ஆழ்வார்பேட்டையில் உள்ள சமுதாயக் கல்லூரி மாணவர்கள் இருவர் பாரா மெடிக்கல் பாடத் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர்

மழைக்காலத்தில், ஆழ்வார்பேட்டையில் உள்ள பெரு நகர சென்னை மாநகராட்சியின் சமுதாயக் கல்லூரிக்கு நல்ல சூடான செய்தி கிடைத்துள்ளது.

கடந்த ஆண்டு இங்கு வழங்கப்பட்ட தொழிற்கல்வியில் இது ஒரு மைல்கல்லை எட்டியுள்ளது.

சமீபத்தில் ஐ.எம்.ஏ நடத்திய பாராமெடிக்கல் போர்டு தேர்வுகளில், ஆழ்வார்பேட்டையில் உள்ள சமுதாயக் கல்லூரியின் இரண்டு பாராமெடிக்கல் மாணவர்கள் (டிப்ளமோ இன் லேப் டெக்னீசியன் படிப்பில்) மாநிலத் தரவரிசைகளைப் பெற்றனர் – இந்தத் தேர்வில் தமிழகம் முழுவதும் தேர்வெழுதிய 750 மாணவர்களில் அவர்கள் 2வது மற்றும் 3வது இடத்தைப் பெற்றனர்.

பி.தேன்மொழி 2வது ரேங்கையும், எஸ்.திவ்யா 3வது ரேங்கையும் பெற்றனர். இந்த சமுதாயக் கல்லூரி ‘சிறந்த செயல்திறன்’ விருதையும் பெற்றது. ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையுடன் இணைந்து இந்தப் படிப்பு நடத்தப்படுகிறது.

மாநில உள்ளாட்சித் துறை அமைச்சர் கே.என். நேரு, நவம்பர் மாத தொடக்கத்தில் மயிலாப்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கல்லூரியை நிர்வகித்து வரும் குழுவையும் மற்றும் இரு மாணவர்களையும் பாராட்டினார். நிகழ்ச்சியில் சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சைன் பேடியும் கலந்து கொண்டார்.

இக்கல்லூரிக்கு ஐஎம்ஏ வழங்கும் ‘சிறந்த கல்வி நிறுவனம் விருது’ கிடைத்திருப்பது இது மூன்றாவது முறையாகும் என ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லேப் டெக்னிசியன், சுகாதார உதவியாளர், டயாலிசிஸ் டெக்னிசியன், ரேடியோலஜி, ஆபரேஷன் தியேட்டர் டெக்னிசியன், போன்ற டிப்ளோமா படிப்புகளும் மற்றும் இரண்டு சான்றிதழ் படிப்புகளும் உள்ளன – ஸ்போக்கன் இங்கிலீஷ் மற்றும் டேலி படிப்புகளும் இங்கு நடத்தப்படுகின்றது.

admin

Recent Posts

தமிழகத் தேர்தல் குறித்த கலந்துரையாடல். ஏப்ரல் 17 மாலை. ஆர். ஏ. புரத்தில்

தமிழகத் தேர்தல்களை அடிப்படையாகக் கொண்ட இந்தக் கலந்துரையாடலின் கருப்பொருள் 'தமிழகம் 2026; இனிவரும் பாதை' என்பதாகும். இக்கலந்துரையாடல் ஏப்ரல் 17…

3 weeks ago

மின்சார இருசக்கர வாகனங்களுக்கான பேட்டரி மாற்றும் வசதி. மந்தைவெளி, எம்.கே. அம்மன் கோயில் எம்.ஆர்.டி.எஸ் ரயில் நிலையங்களில்.

மயிலாப்பூரில் உள்ள இரண்டு முக்கிய இடங்களான எம்.ஆர்.டி.எஸ்-இன் முண்டக்கக்கன்னி அம்மன் கோயில் நிலையம் மற்றும் மந்தைவெளி நிலையத்தில், மின்சார இருசக்கர…

3 weeks ago

ஸ்ரீ ரமண மகரிஷி 76வது ஆராதனை விழா. ஏப்ரல் 15

ரமண கேந்திரா அறக்கட்டளை சார்பில் ஏப்ரல் 15ம் தேதி ஸ்ரீ ரமண மகரிஷி 76வது ஆராதனை விழா, காலை 6…

3 weeks ago

இளம் பருவத்தினருக்கான எழுத்துப் பயிலரங்குகள்.

10 முதல் 13 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்காக, எழுத்தாளர் பிரவீணா சிவராம் அவர்கள் நடத்தும் இரண்டு நாள் படைப்பு எழுத்துப் பயிலரங்கு…

3 weeks ago

ஆர்.ஏ.புரத்தில் குழந்தைகளுக்கான ஒரு மன்றம். இலவச நிகழ்வுகள். இப்போதே பதிவு செய்யுங்கள்.

ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்போர் சங்கம் (RAPRA), 5 முதல் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளை வளர்த்தெடுக்கும் நோக்கில், 'RAPRA குழந்தைகள் மன்றம்'…

4 weeks ago

ஸ்ரீ வெங்கடேச பெருமாள் கோவில் பிரம்மோற்சவம். ஏப்ரல் 12 முதல் 21 வரை

மந்தைவெளி மாரி செட்டி தெருவில் உள்ள ஸ்ரீ வெங்கடேச பெருமாள் கோவிலில் பங்குனி பிரம்மோற்சவம் ஏப்ரல் 12 முதல் 21…

4 weeks ago