உள்ளூர் பள்ளிகளில் மாணவர்களுக்கு சைக்கிள்களை வழங்கிய எம்.எல்.ஏ., மற்றும் கவுன்சிலர்

உள்ளூர் பள்ளிகளில் சமீப நாட்களாக பள்ளி மாணவிகளுக்கு அரசு வழங்கும் இலவச சைக்கிள்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

ஒரு நாள் காலை, மயிலாப்பூர் எம்.எல்.ஏ, தா.வேலு, ஆர்.ஏ.புரத்தில் உள்ள ராணி மெய்யம்மை பெண்கள் பள்ளியில், பள்ளியின் தலைமையாசிரியர் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் முன்னிலையில், மாணவிகளுக்கு அடையாளமாக சைக்கிள்களை வழங்கினார்.

மற்றொரு நாள், ஆர் ஏ புரம் மாதா சர்ச் சாலையில் உள்ள செயின்ட் அந்தோணி பெண்கள் பள்ளியில் கவுன்சிலர் அமிர்தவர்ஷினி இங்கு படிக்கும் மாணவிகளுக்கு சில சைக்கிள்களை வழங்கினார்.

 

Verified by ExactMetrics