மயில் சிலை காணாமல் போன வழக்கு; கோவில் குளத்தில் தேடுதல் பணி.

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலில் சந்நிதிக்குள் வைக்கப்பட்டிருந்த ‘காணாமல் போன’ மயில் சிலையை தேடும் பணி மீண்டும் தொடங்கியுள்ளது.

இன்று செவ்வாய்கிழமை (மே 17) காலை கோவிலின் குளத்தில் தீயணைப்பு படையினர் மற்றும் போலீசார் குளத்தின் அடியில், கனமான பொருட்களைக் கண்டறியும் கருவியைப் பயன்படுத்தி சிலையை தேடினர்.

இங்கு சிலை போன்ற பொருட்கள் இருப்பதற்கான அறிகுறியே இல்லை.

நீண்ட காலதிற்கு முன் தொடரப்பட்ட இந்த வழக்கில், ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் உள்ள புன்னை வனநாதர் சந்நிதியில் வைக்கப்பட்டிருந்த சிலை கடந்த காலங்களில் அகற்றப்பட்டு புதியதாக நிறுவப்பட்டதாக மனுதாரர் ஒருவர் தெரிவித்துள்ளார். விசாரணைகளை விரைந்து முடிக்குமாறு சம்பந்தப்பட்ட அரசு துறை அதிகாரிகளை நீதிமன்றம் கேட்டுக் கொண்டுள்ளது.

இந்த சிலை குளத்தில் வீசப்பட்டிருக்கலாம் என நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் குறிப்பிடப்பட்டதை தொடர்ந்து, குளத்தில் சோதனை நடத்தப்பட்டது.

Verified by ExactMetrics