதாகக் கூறும் மயிலாப்பூர் நிதியின் வைப்பாளர்கள் தங்கள் வழக்கை முதல்வர் அல்லது…