ஆழ்வார்பேட்டை பீமன்னபேட்டையிலுள்ள சென்னை மாநகராட்சி பள்ளிக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தருவதாக மயிலாப்பூர் எம்.எல்.ஏ தா.வேலு உறுதியளித்துள்ளார்.
இந்த பள்ளிக்கு உடனடியாக மூன்று முக்கிய பணிகள் செய்ய வேண்டியுள்ளது. முதலாவதாக மாணவர்களுக்கு தேவையான கழிப்பறை வசதி இல்லை. இரண்டாவது பழுதடைந்துள்ள மதிய உணவு சமைக்கும் கட்டிடத்தை சரி செய்தல். மூன்றாவது மாணவர்களுக்கு போதுமான குடிநீர் வசதி ஏற்படுத்துதல். இது சம்பந்தமாக ஏற்கனெவே மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்து சென்ற போதிலும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் இல்லை. இந்நிலையில் தற்போது மயிலாப்பூர் எம்.எல் ஏ தா.வேலு அரசிடம் பேசி பணிகளை உடனடியாக துவக்க ஏற்பாடு செய்வதாக உறுதியளித்துள்ளார்.
பழங்கால தமிழ் திரைப்பட இசையை ரசிப்பவரா நீங்கள்? அப்படியானால் இந்தக் கச்சேரி உங்களுக்கானது. கே.ஆர்.எஸ் ஆர்கெஸ்ட்ரா, ‘தமிழ் மெலடீஸ்’ என்ற…
மியூசிக் கம்போசர் முத்துசுவாமி தீட்சிதரின் 249வது ஜெயந்தி உற்சவத்தின் வீணாவாதினியின் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, ‘சுபகர காவேரி தீரா’ (காவேரி…
தமிழ்நாட்டின் பழமையான கோவில்கள்; இந்த வார இறுதியில் தத்வலோகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட டாக்டர் சித்ரா மாதவன் (வரலாற்று ஆய்வாளர், ஆசிரியர்)…
ஆர்.ஏ புரத்தில் உள்ள SNEHA, தற்கொலை தடுப்பு சமூக அமைப்பானது, ஏப்ரல் 25 அன்று தற்கொலைக்குப் பிறகு ஆதரவு (SAS)…
சாகித்ய அகாடமி வெற்றியாளர் இமயத்தின் தமிழ் சிறுகதைகளை தழுவி பிரசன்னா ராமசாமி இயக்கிய நாடக அரங்கேற்றம் ஏப்ரல் 27 அன்று…
லஸ் மண்டலத்தில் பணிபுரியும் சென்னை மெட்ரோவின் ஒப்பந்ததாரர் திருமயிலை எம்ஆர்டிஎஸ் ரயில் நிலையம் எதிரே உள்ள ராமகிருஷ்ண மடம் சாலையில்…