மகப்பேறுக்கு பிரபலம் வாய்ந்த ஆர்.ஏ.புரம் டாக்டர் துர்காபாய் தேஷ்முக் மருத்துவமனையில் ஏழை மக்களுக்கு பொது மருத்துவமும் நீண்ட காலமாக இங்கு பார்க்கப்படுகிறது. கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் இங்கு பிரசவத்திற்கு தினமும் சுமார் எண்பது நபர்கள் வரை வருவர். ஆனால் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா காரணமாக தினமும் சுமார் எட்டு முதல் ஒன்பது நபர்களே மருத்துவம் பார்க்க வருவதாக தெரிவிக்கின்றனர். இங்கு இரண்டு வருடங்களுக்கு முன் கர்ப்பிணி பெண்களுக்கு நவீனமயமாக்கப்பட்ட மகப்பேறு வார்டுகள் ஏற்படுத்தபட்டது.
கொரோனா காரணமாக இதன் திறப்பு விழாவும் தள்ளிவைக்கப்பட்டது. ஆனால் தற்போது நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளதால் மருத்துவமனைக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இவ்வளவு வசதிகள் கொண்ட பிரபலமான மருத்துவமனை தற்போது கொரோனா காரணமாக பொதுமக்கள் பயன்படுத்தாத நிலையில் உள்ளதாக இங்கு பணியாற்றும் ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.
மயிலாப்பூரில் வருடந்தோறும் ஜனவரி தொடக்கத்தில் நடைபெறும் சுந்தரம் பைனான்ஸின் மயிலாப்பூர் விழா ஜனவரி 8 ம் தேதி காலை 7…
மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் வியாழக்கிழமை மாலை (டிசம்பர் 4) கார்த்திகை தீப விழா தொடங்கிய நேரத்தில், லேசான,…
மந்தைவெளி ராஜா தெரு குடியிருப்பாளர்கள் நலச் சங்கம் அதன் பொங்கல் விழாவின் ஒரு பகுதியாக “ஊடக உலகம்” என்ற கருப்பொருளை…
‘பசுமை பயணம்’ என்ற கருப்பொருளில் நடத்தப்படும் மாரத்தான் சைக்கிள் ஓட்டுதல் முயற்சியின் இறுதி நிகழ்வு நவம்பர் 20, காலை 11.30…
மயிலாப்பூர், பஜார் சாலையில் உள்ள டீக்கடை உரிமையாளர் ஒருவர் தெரு நாயை அடித்துக் கொன்றதற்காக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, ஸ்டேஷன்…
ஆர்.ஏ. புரத்தில் உள்ள துர்காபாய் தேஷ்முக் பொது மருத்துவமனை நவம்பர் 18 அன்று காலை 8.30 மணி முதல் பிற்பகல்…